இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, September 30, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 17

விடுதலைப் புலிகள் தரப்பு (அருகில் இருக்கும் தலைவரைப் பார்த்து) : மார்ச் 8 க்கு என்ன முக்கியத்துவம் தெரியுமா..?



அருகில் இருப்பவர் : தெரியும். சர்வதேச மகளிர் தினம்.

விடுதலைப் புலி : பிப் 14 க்கு என்ன விசேஷம் தெரியுமா..?

அருகில் இருப்பவர் : காதலர் தினம்.

விடுதலைப் புலி : இன்னொருவரைப் பார்த்து : ஜனவரி 1

இரண்டாமவர் : ஆங்கிலப் புத்தாண்டு தினம்.

விடுதலைப் புலி : ஜூலை 24..?

பதில் தெரியாமல் முழிக்கிறார்.

விடுதலைப் புலி : ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட தினம். லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்த தினம். கறுப்பு ஜூலை...

விடுதலைப் புலி : மே 31..?

உதட்டைப் பிதுக்குகிறார்கள்.

விடுதலைப் புலி : யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். தமிழ் இனத்தின் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்ட, இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்க முடியாத அறிவுச் செல்வம் சிங்கள நாய்களால் எரியூட்டப்பட்ட நாள்.

செப் 26..?

பதில் தெரியாமல் முழிக்கிறார்.

விடுதலைப் புலி : செப் 15

பதில் தெரியாமல் முழிக்கிறார்.

விடுதலைப் புலி : மாவீரன் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள்... செப் 26 அவன் உயிர் துறந்த தினம். அவன் உயிர் துறந்தபோது நான் அருகில் இருந்தேன். உண்ணாவிரதமிருந்து உயிர் துறப்பது என்பது எவ்வளவு கொடுமை தெரியுமா... காலையில் வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏர் கூலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மாலையில் பழரசம் குடித்து முடிக்கும் சங்கதி அல்ல... நீச்சல் தெரிந்தவனால் நீரில் மூழ்கி இறக்க முடியாது... கடைசி நேர மூச்சுமுட்டலைத் தாங்க முடியாமல் எப்படியும் நீரை விட்டு வெளியேறிவிடுவான் என்று சொல்வார்கள். உணவை மறுத்து உயிரை விடுவதும் அப்படியான ஒரு மரண வேதனையைத்தான் தரும்.

உயிரைப் போக்கிக் கொள்வதில், இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது பட்டினி கிடந்து உயிர் துறப்பதுதான். சயனைட் தின்று இறப்பதற்கு பெரிய வீரம் தேவையில்லை. கழுத்தில் இருக்கும் குப்பியைக் குனிந்து கடித்தால் போதும். அடுத்த நொடியில் மரணம். வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு தாக்கி இறப்பதிலும் அதிக வலி கிடையாது. ஒரு ஸ்விட்சை இப்படி அழுத்தினால் போதும் அடுத்த விநாடியில் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால், பட்டினி கிடந்து இறப்பது அப்படியல்ல... முதலில் கண்கள் இருட்டிக் கொண்டுவரும். கால்கள் தளர்ச்சியுறும். கைகள் தளர்ச்சியுறும். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஓராயிரம் கற்களை ஏற்றி வைப்பதுபோல் ஒரு பாரம் அழுத்தும். கழுத்தை நெரிப்பதுபோல் கண்கள் பிதுங்கும். ஒரு துளி நீருக்காக... ஒற்றை பருக்கைக்காக உடல் ஏங்கும்.

நான் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தேன். 11 உதயமும் 12 அஸ்தமனங்களும் வந்து வந்து போயின. திலீபன் உயிருக்குப் போராடினான். இல்லை இல்லை... சுதந்திரத்துக்காகப் போராடினான். இந்த உலகில் காடு அழித்து கழனியாக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் செழித்துக் கிடந்தன உணவு தானியங்கள், காய்கள், கனிகள்... ஆனால், திலீபனின் ஒற்றை நேர உணவுக்கான தானியம் மட்டும் இந்த உலகில் இருந்திருக்கவில்லை. அவன் சுதந்திர தேசத்தில் விளைந்த ஒற்றை நெல் மணியைக் கேட்டான். பெரும்பான்மையால் சிறுபான்மை அழித்து ஒழிக்கப்படாத நாட்டில் ஓடும் நதியில் இருந்து ஒரு துளி நீர் கேட்டான்... நான் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தேன். சாகும் தறுவாயில் அவனது கண்களில் ஒரு ஒளி. பிரகாசமான ஒளி. ஈழம் மலரப் போவதை அவன் முன் கூட்டியே கண்டான் போலிருக்கிறது. செப் 15-ல் ஆரம்பிக்கப்பட்ட அவனது உண்ணாவிரதம் முடிந்த நாள் செப் 26.

உங்கள் நாட்காட்டிகள் வேறு... எங்கள் நாட்காட்டிகள் வேறு... நீங்கள் வாழும் உலகம் வேறு. நாங்கள் வாழும் உலகம் வேறு. உங்கள் உலகில் இறக்கும் தந்தையின் உடலுக்கு மகன்கள் எரியூட்டுவார்கள். எங்கள் உலகில் கொல்லப்படும் மகன்களுக்கு தந்தைகள் எரியூட்டுவார்கள். குடும்பத்தில் ஒரு நபர் அகால மரணமடைந்தாலே ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அங்கே ஒரு இனமே அகால மரணமடைந்து கொண்டிருக்கிறது... ஈழத்தில் யாரும் மரிப்பதில்லை. கொல்லப்படுகிறார்கள்.

உங்கள் உலகில் ஒருவர் நிமிர்ந்து பார்த்தால் வானில் நிலவு தெரியும்... நட்சத்திரங்கள் தெரியும்... குளிர்ந்த காற்று எங்கோ கூவும் குயிலின் ஓசையைச் சுமந்துவரும். எங்கோ மலரும் மலரின் வாசம் உங்கள் நாசியை நிரப்பும். எங்கள் வானில் நிமிர்ந்து பார்த்தால் ஏவுகணைகள் சீறிப் பாய்வது தெரியும். ஷெல்கள் வேகமாக பூமியை நோக்கி வருவது தெரியும். நள்ளிரவில் குளிர் காற்று எங்கள் பூமியில் மரண ஓலத்தை சுமந்தபடி அலையும். அநாதையாகக் கிடந்தழுகும் பிணத்தின் வாடை அல்லது வெடித்துச் சிதறிய உடலின் பச்சை ரத்த வாடை உங்கள் நாசியை வருடிச் செல்லும். உங்கள் உலகம் வேறு... எங்கள் உலகம் வேறு. உங்கள் வானம் வேறு எங்கள் வானம் வேறு.

சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் நாங்கள். மானமாக உயிர் வாழும் உரிமையைக் கேட்டதால் படுகொலை செய்யப்பட்டவர்கள் நாங்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் விளையாட பொம்மைத் துவக்குகளைத் தருவதில்லை. எங்கள் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்த சிங்கள அமைச்சன் என்ன சொன்னான் தெரியுமா... நாங்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை. எதிர்காலத் தீவிரவாதிகளைத்தான் கொன்றோம்.

கொதிக்கும் தாரில் உயிருடன் போடப்பட்ட குழந்தைகள் விறைத்துச் சாவதை நீங்கள் பார்த்ததுண்டா..? இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் வாய்வைத்து பால் குடிக்க முயலும் குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? பிறந்த ஓரிரு மாதங்களில் உடம்பில் ஊடுருவிய ஷெல் துண்டுகளை எடுப்பதற்காக ஆப்பரேஷன் செய்யப்பட்ட குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? களங்கமற்ற சிரிப்புடன் அதன் உடம்பில் மாட்டப்பட்ட குளுகோஸ் டியூபை பிடித்து விளையாடிய பிஞ்சுக் கரங்களை நீங்கள் பார்த்ததுண்டா..?

நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடைய புனித நூல்தான் சொல்கிறது சிங்களர்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று. இந்தியாவின் கலிங்க தேசத்தில் தவறுகள் செய்ததற்காக தண்டிக்கப்பட்டு நாடுகட்டத்தப்பட்டது ஒரு கூட்டம். அதில் அதிர்ஷ்டவசமாகக் கரையொதுங்கியவர்கள்தான் இலங்கையின் முதல் சிங்களக் குடியேற்றத்தினர். ஆனால், அவர்கள் அங்கு கரையொதுங்கிய காலத்திலேயே பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இலங்கையில் 1956-ல் அதை நினைவுகூரும்விதமாக ஒரு தபால் தலைகூட வெளியிடப்பட்டது. முதன் முதலாகக் கால் பதிக்கும் இளவரசனுக்கு கை கொடுக்கும் வேடர் மகள்! பின்புலத்தில் அவர்கள் ஓட்டி வந்த படகு. சோழர்கள் காலத்தில் வந்த தமிழர்கள், ஆங்கிலேயர் காலத்தில் வந்த தமிழர்களுக்கும் அராபிய தமிழர்களுக்கும் முன்பாகவே அங்கு இருந்திருக்கின்றனர் ஆதி தமிழர்கள்.

ஆளற்ற தீவு யாருக்கு சொந்தம் என்றால் முதலில் காலடி எடுத்து வைத்தவனுக்குத்தான் என்பது உலக நியதி. ஐரோப்பியர்களின் வருகைக் காலம் வரை தமிழ் சாம்ராஜ்ஜியம் தனித்து, தலை நிமிர்ந்தே இருந்து வந்திருக்கிறது. ஈழப் புரவிகள் இலங்கைத் தேரை ஒருபோதும் இழுத்ததில்லை. ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு தேசங்களை ஒன்றாக்கினார்கள். அதுதான் உண்மை. இந்தியாவைத் துண்டாக்கி ரத்த ஆறைப் பெருக வைத்தான். இலங்கையை ஒன்றாக்கி பிணக்காடாக்கிவிட்டிருக்கிறான். இலங்கையின் இறையாண்மை குறித்துப் பக்கம் பக்கமாக உலகம் பேசுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தின் இறையாண்மையை அழித்துத்தான் அது உருவாக்கப்பட்டதென்ற உண்மையை யாரும் சொல்வதேயில்லை.

