<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394</id><updated>2012-01-11T07:48:25.478-08:00</updated><category term='ரஜினி ரசிகன்'/><category term='ராஜ பக்சே'/><category term='பிரபாகரன்'/><category term='ஈழம்'/><category term='அத்வானி'/><category term='இலங்கை'/><category term='போபால்'/><category term='ஆண்டர்சன்'/><category term='மன்மோகன் சிங்'/><title type='text'>B.R.Mahadevan</title><subtitle type='html'>நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலிருந்தும் வந்து சேரட்டும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>40</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-5025850617883548288</id><published>2010-10-16T08:39:00.001-07:00</published><updated>2012-01-11T07:48:25.548-08:00</updated><title type='text'>எந்திரனும் சுஜாதாவின் ஆவியும்..!</title><content type='html'>(இந்த கட்டுரையை அக்டோபர் இரண்டாம் தேதியே எழுதிவிட்டேன். இதை பிளாகில் போட்டால், தலைவரின் தளபதிகள் க்ளைமேக்ஸை மாற்றச் சொல்லி படையெடுத்துவிடுவார்கள். தயாரிப்பாளருக்கு க்ளைமேக்ஸை மாற்ற இன்னும் 100 கோடி செலவாகும். டைரக்டருக்கும் கஷ்டம். தலைவருக்கும் கஷ்டம். குறிப்பாக, இன்றைய தலைவிக்கும் ரொம்பக் கஷ்டம் என்பதால் உடனேயே வலையேற்றவில்லை. சரி அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்ன செய்ய... உண்மையை உணர்ந்தவருக்கு அதை ஊருக்கு உரைக்க முடியாமல் இருப்பது சாத்தியமா என்ன..? எனவே, இதோ... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு விமர்சனம்.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாக, நானும் எந்திரன் படத்தை முதல் நாள் இரவிலேயே பார்த்தேவிட்டேன். இன்னுமா பார்க்கவில்லை என்று கேட்பார்களே அதை எப்படித் தாங்கிக் கொள்வது என்ற பதற்றத்தில்தான் முதல் நாளே பார்த்தேன். அதற்குள்ளாகவும் பலர் கேட்டுவிட்டனர் என்பது வேறு விஷயம். பொதுவாக, இப்படியாக ஹைப் உருவாக்கப்படும் படங்கள் பெரிதாக ஊற்றிக் கொள்ளும் என்பதுதான் வழக்கம் என்பதால் மிகவும் பயந்தபடியேதான் இருந்தேன் (உதா : பாபா). அதோடு பாபாவில் ரஜினியும் கருணாஸும் இருந்தார்கள். இதிலும் அந்த காம்பினேஷன் இருப்பதால் படம் அவ்வளவுதான் என்று ரொம்பவே பயந்தேன். ஆனால், பாடல்களைக் கேட்டபோது கொஞ்சம் தைரியம் வந்தது. டிரெய்லர் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. டி-டேயில் நான்கு மணிக்கே பார்த்துவிட்டு வந்தவர்கள் படம் தப்பிச்சிக்கிச்சு என்று சொன்னதைக் கேட்டதும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு மிகுந்த உற்சாகத்தோடு புறப்பட்டுப் போனேன். இடைவேளை வரை படம் ரொம்பவே பிடித்திருந்தது. அதற்குப் பிறகுதான் வில்லன் ரஜினி அதகளம் பண்ணியிருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்ததால் என் எதிர்பார்ப்பு மேலும் ஏறியது.  அவர்கள் சொன்னதுபோலவே வில்லன் ரஜினி வந்த சீன்கள் அருமையாகவே இருந்தன. ஆனால், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, மலை உச்சிக்குக் கொண்டு போய் அப்படியே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டதுபோல் விழவைத்துவிட்டது. ஒரு படத்தின் கதாநாயகன் எப்போது தன் உச்சத்தை எட்ட வேண்டுமோ அப்போது பேட்டரி தீர்ந்த ரோபோ போல் பொத்தென்று விழுந்ததுபோல் ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அருமையான படத்தை ஷங்கர் ஏன் இப்படி வீணடித்துவிட்டார் என்று மனம் கதறியது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பது படத்தில் அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அது அருமையாகவும் இருந்தது. இடைவேளைக்கு முன்பாக வந்த ரயில் சண்டை, தீ விபத்துக் காட்சிகள், பிரசவம் பார்த்தல் என எல்லாமே கதையோடு அருமையாகப் பொருந்தி வந்திருந்தன. அதிலும் அருவாள், கத்தி, சைக்கிள் செயின் என இரும்பு ஆயுதங்கள் எல்லாம் ரஜினியைச் சுற்றி அணிவகுக்கும் காட்சியைப் பார்த்து உண்மையிலேயே பிரமித்துத்தான் போனேன். ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் பந்துபோல், பாம்பு போல், பிரமாண்ட எந்திர மனிதன் போல் ஆனதையெல்லாம் பார்க்கச் சகிக்கவே இல்லை. அந்த கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்கள் எடுபடாமல் போனதற்குக் காரணம் அதில் ரஜினி இல்லை. அதாவது படத்தின் கதாநாயகன் இல்லை. இடைவேளைக்கு முந்தைய க்ராபிக்ஸ் காட்சிகளில் கதாநாயகனும் இருந்தார். கிராபிக்ஸ் காட்சிகளும் இருந்தன. ஆனால், க்ளைமேக்ஸ் காட்சிகளில் வெறும் கிராபிக்ஸ் மட்டுமே இருந்தன. கதாநாயகன் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இது, ஒரு படத்தின் அடிப்படையான உணர்வுக்கு முற்றிலும் முரணானது. ஒரு திரைப்படம் தரும் அனுபவத்தை முற்றிலும் பாழாக்கும் செயல் இது. ஷங்கர் ஏன் இப்படிச் செய்தார்? கேனான் டாயல் சிண்ட்ரோம் காரணமா? ஒரு இயக்குநர், தான் படைத்த கதாபாத்திரம் தன்னைவிடப் பெருமையைத் தட்டிக் கொண்டு போய்விடக்கூடாது என்று நினைக்கலாமா? இயக்குநரின் குழந்தை அல்லவா கதாநாயகன். குழந்தையின் வெற்றி மீது அப்பாவுக்கு பொறாமை வரலாமா? இந்தப் படத்தின் வர்த்தக வெற்றியைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு அபார அனுபவமாக ஆகியிருக்க வேண்டிய ஒன்று புஸ் என்று போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பான இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் கடைசி பந்தில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டுமென்று ஒரு நிலை ஏற்பட்டால், தோனிதான் அதை அடித்து எடுக்க வேண்டும். அம்பயர் ஆறு நோபால்கள் கொடுத்தால் அது பார்க்கச் சகிக்குமா? அல்லது கோச் நாலைந்து ஹெலிகாப்டர்களை எடுத்துக் கொண்டு போய் சில்வர் அயோடைடை மேகத்தில் தெளித்து மழைய வரவைத்து, டக்வொர்த் லூயிஸ் கணக்கின்படி நாம் ஜெயித்தால் அதுவா நன்றாக இருக்கும். தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால்தானே அது நினைவில் நிற்கும் வெற்றியாக இருக்கும். ரஜினி சாதித்திருக்க வேண்டிய இடத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய பிழை. &lt;br /&gt;&lt;br /&gt;படம் இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த மன வருத்தத்துடன் பாருக்குப் போனேன். பல ரவுண்ட்கள் உள்ளே போனது. மனது பொருமிக் கொண்டே இருந்தது. படம் இடைவேளைவரை சுஜாதா எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டின் படி எடுக்கப்பட்டதுவரை அருமையாக இருந்தது. அதன் பிறகுதான் சொதப்பிவிட்டது என்று புலம்பித் தள்ளினேன். சுஜாதாவின் ஆத்மா இதை ஒருபோதும் மன்னிக்காது என்று சொன்னேன். சக குடிமகன் நான் சொன்னதை மறுத்தார். க்ளைமேக்ஸில் இடம்பெற்ற கிராபிக்ஸ் கிம்மிக்ஸ் சகிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், சுஜாதா இதைவிட பெரிதாக ஒன்றும் ஜல்லியடித்திருக்க மாட்டார் என்று சொன்னான். வாக்குவாதம் முற்றியது. சுஜாதாவிடமே கேட்பது என்று முடிவு செய்தோம். அவர் செல்லுக்குப் போன் போட்டோம். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்று பதில் வந்தது. லேன்ட் லைனுக்குப் போன் போட்டோம். அவர் இறந்துவிட்டாரே என்று சொன்னார்கள். எங்ககிட்ட  சொல்லவேயில்லையே என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்ய என்று யோசித்தோம். எப்படியும் சுஜாதாவிடம் கேட்டாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆவி அமுதா மூலம் சுஜாதாவிடம் பேசுவது என்று புறப்பட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா விஞ்ஞான ஆவி ஆயிற்றே. ஊடகம் வழியாகப் பேசுவாரா என்று சந்தேகமாக இருந்தது. எனினும், அவர் ஆத்மா கோட்பாடில் நம்பிக்கை கொண்ட வைஷ்ணவரும் கூட என்பதால் பேசும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்தோம். ஆவி அமுதாவைப் பார்க்க