இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, September 11, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 14

அனந்தன் : இந்தப் போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

காவி உடைக்காரர் (எந்தவித சலனமும் இல்லாமல்): போரில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

அனந்தன் : அந்த மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

காவி : அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அனந்தன் : என்னது எல்லாருக்கும் தெரியுமா..? தெரிந்துமா அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

காவி : ஆமாம். அவர்கள்தான் தங்கள் எதிரிகள் அனைவரையும் தமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும்படி திசை திருப்பிவிடுவதில் கெட்டிக்காரர்களாயிற்றே.

அனந்தன் : யாரைச் சொல்கிறீர்கள்…

காவி : வேறு யாராக இருக்க முடியும். உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான்.

அனந்தன் : இலங்கையில் நடக்கும் சண்டை சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்தானே நடக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

காவி : குழந்தை போலவே கேட்கிறீர்களே..? இலங்கையில் நடக்கும் பிரச்னையின் மூல வேர் எங்கு இருக்கிறது தெரியுமா… கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் சிங்கள கடற்கரையில் தங்கள் கூடாரத்துக்காக என்றைக்குக் குழி தோண்ட ஆரம்பித்ததோ அன்றே இலங்கையின் அழிவுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுவிட்டது. 1500களில் வந்திறங்கிய அந்த கிறிஸ்தவக் கூட்டம் இலங்கை என்பது ஒரு தீவு… இரண்டு தேசங்கள் என்று பிரிவினையின் விதைகளை சரித்திரத்தின் சதுப்பு நிலத்தில் ஆழமாக ஊன்றினார்கள். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் அந்தச் செடியின் வேருக்கு நீர் ஊற்றி வளர்த்தார்கள். கிறிஸ்தவர்கள் அன்று ஊன்றிய பிரிவினை விதைதான் இன்று மரமாக வளர்ந்து கிளைகளில் எல்லாம் மண்டையோடுகள் தொங்க, இலைகளில் இருந்தெல்லாம் ரத்தத்துளிகள் சொட்ட இலங்கை முழுவதுக்குமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

டிவைட் அண்ட் ரூல் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் சிறுபான்மையாக இருந்த தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள். காலனி நாடுகளை விட்டுச் சென்ற பிறகு, டிவைட் அண்ட் டெஸ்ட்ராய் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதற்குத் தோதாக நாட்டை விட்டுச் செல்லும்போது அழகாக ஆட்சியை சிங்களக் கிறிஸ்தவர்களின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்றாக இருந்த இந்தியாவை பிரித்து ரத்தக் களறி ஆக்கினார்கள். இந்திய பிரிவினையில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் பேர் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சயனைட் போல் உடனடி விளைவு. இலங்கைக்கு மென் விஷம். 30 வருடங்களில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை ஐரோப்பிய கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.

அனந்தன் : கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னாலும் அங்கு தமிழர் - சிங்களர் சண்டை நடந்துதானே வந்திருக்கிறது. அல்லது அவர்கள் போன பிறகாவது அதைத் தொடராமலிருந்திருக்கலாமே..?

காவி : உண்மைதான். இந்த உலகில் மனித இனம் பழங்குடிகளாக, நாடோடிகளாக இருந்த காலத்தில் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துதான் வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படையில், தேசத்தின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபோதும் தமக்குள் சண்டையிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட ரோமன் கத்தோலிக்கர்கள் பிராட்டஸ்டண்ட்கள் என்று வெட்டு குத்துகள் சரமாரியாக நடந்துதான் வந்திருக்கிறது. ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என எல்லா தேசங்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தன. இன்று அந்த நாடுகளில் எல்லாம் அமைதி திரும்பி சுபிட்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் மட்டும் கடந்த காலச் சண்டைகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஏன் என்று ஒருவர் சிறிது யோசித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்.

அனந்தன் : பிற மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் அடிப்படையில் சண்டையை விரும்புபவர்கள்.

காவி : அதுதான் இல்லை. எல்லாருமே கடந்த காலக் காயங்களை மறந்துவிட்டு வாழத்தான் விரும்புகிறார்கள். ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதியில் இருக்கும் இடைவெளிகளைப் பெரிதாக்கி, காயங்களை ஆறவிடாமல் கிறிஸ்தவர்கள் கீறிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்காவில் அதை மற்ற மதத்தினர் செய்வதில்லை. தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்த ஓநாய்கள் ஒன்று கூடிவிட்டன. உலகில் இருக்கும் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் என சாது மிருகங்கள் அனைத்தையும் வேட்டையாடக் கிளம்பிவிட்டன. இன்று உலகின் எந்தவொரு நாட்டையும் எடுத்துப் பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா..? அங்கு அமைதி நிலவுகிறதா..? அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். அவர்களுடைய அஜெண்டா மிகவும் எளிமையானது. உலகில் இருக்கும் அனைவரும் கிறிஸ்தவராக மாறி ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு துணைபோக வேண்டும். இல்லையென்றால் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துபோகும்படிச் செய்வார்கள். If your are not with us. your are against us.