தமிழர்கள் இலங்கையின் மக்கள் தொகையில் 22 சதவிகிதம்தான் இருக்கிறார்களாம். அரசு பணிகளில் அதற்கும் மேல் இருக்கிறார்களாம். ஈழத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 95%க்கும் மேலானவர்களாயிற்றே அவர்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் அவர்களுடைய பங்கு வெறும் 30%தான் இருக்கும். தென்னிந்தியா முழுவதையும் ஒரு தனி தேசமாக அறிவித்துவிட்டு தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தால் அது நியாயமாக இருக்குமா..? தேசத்தின் எல்லையை யார், எப்படி வரையறுப்பது..? 50%க்கும் மேலாக உயர் பதவிகளில் இருந்தனராம். அது கண்களை உறுத்திவிட்டிருக்கிறது. நாங்கள் உயர் பதவிகளில் இருந்தது என்பது எங்கள் திறமையின் அடிப்படையிலான ஒன்றுதான். எந்தத் தந்திரத்தின் மூலமும் நாங்கள் முன்னணிப் பதவியை எட்டவில்லை. ஒருமுகப்பட்ட, கடின உழைப்பு. அதுவே எங்கள் வெற்றிக்கு வழி வகுத்தது. ஆக, சரித்திர நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி ஈழத் தமிழனுக்கு மானமுள்ள வாழ்க்கை வாழ தனித்துப் போவதே ஒரே தீர்வாக இருந்திருக்கிறது.

ஏதோ புலிகள் தனி நாடு கேட்டதால்தான் பிரச்னை இந்த அளவுக்கு மோசமானதாகச் சொல்கிறார்கள் பலர்.

சுதந்திரம் கிடைத்ததும் சிங்கள அரசின் அராஜகங்கள் படிப்படியாக அதிகரித்தன. சுதந்திரம் பெற்றதும் முதன் முதலாகக் கையெழுத்திடப்பட்ட அரசு உத்தரவு எது தெரியுமா..? இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடு கடத்தும் உத்தரவுதான்.

10 லட்சம் மலையகத் தமிழர்கள் ஒரு இனிய அதிகாலையில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இரவில் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு தன் அறையில் படுத்த ஒருவர் எழுந்து பார்க்கும்போது வெட்டவெளியில் அம்மணமாக நிற்பது போன்ற அதிர்ச்சி. ஒரு நாட்டில் வேறு நாட்டவர் பத்திருவது வருடங்கள் வாழ்ந்துவிட்டால் அந்த நாட்டின் குடிமகனாக முடியும் என்று சட்டங்கள் சொல்கின்றன. நூறு வருடங்களுக்கு மேல் மூன்று நான்கு தலைமுறைகள் வாழ்ந்துவிட்டிருந்தனர் இந்திய வம்சாவளியினர். ஒருவர் இருவர் அல்ல... 10 லட்சம் பேர். அவர்கள் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டவர்கள். காடுகளை அழித்துக் கழனிகளாக்கியவர்கள். தேயிலை உற்பத்தியில் இன்று இலங்கை உலகில் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு முதலும் கடைசியுமான காரணம் இந்த மலையகத்தமிழர்கள் சிந்திய ரத்தமும் வேர்வையும்தான். மரம்தான் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டதே... இனி வேர் எதற்கு என வெட்டினர் மூடர்கள்.

மெள்ள மெள்ள வெறுப்பின் அணையில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்களில் விவசாய வளர்ச்சி பணி என்ற பெயரில் சிங்களர்களைக் குடியேறவைத்தனர். தமிழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சிங்களர்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. அவர்கள் வந்து பவுத்த விகாரைகளைக் கட்டினர். தமிழர்களின் கோயில்களின் கோபுரங்களில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த புறாக்கள் பவுத்த விகாரைகளின் வெண்கல மணிச் சத்தத்தைக் கேட்டு அஞ்சி நடுங்கத் தொடங்கின. அந்த வெண்கல மணிகளின் சத்தம் கேட்கும் பகுதிகள் அனைத்தும் சிங்களர்களுக்கு சொந்தமானது என கொக்கரிக்க ஆரம்பித்தனர். தாயைப் பிரிந்த கோழிக் குஞ்சின் மீது கழுகின் நிழல் கவிழ்வதுபோல் பவுத்த விகாரைகளின் வெண்கல மணி நாதம் இலங்கை முழுவதும் கவிழத் தொடங்கியது.

ஆட்சி மொழியாக இனி சிங்களம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிடையே தமிழர்களை அடக்குவதில் யாருக்கு முதலிடம் என போட்டி நடக்கத் தொடங்கியது. அரசாங்க அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றின் பிரமாண்டக் கதவுகள் தமிழர்களின் கண் முன்னே தாமாக மூடிக் கொண்டன. இலங்கைத் தமிழ் சமூகம் உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகப் போர், பேச்சுவார்த்தை என அற வழிகளில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தது. சிங்கள அரசு போராட்டக்காரர்களைக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்டபங்களும் ஸ்தூபிகளும் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்தினர் தமிழர்கள். சிங்கள அரசு அந்த நினைவிடங்களையும் தரைமட்டமாக்கினர். அப்போதுதான் தமிழர்களுக்குப் புரிந்தது கொல்லப்படுபவர்களுக்கு நினைவிடங்கள் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அராஜகவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் சொன்னால்தான் புரியும் என்று. ஈழத் தமிழனின் கையில் ஆயுதம் வந்தது அப்படித்தான். தமிழனுடைய முதல் துப்பாக்கியில் இருந்து முதல் குண்டு பாய்வதற்கு முன்னால் சிங்களத் துப்பாக்கியில் இருந்து ஓராயிரம் குண்டுகள் தமிழ் சமூகத்தின் மீது பாய்ந்துவிட்டிருந்தது. தமிழர்கள், தாக்குவதற்காக ஆயுதம் ஏந்தவில்லை... தற்காத்துக் கொள்ளவே ஆயுதத்தை ஏந்தினர். அதிலும் கூட சிங்கள ராணுவம், அராஜக அரசியல்வாதிகள், உளவாளிகள் ஆகியோரையே புலிகள் கொன்று குவித்தனர். தமிழர்களை அடித்துத் துரத்திவிட்டு அந்தப் பகுதிகளில் குடியேறிய சிங்களர்களையும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களையும் தான் கொன்று வந்திருக்கின்றனர். நூறு வசவுகளைப் பொறுத்துக் கொண்டு அதன் பிறகே சக்ராயுதத்தை பிரயோகித்த கிருஷ்ணனைப் போல் புலிகள் ஒருவரைக் கொல்வதற்கு முன் அவருடைய பல்வேறு துரோகங்களை இன்னல்களைப் பொறுத்துக்கொண்டே வந்துள்ளனர். தங்களால் கொல்லப்படவேண்டியவர் எவரோ அவரை மட்டுமே கொல்லும் அவதாரமாகவே புலிகள் இருந்துவந்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த பட்டமோ பயங்கரவாதிகள்!

உங்கள் வீடுகளில் அழைப்பு மணி ஒலித்தால் அதிகாலையாக இருந்தால் பால்காரர் பால் போட்டதைத் தெரிவிக்க என்று நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்வீர்கள். அல்லது பேப்பர்காரர் தினசரியை கொண்டுவந்திருப்பார் என்று சோம்பல் முறித்தபடியே எழுதுவந்து கதவைத் திறப்பீர்கள். பகல் நேரத்தில் என்றால் தபால்காரர் என்று விரைந்துவந்து கதவைத் திறப்பீர்கள். ஒருவேளை அகாலத்தில் இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி அது ஒலித்தால் வேண்டுமானால் நீங்கள் லேசாக கலவரப்படக்கூடும்... ஆனால், எங்கள் வீடுகளில் ஒலிக்கும் அழைப்பு மணிகள் அப்படிப்படவை அல்ல. எந்த நேரத்தில் ஒலித்தாலும் எங்கள் ஈரக்குலையை நடுங்க வைக்கும். வாசலில் வந்து நிற்பது எங்கள் வீட்டு ஆண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்ல வந்திருக்கும் சிங்களக் காவலராக இருக்கலாம். எங்களை போட்டது போட்டபடி வீட்டை விட்டுவிட்டு ஓடச் சொல்லும் சிங்களக் காடைகளாக இருக்கலாம். பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துக் கொல்ல வந்திருக்கும் கலவரக் கும்பலாக இருக்கலாம்...

அழைப்பு மணிதான் என்றில்லை. வீட்டை நெருங்கும் வாகனங்களின் ஓசை... மாடிப்படிகளில் ஏறிவரும் காலடி ஓசை... ஏன் கோவில்களில் ஒலிக்கும் மணியோசைகூட எங்களைக் குலை நடுங்க வைக்கும்.

தமிழகத்தில் இருந்து உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் எங்கள் வீடுகளுக்கு வரும்போது அவ்வப்போது கேட்கும் துவக்குச் சத்தத்தையும் வெடி குண்டுச் சத்தத்தையும் கேட்டு உங்கள் குழந்தைகள் தீபாவளி நெருங்குகிறது என்றெண்ணி துள்ளிக் குதிக்கும். தமிழகத்துக்கு நாங்கள் வரும்போது உங்கள் வானில் பறந்த விமானங்களின் ஒலி கேட்டு கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்ட எங்கள் குழந்தைகளைப் பார்த்து உங்கள் குழந்தைகள் கைகொட்டிச் சிரிக்கும். உங்கள் குழந்தைகள் வேறு... எங்கள் குழந்தைகள் வேறு...

உங்கள் குழந்தைகள் கிட்டிபுள் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். எல்லைக் கோட்டை தொடுபவன் வெல்வான். எங்கள் நாட்டிலும் விளையாட்டுகள் நடக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் வானில் விமானம் வட்டமிட்டதும் யார் முதலில் சென்று பதுங்கு குழிக்குள் இறங்குகிறார்கள் என்று. எங்கள் உலகத்தில் குழந்தை விளையாட்டுகளில் கூட தோற்பவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடையாது.

ஒரே வானத்தின் கீழ் வசித்தாலும் உங்கள் சூரியனும் எங்கள் சூரியனும் ஒன்றல்ல... உங்கள் கடல்கள் சாதுவானவை... மீன் பிடிக்கச் செல்பவர்களை மீனுடன் திருப்பி அனுப்பிவைத்துவிடும். எங்கள் கடல்களைப் போல் காணாமல் போகச் செய்துவிடாது யாரையும். எங்கள் நாட்டில் கொல்லப்படுபவர்களுக்கு சற்றும் குறையாதது காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கையும். ஒருவர் காணாமல் போய்விடுகிறார் என்றால் என்னதான் செய்யமுடியும் அவரை நம்பி இருக்கும் ஒரு குடும்பம். வருவான் வருவான் என வழி மேல் விழிவைத்துக் காத்திருப்பதா..? ஒருவேளை இறந்திருந்தால் மேலுலகில் அவர் ஆத்மா ஒரு வாய் சோறு கிடைக்காமல் கதி கெட்டு அலைவயுமே என்று பதறி காணாமல் போனவருக்கு நீத்தார் சடங்கு செய்வதா..? ஒருவேளை உயிருடன் இருந்துவிட்டால்… உயிருடன் இருப்பவனுக்கு பிண்டம் வைப்பதா..? அய்யகோ…

கற்பழிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு, சுடப்பட்டு, வெட்டப்பட்டு கண் முன்னே கொல்லப்படுவர்களின் பெற்றோர்கள் பாக்கியவான்கள். அந்தத் திசையில் இனி அடியெடுத்து வைக்க முடியாது என முடிவு செய்து கொண்டு திரும்பிவிடலாம். ஆனால், காணாமல் போகிறவர்களின் பெற்றோர்களின் நிலை இருக்கிறதே அது இந்த உலகில் எதிரிகளுக்குகூட நேரக்கூடாது ஆண்டவனே... எங்கெல்லாம் அடையாளம் தெரியாமல் அழுகும் சடலம் கிடக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் ஒடிச் சென்று பார்க்க வேண்டிவரும். மருத்துவமனைக்கு ஒவ்வொரு முறை குற்றுயிரும் குலையுயிருமாக ஒவ்வொரு உயிர் கொண்டுவரப்படும்போதும் அது தன் மகனாக இருக்குமோ என தவிக்கவைக்கும். செய்தித் தாள்களில் அச்சிடப்படும் போராளிகளின் சிதறிய உடலுடன் தன் மகனது உடலைப் பொருத்திப் பார்த்து கலங்க வைக்கும். கண் முன்னே மரிப்பவன் ஒரு முறை மரிக்கிறான். காணாமல் போகிறவனோ..?
(தொடரும்)

Saturday, September 11, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 16

இதைத் திட்டமிட்டு முடித்த பிரபாகரன் உயிருடன் இருப்பது சோனியாவுக்கு எப்போதுமே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.

தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தியாவில் 2009 தேர்தல் வந்தது. ராஜபக்சே புலிகளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்திருந்தார். பிரபாகரன், சோனியாவுக்கு செய்தி அனுப்பினார். நினைவிருக்கிறதா..? பிரியங்கா-நளினி சந்திப்பு… வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தவர் உண்மையில் சந்தித்தது மத்திய சிறையில் இருந்த நளினியைத்தான். ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள்முடியப் போகிறது… ஈழம் இன்னும் மலரவில்லையே… சிங்கள அரசு வேறு பாசக் கயிறை வீச ஆரம்பித்திருக்கிறது. இனியும் தாமதித்தால் உண்மையைச் சொலிவிட வேண்டியிருக்கும் என்று சோனியாவுக்கு அந்த சந்திப்பின் மூலம் ரகசிய மிரட்டல் விடுத்தார். பதில் செய்தி பகரப்பட்டது. மக்கள் இயக்கமாக அரசியல் தளத்தில் வளராமல் கொரில்லா படையாக ராணுவ வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்று வந்ததாலும் ராஜீவ் கொலையினாலும் சர்வதேச அரங்கில் புலிகளின் பெயர் பெரிதும் களங்கப்பட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் ஈழத்துக்கு ஆதரவாக நேரடியாக எதுவும் பேச முடியாது. எனவே, முதலில் சர்வதேச அரங்கில் புலிகள் பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு அவர்கள் கொரில்லா தாக்குதலை நிறுத்தவேண்டும். சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தவறுகள் செய்ய வைக்க வேண்டும். அதை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும். புலிகள் மீதான தீவிரவாத முத்திரை மறக்கடிக்கப்பட்டு அவர்களுடைய ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு கொடூர நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். சிங்கள ராணுவம் எவ்வளவுதான் சுற்றி வளைத்தாலும் கடைசி நேரத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வந்து பிரபாகரனைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லும். அதற்குத் தோதாகப் பிரபாகரன், கப்பல்கள் எளிதில் வந்து போக முடியும்படியான முள்ளிவாய்காலுக்கு ஒதுங்க வேண்டும். இதுதான் சோனியா, பிரபாகரனுக்கு அனுப்பிய செய்தி. ராஜீவ் காந்தியைப் போலவே பாவம் பிரபாகரனும் அதை நம்பினார். கடைசி யுத்தத்தில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். இந்தியா எப்படியும் கைவிடாது என்று கடைசி வரை நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்ததன் ரகசியம் இதுதான். சோனியாவின் கூந்தல் தன் கையில் என்ற மிதப்பு அவருக்கு. அவர் முதலும் கடைசியுமாகச் செய்த ஒரே தவறு அதுதான்.

சிங்கள ராணுவம் சுற்றி வளைத்தது. சொல்லி வைத்தது போலவே தமிழக ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை அப்பாவி ஈழத் தமிழர்களின் வேதனையை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இணைய நதிகளில் ஈழ ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பிரபாகரன் இந்தப் புதிய வியூகம் குறித்து சிரித்துக்கொண்டார். எல்லாம் திட்டமிட்டதுபோல் நடப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆனால், விதி அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருந்தது. அது அவருக்குத் தெரிய வந்தபோது பாவம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

சோனியா அரசு, ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு பதிலாக சிங்களர்களுக்கு சாதகமாக சாய ஆரம்பித்தது. ஐநா சபையில் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. பிரபாகரனுக்கு, தான் ஏமாற்றப்படுவது தெரியவந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் பி.ஜே.பி. பக்கம் போவதுபோல் காயை நகர்த்தினார். அது எப்படியும் சோனியாவை கலவரப்படுத்தும் என்று நினைத்திருப்பார். ஆனால், காலம் கடந்துவிட்டிருந்தது. பிரபாகரனுக்கு அருகிலேயே ஒரு உளவாளியை விதைத்திருந்தது கிறிஸ்தவ லாபி. முள்ளிவாய்க்கால் பக்கம் ஒதுங்கிய பிரபாகரன் கடற்புலிகளின் உதவியுடன் தப்பிக்க முயன்றார். ஆனால், உடன் இருந்த உளவாளியால் கொல்லப்பட்டார். 1970 களில் ஆரம்பித்த வங்கிக் கொள்ளையில் இருந்து தனக்கு வழிகாட்டியாக இருந்த கிறிஸ்தவ சக்திகளின் கைப்பாவையாக இருந்த பிரபாகரன் கடைசியில் அந்த சதிகாரர்களாலேயே கொல்லப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் தூக்குக் கயிற்றில் இருந்து மீட்டார் என்று பாராட்டப்படும் அதே சோனியாதான் பிரபாகரனைக் கொல்வதற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தையே தூக்கிலிட்டுக் கொன்றார்.

அனந்தன் : நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே…

காவி : உண்மை எப்போதும் கற்பனையைவிட அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். எங்களைக் கடத்தியதற்கு பதில் சோனியாவையும் ராபர்ட் வதோதராவையும் இன்னும் சில பாதிரிகளையும் நீங்கள் கடத்தி நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தினால் உண்மை புலப்பட்டுவிடும். ஓநாய்க்கு யார் கட்டுவது மணி..?

தெற்காசிய நாடுகளில் அரசியல் தலைவர்களின் அகால மரணம் என்பது ஏதோ அங்கு நடக்கும் உள் நாட்டு பிரச்னைகளின் விளைவால் நடக்கும் ஒன்று அல்ல. கிறிஸ்தவ ஓநாய்கள் நீ அந்த மானைக் கொல்லு நான் இந்த ஆடைக் கொல்றேன் என்று திட்டமிட்டு நடத்தும் ரத்த வேட்டை. பாகிஸ்தானில் ஜுல் ஃபிகர் அலி பூட்டோ, ஜியா உல் ஹக், பெனசீர் பூட்டோ. இந்தியாவில் சஞ்சய், இந்திரா, ராஜீவ்… நேபாளத்தில் மன்னர் பரம்பரை… இலங்கையோ பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. பங்களாதேஷில் முஜிபூர் ரஹ்மான், ஜியாஉர் ரஹ்மான்.

அனந்தன் : அமெரிக்காவில் கூட கென்னடி, லிங்கன் என படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காவி : அது என்னமோ உண்மைதான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் கிறிஸ்தவ தூண்டுதல் இல்லாமல் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

அனந்தன் : ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் உதவிக்கு வந்த பெரும்பாலானவர்கள் அந்த கிறிஸ்தவர்கள்தானே. இறக்கவிருந்த என்னை மருந்துபோட்டுக் காப்பாற்றியது கூட ஒரு கன்யாஸ்திரீதான். அகதிகளாக அலைய நேரும் மக்களுக்கு ஆதரவு தருவது கிறிஸ்தவ தேசங்கள்தானே.

காவி உடை அணிந்தவர் : அதை அப்படித்தான் செய்யவும் செய்வார்கள். அகதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்தால்தானே அதன் மூலம் பணப்பட்டுவாடா செய்து போராளிகளை ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க வைக்க முடியும். பாலூட்ட வருவதுபோல்தான் வருவார்கள். மார்புக் காம்பில் நஞ்சு தோய்த்திருப்பது குடித்த பிறகுதானே தெரியவரும். இது இன்று நேற்று செய்வதா என்ன..? ஆதி காலந்தொட்டே அதுதானே வழக்கமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைவதற்கும் அவர்கள் அந்த தந்திரத்தைத்தானே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மருத்துவ வசதி செய்கிறேன், கல்வி தருகிறேன் என்று ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைந்து அங்கிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் சிறு சிறு இடைவெளிகளை ஊதிப் பெரிதாக்குவார்கள்.

கிறிஸ்தவ வர்த்தகத்துக்கு வழி அமைத்துக் கொடுப்பார்கள்… அவர்கள் கிறிஸ்தவ அரசுக்கு வழி வகுத்துக் கொடுப்பார்கள்… கிறிஸ்தவ பார்ப்பனர்களும் கிறிஸ்தவ ஷத்ரியர்களும் கிறிஸ்தவ வைசியர்களும் உலக சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அழித்து ஒழிப்பார்கள். இதுதானே காலனி நாடுகளில் கிறிஸ்தவம் செய்துவந்த திருவிளையாடல்கள்.

யோசித்துப் பார்… காலனி நாடுகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள். கடைசியில் சுதந்திரம் கொடுத்துவிட்டுப் போகும்போது அவர்களில் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவருடைய நகத்தில் ஒரு கீறல்… உடம்பில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டதா..? இந்தியாவில் ரத்தால் வரையப்பட்ட பிரிவினைக் கோடின் கதை உனக்குத் தெரியுமா..? கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி ஏகாதிபத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிட்டோம் என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச் செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் பிரிவினையின் விஷத்தைக் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறான். சமத்துவ நெல்வயல்களில் வெறுப்பின் தீயை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். சகோதரத்துவ பூமியெங்கும் சந்தேகத்தின் கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். நேரடி ஆதிக்கத்தை கைவிட்டு விட்டு ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தமக்கான சிதையின் விறகுகளைத் தாங்களே எடுத்து வைக்கும்படி செய்து வருகிறான். நந்த வம்சம் கடலோரத்தில் முளைத்த நாணல்களைக் கொண்டு தமக்குள் தாக்கிக் கொண்டு மடிந்ததுபோல் பிற மதத்தினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாகிறார்கள். செப் 11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நேரடி தாக்குதல் இலக்காக தாம் இருக்கக் கூடாது என்று இந்தியாவை கேடயமாகப் பிடிக்கும் தந்திரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இனி தாலிபான்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைக் குறி வைப்பார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து இந்தியர்கள் மீது மேலும் வெறுப்பைக் கக்க வேதங்கள் ஓதியாயிற்று. போதாத குறைக்கு சீனாவையும் இப்பொது இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிட ஆரம்பித்தாகிவிட்டது.