முடியவில்லை. வேறு ஒருவர் சிக்கினார். அவர் வீட்டில் சுஜாதாவுடன் பேசினோம். பொதுவாக ஆவிகள் நம் கைகளை நகர்த்தி எழுதித்தான் காட்டும். ஆனால், சுஜாதா மேலுலகத்துக்குப் போன பிறகு கம்யூனிக்கேஷனை கொஞ்சம் அப்கிரேடு செய்துவிட்டிருக்கிறார். அருள்வாக்கு சொல்வதுபோல் ஊடகத்தின் மீது இறங்கி நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார். என்னப்பா... எப்படி இருக்க? என்று கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. நல்லா இருக்கேன்... என்று சொல்லிவிட்டு எந்திரன் பார்த்துட்டீங்களா என்று கேட்டேன். ஏன்டா  பார்த்தோம்னு ஆயிடிச்சு என்று வருந்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எந்திரன் கதைக்கு அவர் எழுதிய க்ளைமேக்ஸ் வேறாம். அதைச் சொன்னார். அப்படியே ஸ்தம்பித்துவிட்டோம். ஷங்கர் ஏன் இப்படிப் பண்ணினார் என்ற வேதனை இப்போது கோபமாகவே மாறிவிட்டது. சுஜாதா சொன்ன க்ளைமேக்ஸ் இதுதான் : &lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் ரோபோ உருவான விதமாக சுஜாதா எழுதியிருந்ததே வேறு. உண்மையில் சிட்டியைக் குப்பை மேட்டில் இருந்து எடுத்து வந்ததும் அது தனக்கு உயிர் கொடுக்கும்படி மனித வில்லனிடம் கெஞ்சுகிறது. அவரும் நியூரல் ஸ்கீமைச் சொன்னால்தான் உதவுவேன் என்கிறார். சிட்டியும் அதை காப்பி செய்து தந்துவிடுகிறது. உடனே மனித வில்லன் டபுள் கேம் ஆடுகிறார். தான் ஏற்கெனவே உருவாக்கிய ரோபோவுக்கு உயிர் கொடுத்து அதை வில்லனாக ஆக்குகிறார். அதுவும் ரஜினிதான். ஆனால், சிட்டியின் மூளையில் ரெட் சிப்பை பொருத்தி வில்லனாக ஆக்கவில்லை. சிட்டியிடம் இருந்து நியூரல் ஸ்கீம் கிடைத்ததும் அதை மறுபடியும் செயல் இழக்க வைத்துவிடுகிறார். அதன் பிறகு வில்லன் ரஜினியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஐஸ்வர்யாவைத் தேடிப் போகிறார். கல்யாண மண்டப காட்சிகள் சுஜாதா சொன்ன படியேதான் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதன் பிறகுதான் சுஜாதாவின் மேதமை வெளிப்படுகிறது. வசீகரன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சனாவை அடைய விடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பதால் வில்லன் ரஜினி, ஆண்கள் அனைவரையும் கொன்று தீர்க்கும்படி தான் உருவாக்கிய க்ளோன் ரோபோக்களிடம் சொல்கிறார். ஒரு நாள் இரவில் படுத்து மறு நாள் காலையில் எழுந்திருப்பவர்கள் படு கோரமான முறையில் ஆண்கள் ஆங்காங்கே கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறார்கள். ஊரே குலை நடுங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் ரோபோ இருக்கும் இடத்தை அழிக்க ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் குண்டுகளுடன் வருகிறார்கள். ஆனால், வில்லன் ரஜினியோ ஏராளமான குழந்தைகளைக் கடத்தி வந்து கேடயமாகப் பயன்படுத்தி தப்பித்துவிடுகிறார். மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். கார் பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்ய முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான கார்களைக் கடத்திக் கொண்டுவந்துவிடுகின்றன ரோபோக்கள். அதிலும் கார் பேட்டரியில் இருந்து கரெண்ட் எடுப்பதை வில்லன் ரஜினி தெரிந்து கொள்ளும் காட்சி இருக்கிறதே சுஜாதாவின் வார்த்தைகளில் கேட்கவேண்டும் அதை. உலகமே இருண்டு கிடக்கிறது. எல்லா ரோபோக்களும் செயல் இழக்க ஆரம்பித்துவிட்டன. அப்போது வில்லன் ரஜினி மின்சாரத்தைத் தேடி தெருவில் இறங்கி ஓடுகிறார். எங்கோ தூரத்தில் சிறிதாக வெளிச்சம் தெரிகிறது. நடு வழியில் டயர் பங்சரான ஒரு கார் நிற்கிறது. இரண்டு பேர், கார் பேட்டரியில் இருந்து 40 வாட்ஸ் பல்பை எரிய வைத்து டயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருண்ட பின்னணியில் இருந்து வில்லன் ரஜினியின் ஆச்சரியத்தால் மலர்ந்த விகாரமான முகம் மட்டும் வெளிச்சத்துக்குள் எட்டிப் பார்க்கும் காட்சி அப்படியே