சிறுபான்மையினரிடம் சுய உரிமைப் போராட்டத்தை நடத்தச் சொல்லி தூண்டிவிடுவார்கள். பெரும்பான்மையிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும்படி அறிவுருத்துவார்கள். இரு தரப்புக்கும் அதி நவீன ஆயுதங்களை அணி அணியாக அனுப்பி வைப்பார்கள். இதுதான் அவர்களுடைய அயலுறவுக் கொள்கை. உலகின் எந்த வளம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைச் சுரண்டுவது… தான் தயாரிக்கும் ஆயுதங்களுக்கான சந்தையைப் பலப்படுத்த உள்நாட்டுக் கலவரங்களையும் அண்டைநாடுகளுடன் சண்டைகளையும் தூண்டுவது, தீவிரவாத, பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வது, கிறிஸ்தவத்தைத் தவிர பிற மதங்களைப் பூண்டோடு அழிப்பது என்ற தன் செயல் திட்டத்தை வெகு சாமர்த்தியமாக அது நிறைவேற்றிக் கொண்டுவருகிறது.

அனந்தன் : ஆனால், இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாக புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே.

காவி : அங்குதான் நீங்கள் மட்டுமல்ல. உலகமே ஏமாந்துவிடுகிறது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான். சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதங்கள் யாரிடம் இருந்து கிடைத்தன. இதே கிறிஸ்தவ தேசங்களிடமிருந்துதானே. அதை வாங்குவதற்கான பணம் யாரால் தரப்பட்டது. சிங்கள அரசுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு, தீவிரவாதத்தை ஒடுக்க என்ற பெயரிலும் விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர்ந்த அகதிகள் மூலமாகவும் பணம் தரப்பட்டது. ஆக, அகதிகளுக்கு உதவுகிறோம்; வளரும் நாடுகள் வளர உதவுகிறோம் என்ற பெயரில் நல்ல பெயரையும் சம்பாதித்தாயிற்று. தங்கள் ஆயுத விற்பனைக்கான சந்தையையும் உறுதிப்படுத்தியாயிற்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற மதங்களை அழிக்கவும் செய்தாயிற்று. கிறிஸ்தவத்தை வேரூன்றவும் வழி செய்தாயிற்று.

வரலாற்றைத் திரிப்பதன் மூலம் இரு பிரிவினரிடையே வேற்றுமையை வளர்த்து அவர்களை எதிரிகளாக்குவது. இருவருக்குமே ஆயுதங்களை வழங்குவது. இருவரையுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைப்பது. மிகவும் அருமையான திரைக்கதை. இலங்கையில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா குறிவைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, செப்டம்பர் 11க்குப் பிறகு, இஸ்லாமியரின் முதல் எதிரியாக நாம் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என்று தீர்மானித்து இந்தியா பக்கம் நெருங்குவதுபோல் பாவலா காட்ட ஆரம்பித்திருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் இனி மேல் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைத் தாக்க ஆரம்பிப்பார்கள். இந்தியாவும் பதிலுக்குத் தாக்கும். அமெரிக்கா இரண்டு பேருக்கும் பணமும் ஆயுதமும் கொடுத்து பகைமை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளும். இதுதான் அவர்களுடைய எளிய செயல் திட்டம்.

அமெரிக்கா கடைசியாக தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும். கடைசிக் கட்டப் போர் குறித்த அந்த அறிக்கையில் தமிழர்களுக்கு அடைகலம் தந்தது எல்லாமே கிறிஸ்தவ தேவாலயங்கள்தான். பிற மத கோயில்கள் மசூதிகளில் மக்கள் தங்கியிருந்தால் அது பொதுவாக வழிபாட்டுத்தலம் என்று மொட்டையாகக் குறிப்பிடப்படும். கடைசி கட்டத்தில் அங்கிருந்து உதவியவர்கள் எல்லாமே பாதிரியார்கள்தான். இதற்குப் பின்னாலும் தெளிவான சதியும் மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. நீங்கள் கோவில்களில் தஞ்சம் புகுந்தால் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும். மசூதிக்குள் ஒளிந்தால் மசூதி தகர்க்கப்படும். தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். பாதிரியார்களிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே ரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா போரை நடத்தியது யார் என்பது..?

அனந்தன் : ஆனால், சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் நடத்தியது அவர்கள் இல்லையே. போரை நேரடியாக முன்னெடுத்தது இவர்கள்தானே.

காவி : அது முழு உண்மையில்லை. இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, ஜுனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சாலமன் பண்டாரநாயகா, இன்றைய ராஜபக்சே வரை யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்த வேஷம் போட்டுக் கொண்டவர்கள். அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தப் போரை நடத்துகிறோம் என்று அவர்கள் அனைவருமே சொன்னார்கள். உலகில் பொதுவாக போரை நிறுத்தினால்தான் அமைதி திரும்பும். ஆனால், இங்கோ போர் நடத்தினால்தான் அமைதி திரும்புமாம். வேதாகமத்தில் எந்த புனித தூதர் இதைச் சொல்லியிருக்கிறாரோ..?

விடுதலைப் புலிகள் மட்டும் விதிவிலக்கா என்ன… அவர்களுடைய ஆஸ்தான ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர். அவர் என்ன செய்தார். அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தார். இவ்வளவு ஏன்…? பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்..? தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்… சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன.

பிரபாகரனை ஆரம்பத்திலிருந்தே மூளைச் சலவை செய்தது கிறிஸ்தவ திருச்சபைதான். 1970களில் அவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்த போதிலிருந்தே அவருடைய காட்ஃபாதராக இருந்தது கிறிஸ்தவ பாதிரிகள்தான். தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால், அவரைப் பின்னால் இருந்து இயக்கிய கிறிஸ்தவ சக்திகளுக்கு வேறு கணக்குகள் இருந்தன. பிரபாகரன் பாவம் வெறும் அம்புதான். வில்லும் வில்லைப் பிடித்திருக்கும் கைகளும் வேறு நண்பரே…
(தொடரும்)

No comments:

Post a Comment