இரான் இராக்கில் இனிமேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறிட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃப்கானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது.

அதே நேரம் கிறிஸ்தவ தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். கிழக்கு தைமூரின் கதை தெரியுமா உங்களுக்கு… இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் கேட்டுப் போராடியது. ஐநா சபையும் இன்னபிற கிறிஸ்தவ தேசங்களும் ஒடி வந்து கேட்டதை வாங்கிக் கொடுத்தன. அதற்குக் காரணமென்ன… கிழக்கு தைமூரில் 97 சதவிகிதத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா..?

இதில் ஒரு கொடூரம் என்னவென்றால், எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கும்படி கிறிஸ்தவ தேசங்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்போய் அனைவரும் கையேந்துகிறார்கள். கத்தியால் குத்தியவனிடமே போய் கருணை மனு கொடுத்தால் என்ன ஆகும்..? இந்துவும் முஸ்லீமும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் அமைதி திரும்பும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்தால் அந்த நாடுகளில் நிம்மதி பிறக்கும். சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் இலங்கையில் அமைதி திரும்பும். அண்டை வீட்டுக் காரன் அல்ல பின்னின்று ஆட்டுவிக்கும் அந்நிய தேசத்து கிறிஸ்தவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீரும். அதைவிட்டு மத்யஸ்தம் செய்ய கிறிஸ்தவ தேசங்களை நாடினால் என்ன நியாயம் கிடைக்கும். ஆடுகளின் பிரச்னையை ஓநாயிடம் முறையிட்டா தீர்த்துக் கொள்ள முடியும்?

அனந்தன் : அப்படியானால் இலங்கையில் நடந்த அனைத்துக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறீர்களா..?

காவி உடை அணிந்தவர் : நிச்சயமாக அவர்களேதான் காரணம். இலங்கையின் கதையை முடித்தாகிவிட்டது. அடுத்ததாக இந்தியா குறிவைக்கப்பட்டிருக்கிறது. இண்டலெக்சுவல் அளவில் தலித் விரோத மதம் என்று இந்து மதத்துக்கு முத்திரை குத்தியாகிவிட்டது. அரசியல் அதிகாரம் ஏற்கெனவே சோனியா கைக்கு வந்துவிட்டது. பி.ஜே.பியும் கூட இன்று சோனியாவின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. ஜாயின் பி.ஜே.பி. வொர்க் ஃபார் காங்கிரஸ் என்ற உத்தரவுடன் பல ஒற்றர்களை பி.ஜே.பி.யில் ஊன்றியாகிவிட்டது. பி.ஜே.பி.யை. அவர்கள் நினைத்தாலும் தடுக்கமுடியாதபடி அடிப்படைவாதத்தை நோக்கிக் கொண்டு செல்ல இந்த ஒற்றர்கள் வெகுவாக உதவுவார்கள். காங்கிரஸில் இருக்கும் செக்யுலர் முட்டாள்களைக் கொண்டு அதை மேலும் கிளறிவிடுவார்கள். மெக்காலே ஒவ்வொரு இந்துவும் தன்னை இந்து என்று சொல்ல வெட்கப்பட வைப்பேன் என்றூ சூளுரைத்துக் கொண்டு பதவி ஏற்றான். சோனியா, ஒவ்வொரு இந்தியனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படும்படியான செயல்களைச் செய்ய வைத்து வருகிறாள். வர்த்தக நிறுவனங்கள் பூராவும் கிறிஸ்தவ முதலாளிகளால் நிரம்ப ஆரம்பித்திருக்கிறது. ஊடகம் ஏற்கெனவே அவர்கள் கைக்குப் போயாகிவிட்டது. கட்டடத்தை நின்ற நிலையிலேயே இடிந்து விழ வைக்க எல்லா இடங்களிலும் ரகசிய குண்டுகளைப் பொருத்தியாகிவிட்டது. ஒரே ஒரு ஸ்விட்சைத் தட்டினால் போதும் பன்னெடுங்காலமாக இருந்த வலிமையான கட்டடம் வெறும் மண் குவியலாகத் தரைமட்டமாக்கப்பட்டுவிடும். இலங்கையில் நடந்ததில் இருந்து இந்தியர்கள் தங்களுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இலங்கையின் அதே கதி இந்தியாவுக்கும் நேரும். அந்த நாள் வெகு தொலைவில் ஒன்றும் இல்லை.
(தொடரும்)

புத்தம் சரணம் கச்சாமி - 15

அனந்தன் : இந்தப் போரில் பல கிறிஸ்தவ பாதிரிகளும் பத்திரிகையளர்களும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்களே… பிரபாகரன் முதன் முதலில் கொன்றது கூட ஆல்ஃபிரெட் துரையப்பா என்ற கிறிஸ்தவரைத்தானே…

காவி : ஏன் கொன்றார்கள்?

அனந்தன் : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பழிவாங்க அவரைக் கொன்றார்கள்.

காவி : மிக மிகத் தவறு. இலங்கையில் நடந்த ஒரு மாநாட்டுக்கு இலங்கை அதிபரை அழைக்காதது, மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தியது, அனுமதி பெற்ற தேதியையும் தாண்டி மாநாட்டை நடத்தியது, அனுமதி மறுக்கப்பட்டவர்களை பேச அரங்குக்கு அழைத்து வந்தது, மின் கம்பம் சரிந்தது என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா நூற்றில் ஒரு சதவிகிதம்கூடக் காரணம் இல்லை. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் என்ன தெரியுமா..? ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுதான். ஆஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா..? வரதராஜ பெருமாள் கோவிலின் வாசலில் வைத்து கொன்றார் பிரபாகரன். பின்னால் பொங்கிப் பிரவகிக்கத் தொடங்கிய ரத்த அருவியின் முதல் துளி அது.

பிரபாகரன் தன் மகனுக்கு சூட்டிய அழகுப் பெயர் என்ன தெரியுமா..? சார்லஸ்..!

அனந்தன் : அது விடுதலைப் போரில் உயிர் துறந்த ஒரு மாவீரனின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அல்லவா..?

காவி உடை அணிந்தவர் : அப்படித்தான் சொல்வார்கள். வீர மரணம் எத்தனையோ பேர் அடையத்தான் செய்தனர். ஆனால், பிரபாகரனுக்கு சார்லஸ் மட்டுமே நினைவுக்கு வந்திருக்கிறார். கிறிஸ்தவ நாடுகளின் செல்லப் பிள்ளையாக வேண்டுமல்லவா..? உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களையும் அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம்! வேலை முடிந்துவிட்டது. கழட்டி விட்டுவிட்டார்கள்.

அனந்தன் : பிரபாகரன் சிங்களப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு அல்லவா உயிரிழந்தார். இதில் கிறிஸ்தவ சதி எங்கிருந்து வருகிறது?

காவி : கிறிஸ்தவ சதியின் வல்லமையே அதுதான். எந்தவொரு செயலுக்கும் மேலே வெண்ணிறத்தில் சாம்பல் படிந்ததுபோல் சாதுவாக ஒரு காரணம் இருக்கும். உள்ளுக்குள் ஒரு கிறிஸ்தவ காரணம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். அருகில் சென்று தொட்டுப் பார்ப்பவர்களுக்கே அந்த அழிவின் வெப்பம் தெரியும். பிரபாகரன் மரணத்திலும் அப்படித்தான். உங்களை ஒன்று கேட்கிறேன்… பிரபாகரனுடைய மரணத்தை இந்த உலகில் பெரும் ஆர்வத்துடன் யார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் தெரியுமா..?

அனந்தன் : சிங்கள அரசியல்வாதிகள்தான்.

காவி : அதுதான் இல்லை. அவர்கள் அவரது இருப்பை உள்ளூர விரும்பினார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களுடைய அராஜகங்களைத் தொடர முடியும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

அனந்தன் : விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர் அல்லது தமிழர் யாராவது..?

காவி : அதுவும் இல்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்.

அனந்தன் (சிறிது யோசித்தபடியே) : புலிகளால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது… (சட்டென்று நினைவு வந்தவராக) சோனியா காந்தி.

காவி : மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

குட்டி : ஆனால், அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை கூடக் கொடுக்க வேண்டாம் என்று கருணையோடு மன்னிப்பு அல்லவா வழங்கினார்.

காவி (அலட்சியமாக) : கருணையா… ராஜீவ் கொலைக்கு எவரொருவருக்காவது சட்டபூர்வமாக தண்டனை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றால், யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்க அவர் சம்மதம் தந்தார் என்றால் அந்த தூக்குக்கயிறு நேராக அவரது கழுத்தை நோக்கி நீளும் என்ற பயம்.

அனந்தன் : பயமா..? அவர் எதற்கு பயப்பட வேண்டும்.

காவி : பிறகு, கொலை செய்யச் சொன்னவர் பயப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்..?

அனந்தன் (அதிர்ந்தபடி) : ராஜீவைக் கொல்லச் சொன்னது சோனியாவா..?

காவி : ஆமாம் அவரேதான். லண்டனில் ராஜீவ் படித்த கல்லூரியில் வைத்து ஆண்டனியோ மெய்னோ சந்தித்தபோதே ராஜீவின் மரணக் கடிகாரத்தின் மணல் துளிகள் உதிர ஆரம்பித்துவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புல்வெளியில் ராஜீவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட சோனியாவின் காதல் கரங்கள் அன்றே இறுக்கத் தொடங்கிவிட்டன. சஞ்சய் காந்தியின் விமான விபத்து… இந்திரா காந்தியின் படுகொலை… என சோனியாவுக்கான தடைகள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன. ராஜீவின் மரணம் கடைசி தகர்ப்பு. அது பிரபாகரனின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

அனந்தன் : புலிகள் ஏன் அதைச் செய்ய முன் வந்தார்கள்? அதனால் அவர்களுடைய இயக்கத்துக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு அல்லவா ஏற்படும். அது தெரியாதவர்களா அவர்கள்.

காவி : அவர்கள் அதைச் செய்ய முன் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. மேலோட்டமாகத் தெரிவது புலிகளுக்குப் பிடிக்காத வகையில் ராஜீவ் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். ஆனால், அதற்காக கொல்லும் அளவுக்குப் போக அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லைதான். உண்மையில், ராஜீவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த விஷயங்களே வேறு. ஆயுதப் போரை ஆரம்பித்துவிட்டோம். இலங்கை அரசும் ரொம்பவும் கொடூரமாகவே நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டாட்சிக்கு ஒப்புக் கொண்டால் எங்களுக்கு மிகவும் அவமானமாகப் போய்விடும். என்னையே யாராவது கொன்றாலும் கொன்றுவிடுவார்கள். எனவே, நீங்கள் எங்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைப்பதுபோல் மிரட்டுங்கள். வேறு வழியில்லாததுபோல் நாங்களும் நடந்து கொள்கிறோம். அடிப்பதுபோல் அடியுங்கள் அழுவதுபோல் அழுகிறோம் என்று திட்டம் போட்டுத்தான் ராஜீவ்-பிரபாகரன் விவகாரங்கள் நடந்தன. எனவே, பிரபாகரன் ராஜீவைக் கொல்ல ஒருபோதும் தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால், அதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள்.

சோனியா காந்தி, பிரபாகரனுடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார். ராஜீவ் இருக்கும்வரை மாநில ஆட்சிக்கு மேலாக வேறு எதுவும் கிடைக்காது. அவரைக் கொன்றால் அதற்கடுத்து இந்திய ஆட்சி என் கைக்கு வரும். நான் இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ஈழம் மலர நிச்சயம் உதவுவேன் என்று உத்தரவாதம் தந்தார். பிரபாகரன் அதை நம்பினார். ஆக ராஜீவைக் கொல்வது என்பது வெகு காலத்துக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்களை உருவாக்கும் பணி தான் அதன் பிறகு நடந்தது. அப்போதும் சர்வதேச அளவில் தங்கள் இயக்கத்தின் பெயருக்கு ஏற்படும் களங்கம் ஏற்படுமே என்று அவர் கலங்கியபோது, சோனியா, ரிச்சர்ட் ஜெயவர்த்தனா மூலம் சிங்களக் கைக்கூலியை வைத்து ஒரு பொய்யான தாக்குதல் முயற்சியை அரங்கேற்றினார். நாளை புலிகள் மேல் பழி வராமல் பார்த்துக் கொள்ள வேறு உத்தரவாதங்களும் தரப்பட்டன. என்னதான் ஆனாலும் வழக்கை இந்திய அதிகாரிகள்தானே எடுத்து நடத்துவார்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்று சோனியா உறுதி அளித்தார். இது போதாதென்று பெருமரங்கள் விழும்போது பூமியில் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்று இந்திரா காந்தி இறந்தபோது நடந்த சீக்கியக் கொலைகளை நியாயப்படுத்தியிருந்தார் ராஜீவ். எனவே, சீக்கியர்களுக்கும் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. பழியை இவர்கள் யார் மேலாவது போட்டுத் தப்பிவிடலாம் என்று பிரபாகரனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் புலிகள் அத்தனை பெரிய செயலைச் செய்ய முன் வந்தனர். ஆனால், மற்றவர்களைவிட தங்களை நம்பும் குணம் அவர்களுக்கு உண்டு. யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல் செய்து முடிக்கத்தான் அவர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அனந்தன் : ஆனால், கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது அல்லவா..?

காவி : அது வேறொரு சதியின் அங்கம். அந்தப் பெரும் விபத்தில் புகைப்படக்காரர் இறந்துவிட்டார். ஆனால், அவர் பயன்படுத்திய கேமரா மட்டும் சேதமடையாமல் எப்படி தப்பியது..? சோனியாவின் டபுள் கேம் அது. புலிகளை ஒரு கட்டுக்குள் வைக்க செய்யப்பட்ட சதி அது. அவர்கள்தான் செய்தது என்பது தெரியாமல் போனால், செய்யச் சொன்னவர்களுக்கு இன்னும் அபாயம் அல்லவா. அதனால் அந்த கேமரா அங்கு போடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் கொலைதிட்டத்துக்கு உதவியாக இருந்த வேறு பலரைக் காட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு வீடியோ கேஸட்டை கமுக்கமாக மறைத்தும் விட்டார்கள்.

அது தேர்தல் காலம். ராஜீவுக்குப் பிரதமராக வாய்ப்புகள் மங்கலாக இருந்த நேரம்.

அனந்தன் : ஆனால், ராஜீவ் ஆட்சிக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால்தானே புலிகள் அந்தக் கொலையைச் செய்ததார்கள்.

காவி : இல்லை. அது உண்மை இல்லை. ராஜீவ் மத்திய ஆட்சியை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்த நேரம். போபார்ஸ் கேஸ் மூலம் 1989 தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அவருடைய நிலைமை எந்த வகையிலும் சீரடைந்திருக்கவில்லை. போபார்ஸ் கேஸை துரிதப்படுத்தினார்கள் என்பதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கலைத்திருந்தார். கைப்பொம்மையாக நியமித்த சந்திர சேகர் ஆட்சியையும் அல்ப காரணம் சொல்லி கவிழ்த்திருந்தார். எனவே, அப்போதைய தேர்தலில் ராஜீவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. அனுதாப அலை மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; நாமே ஒரு சிறிய விபத்தை ஏற்பாடு செய்து, அதில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து தேர்தலைச் சந்திப்போம். எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருக்கு தலையணை மந்திரம் ஓதப்பட்டது. அப்பாவி ராஜீவ் அதை நம்பினார்.

சதித்திட்டம் அவருக்கு விளக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உரையாற்றப் போகும்போது நேராக மேடைக்குச் செல்ல வேண்டாம். மேடைப் படிகளுக்கு அருகில் குண்டு வெடிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் அந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தில் இருங்கள். சுற்றிலும் நமது பாதுகாப்பு வீரர்கள்தான் இருப்பார்கள். மேலும் குண்டு வெடித்துச் சிதறும்போது அதில் பொதியப்பட்டிருக்கும் ஆணி போன்றவை மேல் நோக்கித்தான் சிதறும். நீங்கள் குனிந்து இருந்தால் உடம்புக்கு மேலாக அது தெறித்துப் போய்விடும். நீங்கள் குனிவதற்குத் தோதாக கையில் சந்தன மாலையுடன் ஒருவர் அங்கு காத்திருப்பார். அவர் மாலையை அணிவித்துவிட்டு உங்கள் காலில் விழுவார். நீங்கள் அவரைத் தூக்கிவிடும் சாக்கில் குனிந்து கொள்ளுங்கள். மேடையின் படியில் வெடிக்கும் குண்டு வெடித்துச் சிதறி உங்களுடைய உடம்பில் லேசான சிராய்ப்பை மட்டுமே ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள். மாலையுடன் நிற்கும் வேறு யாருக்கு அருகிலாவது நீங்கள் போய்விடக்கூடாது என்பதற்காக நமது கட்சி உறுப்பினர் ஒருவர் சந்தனமாலைப் பெண்ணுக்கு அருகில் நின்று கொண்டிருப்பார் என்று திட்டம் அவருக்குச் சொல்லப்பட்டது. அதை ராஜீவ் நம்பினார். விடுதலைப் புலிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டை படியில் பொருத்தாமல் சந்தனமாலையைக் கையில் வைத்திருப்பவரின் மடியில் பொருத்தினார்கள் படுபாவிகள். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் இருக்க குனியச் சொன்னார்கள். அந்தோ… அதுதான் அவருக்கு உலையும் வைத்தது. ஒருவேளை காலில் விழுந்தவரைத் தூக்க முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் குண்டு வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் சாய்ந்து தப்பியிருக்கக் கூடும். என்ன செய்ய? பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடத்துக் கீழ் தான் படுகுழி வெட்டப்பட்டிருந்தது.

யார் செய்தது என்று தெரியாமல் கச்சிதமாக முடிக்க வேண்டும். அப்படியே தெரிய வந்தாலும் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக்கூடாது. சோனியா ஆட்சிக்கு வந்ததும் புலிகளுக்கு ஈழத்தைப் பெற்றுத்தருவார் என ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு மாநில அதிகாரம் பெற்றுத்தரப் பாடுபட்ட மிஸ்டர் கிளீன் ஸ்ரீ பெரும்புதூரில் முன் இரவில் வந்து சேர்ந்தார். மேடையைப் பார்த்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். படியருகே சிலர் நின்றிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறார்களே என்று அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தார். பெரு மரங்கள் சாயும்போது சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவராயிற்றே. ஒரு மாபெரும் யாகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சில உயிர்களை பலியிடுவதில் தவறில்லை என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார். ஆனால், பாவம் அன்றைய யாகத்தின் பலி ஆடு அவரே என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மேடைக்குப் போக வேண்டியவர் நேராகக் கூட்டத்துக்குள் கண்களை ஓட்டினார். சற்று தொலைவில் மங்கலான விளக்கொளியில் சந்தனமாலை பளபளத்தது. அருகில் கட்சி உறுப்பினர் நிற்பதும் தெரிந்தது. ராஜீவ் அவர்களை நோக்கி நடந்தார். மாலையைக் கழுத்தில் அணிவித்துவிட்டு அப்படியே காலில் விழுந்து கும்பிட்டார். விழுந்தவரைத் தூக்கிவிடக் குனிந்தார் ராஜீவ். குனிந்தவர் நிமிரவில்லை.

(தொடரும்)

புத்தம் சரணம் கச்சாமி - 14

அனந்தன் : இந்தப் போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

காவி உடைக்காரர் (எந்தவித சலனமும் இல்லாமல்): போரில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

அனந்தன் : அந்த மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

காவி : அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அனந்தன் : என்னது எல்லாருக்கும் தெரியுமா..? தெரிந்துமா அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

காவி : ஆமாம். அவர்கள்தான் தங்கள் எதிரிகள் அனைவரையும் தமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும்படி திசை திருப்பிவிடுவதில் கெட்டிக்காரர்களாயிற்றே.

அனந்தன் : யாரைச் சொல்கிறீர்கள்…

காவி : வேறு யாராக இருக்க முடியும். உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான்.

அனந்தன் : இலங்கையில் நடக்கும் சண்டை சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்தானே நடக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

காவி : குழந்தை போலவே கேட்கிறீர்களே..? இலங்கையில் நடக்கும் பிரச்னையின் மூல வேர் எங்கு இருக்கிறது தெரியுமா… கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் சிங்கள கடற்கரையில் தங்கள் கூடாரத்துக்காக என்றைக்குக் குழி தோண்ட ஆரம்பித்ததோ அன்றே இலங்கையின் அழிவுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுவிட்டது. 1500களில் வந்திறங்கிய அந்த கிறிஸ்தவக் கூட்டம் இலங்கை என்பது ஒரு தீவு… இரண்டு தேசங்கள் என்று பிரிவினையின் விதைகளை சரித்திரத்தின் சதுப்பு நிலத்தில் ஆழமாக ஊன்றினார்கள். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் அந்தச் செடியின் வேருக்கு நீர் ஊற்றி வளர்த்தார்கள். கிறிஸ்தவர்கள் அன்று ஊன்றிய பிரிவினை விதைதான் இன்று மரமாக வளர்ந்து கிளைகளில் எல்லாம் மண்டையோடுகள் தொங்க, இலைகளில் இருந்தெல்லாம் ரத்தத்துளிகள் சொட்ட இலங்கை முழுவதுக்குமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

டிவைட் அண்ட் ரூல் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் சிறுபான்மையாக இருந்த தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள். காலனி நாடுகளை விட்டுச் சென்ற பிறகு, டிவைட் அண்ட் டெஸ்ட்ராய் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதற்குத் தோதாக நாட்டை விட்டுச் செல்லும்போது அழகாக ஆட்சியை சிங்களக் கிறிஸ்தவர்களின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்றாக இருந்த இந்தியாவை பிரித்து ரத்தக் களறி ஆக்கினார்கள். இந்திய பிரிவினையில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் பேர் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சயனைட் போல் உடனடி விளைவு. இலங்கைக்கு மென் விஷம். 30 வருடங்களில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை ஐரோப்பிய கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.

அனந்தன் : கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னாலும் அங்கு தமிழர் - சிங்களர் சண்டை நடந்துதானே வந்திருக்கிறது. அல்லது அவர்கள் போன பிறகாவது அதைத் தொடராமலிருந்திருக்கலாமே..?

காவி : உண்மைதான். இந்த உலகில் மனித இனம் பழங்குடிகளாக, நாடோடிகளாக இருந்த காலத்தில் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துதான் வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படையில், தேசத்தின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபோதும் தமக்குள் சண்டையிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட ரோமன் கத்தோலிக்கர்கள் பிராட்டஸ்டண்ட்கள் என்று வெட்டு குத்துகள் சரமாரியாக நடந்துதான் வந்திருக்கிறது. ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என எல்லா தேசங்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தன. இன்று அந்த நாடுகளில் எல்லாம் அமைதி திரும்பி சுபிட்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் மட்டும் கடந்த காலச் சண்டைகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஏன் என்று ஒருவர் சிறிது யோசித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்.

அனந்தன் : பிற மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் அடிப்படையில் சண்டையை விரும்புபவர்கள்.

காவி : அதுதான் இல்லை. எல்லாருமே கடந்த காலக் காயங்களை மறந்துவிட்டு வாழத்தான் விரும்புகிறார்கள். ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதியில் இருக்கும் இடைவெளிகளைப் பெரிதாக்கி, காயங்களை ஆறவிடாமல் கிறிஸ்தவர்கள் கீறிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்காவில் அதை மற்ற மதத்தினர் செய்வதில்லை. தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்த ஓநாய்கள் ஒன்று கூடிவிட்டன. உலகில் இருக்கும் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் என சாது மிருகங்கள் அனைத்தையும் வேட்டையாடக் கிளம்பிவிட்டன. இன்று உலகின் எந்தவொரு நாட்டையும் எடுத்துப் பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா..? அங்கு அமைதி நிலவுகிறதா..? அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். அவர்களுடைய அஜெண்டா மிகவும் எளிமையானது. உலகில் இருக்கும் அனைவரும் கிறிஸ்தவராக மாறி ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு துணைபோக வேண்டும். இல்லையென்றால் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துபோகும்படிச் செய்வார்கள். If your are not with us. your are against us.

சிறுபான்மையினரிடம் சுய உரிமைப் போராட்டத்தை நடத்தச் சொல்லி தூண்டிவிடுவார்கள். பெரும்பான்மையிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும்படி அறிவுருத்துவார்கள். இரு தரப்புக்கும் அதி நவீன ஆயுதங்களை அணி அணியாக அனுப்பி வைப்பார்கள். இதுதான் அவர்களுடைய அயலுறவுக் கொள்கை. உலகின் எந்த வளம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைச் சுரண்டுவது… தான் தயாரிக்கும் ஆயுதங்களுக்கான சந்தையைப் பலப்படுத்த உள்நாட்டுக் கலவரங்களையும் அண்டைநாடுகளுடன் சண்டைகளையும் தூண்டுவது, தீவிரவாத, பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வது, கிறிஸ்தவத்தைத் தவிர பிற மதங்களைப் பூண்டோடு அழிப்பது என்ற தன் செயல் திட்டத்தை வெகு சாமர்த்தியமாக அது நிறைவேற்றிக் கொண்டுவருகிறது.

அனந்தன் : ஆனால், இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாக புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே.

காவி : அங்குதான் நீங்கள் மட்டுமல்ல. உலகமே ஏமாந்துவிடுகிறது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான். சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதங்கள் யாரிடம் இருந்து கிடைத்தன. இதே கிறிஸ்தவ தேசங்களிடமிருந்துதானே. அதை வாங்குவதற்கான பணம் யாரால் தரப்பட்டது. சிங்கள அரசுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு, தீவிரவாதத்தை ஒடுக்க என்ற பெயரிலும் விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர்ந்த அகதிகள் மூலமாகவும் பணம் தரப்பட்டது. ஆக, அகதிகளுக்கு உதவுகிறோம்; வளரும் நாடுகள் வளர உதவுகிறோம் என்ற பெயரில் நல்ல பெயரையும் சம்பாதித்தாயிற்று. தங்கள் ஆயுத விற்பனைக்கான சந்தையையும் உறுதிப்படுத்தியாயிற்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற மதங்களை அழிக்கவும் செய்தாயிற்று. கிறிஸ்தவத்தை வேரூன்றவும் வழி செய்தாயிற்று.

வரலாற்றைத் திரிப்பதன் மூலம் இரு பிரிவினரிடையே வேற்றுமையை வளர்த்து அவர்களை எதிரிகளாக்குவது. இருவருக்குமே ஆயுதங்களை வழங்குவது. இருவரையுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைப்பது. மிகவும் அருமையான திரைக்கதை. இலங்கையில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா குறிவைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, செப்டம்பர் 11க்குப் பிறகு, இஸ்லாமியரின் முதல் எதிரியாக நாம் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என்று தீர்மானித்து இந்தியா பக்கம் நெருங்குவதுபோல் பாவலா காட்ட ஆரம்பித்திருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் இனி மேல் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைத் தாக்க ஆரம்பிப்பார்கள். இந்தியாவும் பதிலுக்குத் தாக்கும். அமெரிக்கா இரண்டு பேருக்கும் பணமும் ஆயுதமும் கொடுத்து பகைமை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளும். இதுதான் அவர்களுடைய எளிய செயல் திட்டம்.

அமெரிக்கா கடைசியாக தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும். கடைசிக் கட்டப் போர் குறித்த அந்த அறிக்கையில் தமிழர்களுக்கு அடைகலம் தந்தது எல்லாமே கிறிஸ்தவ தேவாலயங்கள்தான். பிற மத கோயில்கள் மசூதிகளில் மக்கள் தங்கியிருந்தால் அது பொதுவாக வழிபாட்டுத்தலம் என்று மொட்டையாகக் குறிப்பிடப்படும். கடைசி கட்டத்தில் அங்கிருந்து உதவியவர்கள் எல்லாமே பாதிரியார்கள்தான். இதற்குப் பின்னாலும் தெளிவான சதியும் மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. நீங்கள் கோவில்களில் தஞ்சம் புகுந்தால் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும். மசூதிக்குள் ஒளிந்தால் மசூதி தகர்க்கப்படும். தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். பாதிரியார்களிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே ரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா போரை நடத்தியது யார் என்பது..?

அனந்தன் : ஆனால், சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் நடத்தியது அவர்கள் இல்லையே. போரை நேரடியாக முன்னெடுத்தது இவர்கள்தானே.

காவி : அது முழு உண்மையில்லை. இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, ஜுனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சாலமன் பண்டாரநாயகா, இன்றைய ராஜபக்சே வரை யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்த வேஷம் போட்டுக் கொண்டவர்கள். அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தப் போரை நடத்துகிறோம் என்று அவர்கள் அனைவருமே சொன்னார்கள். உலகில் பொதுவாக போரை நிறுத்தினால்தான் அமைதி திரும்பும். ஆனால், இங்கோ போர் நடத்தினால்தான் அமைதி திரும்புமாம். வேதாகமத்தில் எந்த புனித தூதர் இதைச் சொல்லியிருக்கிறாரோ..?

விடுதலைப் புலிகள் மட்டும் விதிவிலக்கா என்ன… அவர்களுடைய ஆஸ்தான ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர். அவர் என்ன செய்தார். அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தார். இவ்வளவு ஏன்…? பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்..? தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்… சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன.

பிரபாகரனை ஆரம்பத்திலிருந்தே மூளைச் சலவை செய்தது கிறிஸ்தவ திருச்சபைதான். 1970களில் அவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்த போதிலிருந்தே அவருடைய காட்ஃபாதராக இருந்தது கிறிஸ்தவ பாதிரிகள்தான். தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால், அவரைப் பின்னால் இருந்து இயக்கிய கிறிஸ்தவ சக்திகளுக்கு வேறு கணக்குகள் இருந்தன. பிரபாகரன் பாவம் வெறும் அம்புதான். வில்லும் வில்லைப் பிடித்திருக்கும் கைகளும் வேறு நண்பரே…
(தொடரும்)

Sunday, September 5, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 13

அனந்தன் : இலங்கையில் நடந்த சிறுபான்மை, பெரும்பான்மை பிரச்னை இப்படியான கொடூரமான நிகழ்வுகளால் நிரம்புவதற்கு மறைமுகமாக முக்கியமான காரணம் அங்கிருந்த இரண்டாவது வலுவான சமூகமான இஸ்லாமிய தமிழர்கள்தான். நீங்கள் மட்டும் தமிழீழத்துக்கு ஆதரவாக நின்றிருந்தால் சிங்களப் பெரும்பான்மை இந்த அளவுக்கு வன்முறையைக் கையில் எடுத்திருக்காது. அது தமிழர்களை விளிம்புக்குத் தள்ளியிருக்காது. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியும் அதிகரித்திருக்கும். இரு தரப்புமே ஒரு சுமுகமான தீர்வுக்கு வந்திருக்க முடியும். நீங்கள் எடுத்த பிழையான நிலைப்பாடுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று நான் சொல்கிறேன். மறுக்க முடியுமா உங்களால்.


இஸ்லாமியர் : துப்பாக்கி முனையில் மிரட்டிக் கூட்டி வந்திருக்கும் உங்களால் எது வேண்டுமானாலும் சொல்ல முடியும். என்னால், மறுக்க முடியாதுதான். ஆனால், சில உண்மையை உங்களுக்கும் உலகுக்கும் சொல்லிப் புரியவைக்க விரும்புகிறேன்.


உலக மக்களுக்கு இலங்கைப் பிரச்னை என்றால் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் சிங்களர்களுக்கும் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்னை என்று தான் தெரியும். தமிழ் ஈழம் என்பதுதான் ஒட்டு மொத்த தமிழர்களின் இலக்கு என்றே பெரும்பாலான ஊடகங்களில் சித்திரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு இஸ்லாமியத் தமிழர் என்றொரு தனிச் சிறுபான்மை இனமும் இருக்கிறது. அதன் தேவைகள், கனவுகள், உரிமைகள், இலக்குகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை என்ற விஷயம் யாருக்கும் தெரிவதில்லை. அதனால்தான் ஒரு லட்சம் இஸ்லாமியர்களை போட்டது போட்டபடி தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தைவிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று துரத்தியடித்தவர்களை சுதந்திரப் போராளிகள் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறது. அல்லாவைத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன குழந்தைகளை அல்லாவின் சன்னிதியிலேயே கொன்று குவித்தவர்களை வீரர்கள் என்று போற்றுகிறது.


இலங்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் மட்டுமல்ல... இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் பரவலாக வசிப்பதோடு கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினராகவும் வசித்துவருகிறார்கள். இன்று நேற்று அல்ல... தமிழர்கள் இந்த இலங்கையில் வாழும் காலந்தொட்டே இஸ்லாமியரும் வாழ்ந்துவருகிறார்கள். தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாங்கள் தமிழர்கள் ஆகிவிடுவதில்லை. எங்களுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்கள். தாயுக்கும் பிள்ளைக்குமே அந்த கதி... இங்கோ தனித்தனியான இரு நபர்களுக்கும் சேர்த்து ஒருவரே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். உன் சிறகுகளை வெட்டிக் கொடுத்துவிடு... நான் உன்னைச் சுமந்துகொண்டு பறக்கிறேன் என்றார்கள். எதற்கு..? உங்களுக்காவும் சேர்த்து நாங்களே சவப்பெட்டி தயாரித்துத் தருகிறோம் என்றார்கள். எதற்கு..? எங்களுக்காக யாரும் போராட வேண்டாம். எங்கள் எதிரிகளை நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம் என்று நாங்கள் சொன்னோம்.

பிரச்னையின் ஆணிவேரே அதில்தான் இருக்கிறது. விடுதலைப் புலிகள் தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டார்கள். அது முதலாவது தவறு. இரண்டாவதாக அவர்கள் மிகவும் தவறான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்கள். இரண்டுமே இஸ்லாமிய தமிழ் சமூகத்துக்கு உடன்படான விஷயம் அல்ல. இதை நான் சற்று விளக்கிச் சொல்கிறேன்.

விடுதலைப் புலிகள் மொழியை முதன்மைப்படுத்திப் போராடினார்கள். இஸ்லாமியரான எங்களுக்கு தேசம், இனம், மொழி இவையெல்லாமே இரண்டாம்பட்சமானவைதான். நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்குவோம். வேறு எந்த ஒன்றின் அடிப்படையிலும் அணிதிரளமாட்டோம். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை விஷயத்தில், இரண்டாவது பெரிய சிறுபான்மை இனத்தவரான எங்களுக்கு நியாயம் எது என்பது தெரிந்திருக்கிறது. நாங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறோமோ அதற்கு உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று மட்டுமே கேட்கிறோம். அதனால்தான் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் ஆரம்பத்தில் 50-50 சதவிகித அதிகாரப் பகிர்வு கேட்டபோதே நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. தனி நாடு வேண்டும் என்று கேட்டதை எப்படி ஆதரிப்போம்? சிறுபான்மையான நாங்கள் பயந்துவிட்டோம் என்று பழித்தார்கள். உண்மைக்கு நெருக்கமாக இருப்பதைக் கோழைத்தனம் என்று சொல்வீர்கள் என்றால் நாங்கள் கோழைகளாக இருப்பதையே விரும்புகிறோம். துரோகிகள் என்று தூற்றினார்கள். மாற்றுக் கருத்து கொண்டு எதிரில் நிற்பவர்களையும் எதிரிகளாக்கிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுதான் வீரம் என்றால் அத்தகைய வீரம் எங்களுக்குத் தேவையில்லை.

சிங்களர்கள் அப்படி ஒன்றும் சிறுபான்மையினரைத் தரக்குறைவாக நடத்திவிடவில்லை. எங்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி... உரிய அங்கீகாரம் கொடுத்தே வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களுக்கு அவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்களோ அதற்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்திருந்தது. சிங்களர்கள், அதிகாரம் தங்கள் கையில் இல்லாதபோது கைவிட்டுப் போன ஒன்றை அதிகாரம் கையில் கிடைத்ததும் சரி செய்ய முயன்றார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? திருட்டுத்தனம் செய்தவரைப் பிடித்து திருடியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடு என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக திருட்டை ஆதரிக்க முடியுமா என்ன..? நேற்றுவரை நான் திருடிக் கொண்டிருந்தேன்... இனியும் தொடர்ந்து திருட அனுமதித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னால் யார்தான் அதற்கு சம்மதிப்பார்கள்?

சிங்களர்கள் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு தமிழும் தெரிந்திருந்தது. சிங்களமும் தெரிந்திருந்தது. எனவே, நாங்கள் சிங்கள வழிக் கல்வியை ஏற்றுக் கொண்டோம். இதில் துரோகம் எங்கே வந்தது?

தமிழர்கள் அனைத்து துறைகளிலும் அவர்களுடைய இருப்புக்கு மீறிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, கல்வித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த சட்டத்தைக் கொண்டுவந்தது எங்கள் கல்வி அமைச்சர்தான். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. ஒரு நியாயமான செயலை துணிச்சலுடன் செய்தோம். அவ்வளவுதான். உண்மையைச் சொல்லப்போனால் அந்த சட்டத்தினால் நகர்ப்புற சிங்களர்கள்தான் தமிழர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அது உண்மையில் இலங்கையின் பின் தங்கிய பகுதியில் வசித்த மக்களுக்கு முன்னுக்கு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றது. ஆனால், தமிழர்கள் அதை இன அடிப்படையில் பார்த்து அய்யோ... பெரும்பான்மை சிறுபான்மையை நசுக்குகிறது... நாங்கள் பிரிந்து போகிறோம் என்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள். அமைதியாகப் போராடினோம். பலன் கிடைக்கவில்லை... அதனால் ஆயுதத்தை எடுத்தோம் என்றார்கள். ஒரு தவறை அமைதியாகச் செய்தால் மட்டும் அது சரியாகிவிடுமா.?

தமிழ் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நாட்டைப் பிரித்துக் கொடு என்று கேட்பது எந்தவகையில் நியாயம்..? நாளைக்கே சைவப் பிள்ளைமார்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் அவர்கள் சாதிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். கரையார்களிடம் கேட்டால் அவர்கள் தங்கள் சாதிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். உடனே அவர்களுக்கென்று கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுக்க முடியுமா.? அண்டையில் இருக்கும் இந்தியா முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ஒருவருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. உலகில் எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அந்தப் போராளியைத் தன் சக தோழராக நினைக்கும் க்யூபாவே ஆதரவு தரவில்லை. ஏனென்றால் அது தர்மமல்ல. அப்படி தர்மமாகாத ஒரு செயலுக்கு இஸ்லாமியர் துணை போகாதது எப்படி தவறாகும்?

சிறுபான்மை பெரும்பான்மை உறவு என்பது கணவன் மனைவி உறவைப் போன்றது. கணவன் கொடுமைப்படுத்தினால் அப்போது கூட மனைவி முதலில் அவனைத் திருத்தி குடும்பம் சரிவர நடக்க முயற்சி செய்யவேண்டும். முடியவே முடியவில்லை என்றால்தான் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அதைவிட்டுவிட்டு கணவன் எந்த கொடுமையும் செய்யாதபோதே, நாளைக்கு நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் தலையில் கல்லைப் போடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்... என்னைக் கிணற்றில் தள்ளமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்..? என்று அதீதமாகப் பயந்து அவனை அடிக்க ஆரம்பித்தால் அவனும் வேறு வழியின்றி கையை ஓங்கத்தான் செய்வான். ஆம்பளை அடிச்சா கொஞ்சம் வலி கூடுதலாகத்தான் இருக்கும். என்ன செய்ய இந்த இடத்தில் அவன் ஆணாயிற்றே... அப்படி உனக்கு அவனுடன் வாழ முடியவில்லை என்றால் ஓடிப் போய்விடு. அதைவிட்டுவிட்டு கணவனின் சொத்தில் பங்கு வேண்டும்... அது வேண்டும்... இது வேண்டும் என்று கேட்டால்..? தமிழர்கள் அதைத்தான் செய்தார்கள்.

அவர்களுடைய அதிகப்பிரசங்கித்தனமான செயல்களினால் அவர்களுக்கு அதிக இழப்பை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அப்படி செய்யவில்லை என்பதால் சிங்களர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை. இதை வைத்துக் கொண்டு நாங்கள் சிங்களர்களுக்கு துணை போகிறோம் என்று எப்படிச் சொல்லமுடியும்? நாங்கள் நியாயத்தின் பக்கம் நின்றோம். நடுநிலை வகித்தோம். அதற்காக விடுதலைப் புலிகளால் நாங்கள் பட்ட வேதனை இருக்கிறதே சொல்லி மாளாது. நாளை ஈழம் என்ற ஒன்று மலர்ந்ததென்றால் இன்று சிங்களர்களிடம் சிறுபான்மையினரான தமிழர்கள் படும் துயரத்தைவிட அதிக துயரத்தை தமிழர்களிடம் நாங்கள் பட வேண்டியிருக்கும்.

யாழ் நிலத்தில் இருந்த எங்கள் விளை நிலங்கள் முழுவதும் விடுதலைப் புலிகளால் கையக்கப்படுத்தப்பட்டன. எங்கள் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. எங்கள் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. எங்களில் பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் எங்களுக்கு இலங்கை முழுவதும் சென்றுவர வேண்டியிருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே நாங்கள் ஒற்றர்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம். எங்களில் சிலர் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். சிலர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு யாழ்பாணத்தில் இருந்த இஸ்லாமியர் அனைவரும் துரத்தியடிக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்? அழுத்திக் கேட்டால் நாங்கள்தான் மன்னிப்புக் கேட்டுவிட்டோமே என்று ஒரு அசட்டுத்தனமான பதில். அவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டால் நாம் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமாம்.

அந்த நாள் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. புலிகளின் வாகனம் அமைதியாக இருந்த தெருக்களுக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்தியபடியே நுழைந்தது. அதன் கூரையில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருந்தது. எல்லா இஸ்லாமியர்களும் ஓஸ்மானியா கல்லுரி வளாகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏதோ முக்கிய செய்தி சொல்லப் போகிறார்கள்… ஈழம் மலர்ந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆவலாக எல்லாரும் கூடினோம். இரண்டு மணி நேரத்துக்குள் எல்லா இஸ்லாமியரும் ஓடிப் போய்விடுங்கள்... என்று ஒற்றை வரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வீடு வாசல், நில புலன், கடை கண்ணிகள் அனைத்தையும் விட்டுவிட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் என்றென்றைக்குமாக தங்கள் பூர்விக மண்ணை விட்டு இடம் பெயர்க்கப்பட்டார்கள். கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ வேண்டிய கொடூரம். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று துரத்தப்பட்டவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை. நகரமே கல்லறைத் தோட்டமாகிவிட்டிருக்கும் சூழலில் அகதிகள் முகாம் வீடாகியிருக்கும் கதையைப் பெரிதாகச் சொல்லவந்துவிட்டாயே என்கிறீர்களா? அது சரிதான்.

அதோடு போயிருந்தால் உயிரோடு வாழ விட்டிருக்கிறார்களே அதுவே பெரிதென்று நினைத்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டிருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.

இலங்கை முழுவதிலும் இஸ்லாமியர்கள் சிறு சிறு குழுக்களாக வசித்து வந்தனர். ஒவ்வொரு சிறு குழுவுக்கும் ஒரு சிறிய மசூதி இருந்தது. காட்டாங்குடியிலும் ஒரு மசூதி இருந்தது. உலகிலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதுவும் ஒன்று. ஒரு நாள், தென்றல் காற்று மாலை நேரப் பிரார்த்தனைக்கான பாங்கு ஒலியைச் சுமந்தபடி இதமாகத் தவழ்ந்து சென்றது. அது அவர்களுக்கான மரண அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் மசூதி நோக்கி நடந்தனர்.

தெருக்களில் எல்லா ஊர்களையும் போலவே கூக்குரலும் கும்மளமுமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் விளையாட்டை நிறுத்திவிட்டு மசூதிக்கு உற்சாகத்துடன் ஓடினர். அக்ரம் அவர்களில் மிகவும் குட்டிப் பையன். ஆறு வயதுதான் ஆகியிருந்தது. அஜ்மல், ஜரூன், ரிஸ்வான் ஆகியோருக்கு பத்து வயதாகியிருந்தது. ஆஸ்ரஃபுக்கு 11 வயது. தல்ஹன், ஃபவுஸர் ஹஸன், ஆரிஃப், மகீன், கமாலுதீன், இம்தியாஸ் ஆகியோருக்கு 12 வயது. அன்ஸ், ஜவாத்க்கு வயது 13. ஜாஃபர், மொகம்மத் ஃபவுஸர், சஃபர் ஆகியோரின் வயது 14. 15 வயதான ஃபல்சான் தான் அந்தக் குழுவிலேயே அதிக வயது ஆனவன். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். எப்போதும் சேர்ந்தேதான் பள்ளிக்குச் செல்வார்கள். திரும்பி வருவார்கள். தெருவில் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள். ஒன்றாகத்தான் மசூதிக்குச் செல்வார்கள். அதனால்தானோ என்னவோ கடைசியில் ஒன்றாகவே படுகொலையும் செய்யப்பட்டார்கள்.

வழக்கம்போல் அன்று தொழுகைக்கு மசூதிக்குப் போனதும் கை, கால் கழுவிக் கொண்டு தங்கள் இடத்துக்குச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்தனர். அப்போது திடீரென்று மின்சாரம் போய்விட்டது. படுகொலை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த புலிகளின் வேலை அது. ஆனால், அன்று தொழுகைக்கு வந்திருந்த யாருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துக்கொண்டு மண்டியிட்டனர். தலை தாழ்த்தி வணங்கிவிட்டு நிமிர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இறைவன் இருக்கவேண்டிய சுவரில் கையில் துப்பாக்கிகளுடன் சாத்தான்களின் முரட்டு நிழல்கள். என்ன ஏது என்று உணர்ந்து கொள்வதற்குள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர் புலிகள். தொழுகையில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளான அந்த இஸ்லாமியர்கள் அல்லாவின் சன்னிதியில் அவர் முன்னாலேயே மரணத்தைத் தழுவினர். 147 பேர்... அல்லாவைத் தொழுது கொண்டிருந்தது மட்டுமே அவர்கள் செய்த தவறு.

விவசாயிகள், பள்ளி ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என போருக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனின் மனதில் மையங்கொண்டிருந்த பிரிவினைவாதப் புயலானது இலங்கையை நிர்மூலமாக்கிவிட்டிருக்கிறது. ரத்தமழையை முடிவற்றுப் பொழியும் வன்முறை மேகங்களை அது தொடர்ந்து அனுப்பிவந்தது. அமைதிக்கான பெருமரங்களை அது வேரோடு வீழ்த்தியது. சகோதரத்துவத்துக்கான கேணிகளை அது மண்ணைப் போட்டு மூடியது. ஸ்நேகத்தின் மின் இணைப்புகளை ஒரேயடியாகத் துண்டித்துவிட்டது. பரஸ்பர நம்பிக்கை எனும் பாலங்களை தரைமட்டமாக்கிவிட்டது. ஒருமைப்பாடு எனும் நெடுஞ்சாலைகளை நிரந்தரமாகத் தூர்த்துவிட்டது. புயல் கரையைக் கடந்துவிட்டது. ஆனால், வெள்ளம் இன்னும் வடியவில்லை.

சிங்களர்களின் அராஜகங்கள் குறித்து மட்டுமே பெருமளவில் பேசப்பட்டுவந்துள்ளது. விடுதலைப் புலிகளின் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரியவந்ததில்லை. இன அழித்தொழிப்பு என்பது சிங்கள அரசால் மட்டுமல்ல... புலிகளாலும் செய்யப்பட்டது. புலிகள் அமைப்பு இந்த நாசகாரச் செயல்கள் அனைத்தையும் செய்துவிட்டு, தமக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. மூன்றாவது சக்தி ஒன்று இப்படிச் செய்கிறது. தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விரோதத்தை வளர்க்க முயல்கிறது என்று பொய்யுரைகளைப் பரப்பி வந்தது.

அதுமட்டுமா... இத்தனை நடந்த பிறகும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் இஸ்லாமியர் தரப்பாக யாரையும் பேச அனுமதிக்கவிடாமல் தடுத்தும் வந்தது. சுனாமி தாக்குதல் நடந்தபோது அதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது இஸ்லாமிய சமூகத்தினர்தான். உலக நாடுகள் கொடுத்த நிவாரணப் பொருட்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்பினோம். சிங்கள அரசு இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று நார்வே தூதுக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால், புலிகள் அமைப்போ, எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்... தமிழர்கள் வேறு... இஸ்லாமியர்கள் வேறு அல்ல என்று சொல்லிவிட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஸ்லாமியர் தரப்பையும் அழைப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த சிங்கள அரசும் எங்களை ஏமாற்றிவிட்டது. ஏமாற்றங்களை நாங்கள் அமைதியாக சகித்துக் கொண்டுவந்திருக்கிறோம். எமது வருங்காலத் தலைமுறையும் அப்படியே சகித்துக் கொண்டு இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம். இனியும் ஓட முடியாது என்றொரு நிலைவருமானால் திரும்பி நின்று தாக்க ஆரம்பிப்பார்கள் எங்கள் இளைய தலைமுறையினர்.

(தொடரும்)

புத்தம் சரணம் கச்சாமி - 12

நெவர் அகெய்ன்… நெவர் அகெய்ன்
ஈழ தேவியைச் சிறையெடுத்த ராவணனா நீ
விபீஷண கருணம்மானுடன் சேர்ந்து உனை வீழ்த்திய ராமனா அவன்

மீளும் வழி தெரியாமல் சர்வதேச வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவா நீ
ஒரு பிடி மண்கூடத் தரமாட்டேன் எனச் சினந்து கருவறுத்து வென்றும்விட்ட
துரியோதனனா அவன்

வாக்களிக்கப்பட்ட பூமிக்கு கூட்டிச் செல்ல தவறிய மீட்பரா நீ..?
வன்முறையின் இன்னிசை கேட்டுப் பின்னால் திரண்ட எலிகளை ஆற்றில் முழ்கடித்த நவீன பைப்பரா நீ?

ஆக்கிரமிப்பாளனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட புருஷோத்தமனா நீ
மக்களின் உயிரைப் பணயம் வைத்து சாகசம் புரிய முயன்ற டான் க்விசாட்டா நீ

தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்ட புதிய ஹிட்லரா அவன்
சுதந்திரப் போரை ஆயுதமேந்தி நடத்தித் தோற்ற புதிய சுபாஷ் சந்திர போஸா நீ..?

நோயுற்ற குழந்தைக்கு கசப்பு மருந்தைத் தேனில் பொடித்துக் கொடுக்க முயன்ற தாதியா நீ
மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்த மருத்துவனா நீ

உன் மந்தைக் கூட்டத்தை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்ற மேய்ப்பனா நீ
அல்லது வழி தவறிய வெள்ளாடா நீ

மதங்கொண்ட யானையை மத்தகத்தில் அடித்து அடக்கிய பாகனா அவன்
புல்வெளியில் வலைவிரித்து பறவைக் கூட்டத்தைப் பிடித்த வேடனா

குஞ்சுகளைக் காப்பாற்ற கழுகை எதிர்த்த கோழியா நீ
மனித உருவில் திரியும் ஓநாயா அவன்

மென் விலங்கு தின்று பசியாற விதிக்கப்பட்ட சிம்மமா அவன்
தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட களிறா நீ

நீ தோற்றுப் போன தெய்வமா..? அல்லது தோற்றுப் போன சாத்தானா..?

அவன் வெற்றி பெற்ற சாத்தானா..? அல்லது வெற்றி பெற்ற தெய்வமா..?

அல்லது
இரண்டு சாத்தான்களுக்கிடையில்
தெய்வத்தின் குழந்தைகள் சிக்கிக் கொண்டனரோ

ஒரு கட்டத்தில் ரத்தமும் இன்னொன்றில் கண்ணீரும் தேங்கிக் கிடக்க
உலகம் கூடி வேடிக்கை பார்க்க
தலைகளை உருட்டி நீங்கள் ஆடிய சதுரங்க ஆட்டமா..?

நீங்கள் இதற்கு முன்னும் இருந்தவர்கள்தானா..?
இனியும் வரப் போகிறவர்கள்தானா..?

காலமெல்லாம் தமிழனாகவும் சிங்களனாகவும் வாழ முயன்றவர்கள்
கண நேரம் கூட மனிதனாக வாழ மறந்துவிட்டனரே…

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை
எது நடக்கப் போகிறதோ அதுவாவது நன்றாக நடக்க என்னதான் வழி..?

கடல் சூழ் இலங்கையின் கண்ணீர் காவியம்
ஆழி சூழ் உலகுக்கு அறியத் தரும் பாடம்தான் என்ன..?