முதுகுத் தண்டைச் சில்லிடவைத்தது. அடுத்ததாக, கார் பேட்டரிகளும் சீக்கிரமே காலியாகிவிடுகின்றன. வில்லன் உடனே பல விஞ்ஞானிகளைக் கடத்தி வந்து சோலார் பேனல்களை உருவாகச் சொல்லிவிடுகிறார். அப்படியாக மின்சாரம் தடைபடாமல் கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையில் வசீகரன், ரோபோபோல் வேடம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்துவிடுகிறார். அங்கு சிட்டி இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது. ரகசியமாக அந்த இடத்துக்குப் போய் அதை உயிர்ப்பித்துவிடுகிறார். அதன் பிறகு கதை சிட்டிக்கும் வில்லன் ரோபோவுக்குமான சண்டையாக மாறுகிறது. சுஜாதா இதில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். உண்மையில் ஷங்கரின் எந்திரனில் வில்லன் ரஜினி வந்ததும் சிட்டி காணாமல் போய்விடுகிறது! அது கதையின் பலவீன பகுதி. சிட்டிதான் கதாநாயகன். கடைசி வரை அந்தக் கதாபாத்திரம் படத்தில் இருந்திருக்க வேண்டும். மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையிலான சண்டை என்பதும் இந்தப் படத்தில் வலுவாக வரவில்லை. அதுவும்போக சனா மீதான காதல் என்பது இன்றைய எந்திரன் படத்தில் மிகவும் பலவீனமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிஅது. அதுதான் பிரதான ட்விஸ்டே. நல்ல மனிதன் உருவாக்கிய நல்ல எந்திரத்துக்கும் கெட்ட மனிதன் உருவக்கிய கெட்ட எந்திரத்துக்கும் இடையிலான சண்டை என்பதுதான் சுஜாதாவின் திரைக்கதை. அங்குதான் அவர் தர்க்கபூர்வமாகவும் வெற்றிபெறுகிறார். ஷங்கர் தோற்கும் இடமும் அதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கதை மேலும் வேகம் பிடிக்கிறது. வசீகரனும் சிட்டியும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டுகிறார்கள். அதற்கு முன்பாகக் கதையில் முக்கியமான ஒரு காட்சி வருகிறது. சிட்டிக்கு மறுபடியும் உயிர் கொடுத்ததும் அது ஒரு நிபந்தனை விதிக்கிறது. வில்லன் ரஜினியையும் அவர் உருவாக்கிய க்ளோன் படையையும் காலி செய்ய வேண்டுமானால், தனக்கு சனாவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறது. முதலில் மறுக்கும் வசீகரன் பிறகு சம்மதிக்கிறார். சனா தனக்கு சத்தியம் செய்து தரவேண்டும் என்று சிட்டி கேட்கிறது. அதன்படியே சனாவும் சத்தியம் செய்து தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டி வில்லனை வீழ்த்தத் திட்டம் போடுகிறது. முதல் கட்டமாக பல சனாக்களை உருவாக்கி வில்லனைக் குழப்புகிறது. க்ளோன் சனாக்களில் உண்மையான சனாவைக் கண்டுபிடிக்க வில்லன் ஒரு யோசனை செய்கிறார். சனா ஆசையாக வளர்த்த பொமனேரியன் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து மோப்பம் பிடிக்க விடுகிறார். ஆனால், ஏற்கெனவே சிட்டி இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்து உண்மையான சனாவுக்கும் மெட்டல் கவசம் அணிவித்திருப்பார். எனவே, நாய்க்குட்டியால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். கோபப்படும் வில்லன் நாய்க்குட்டியைக் கொல்ல முயற்சி செய்வார். கழுத்தைப் பிடித்து நெரிப்பார். நாய்க்குட்டி கதறித் துடிக்கும். அதன் கண்கள் மெள்ள சிவப்பாகி வெளியே பிதுங்க ஆரம்பிக்கும். நாய்குட்டி படும் வேதனையைப் பார்க்கப் பொறுக்காமல் க்ளோன் கூட்டத்தில் இருந்து சனா பதறி ஓடிவந்துவிடுவார். அப்படியாக சனாவை வில்லன் கண்டுபிடித்துவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சிட்டி தான் உருவாக்கிய சனா போன்ற ரோபோவில் ஒன்றின் கழுத்துக்குள் ரத்தம் நிரம்பிய பிளாஸ்டிக் பையைப் பொதிந்து வைத்து இன்னொரு திட்டம் தீட்டும். அந்த சனாவை கழுத்தில் கத்தியை வைத்துக் காட்டி கொன்றுவிடப் போவதாக வில்லனிடம் மிரட்டும். வில்லன் அதுவும் ஒரு ரோபாவாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருக்கவே கத்தியை அழுத்தி பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தத்தை சிட்டி வெளியே வரவைக்கும். இதைக் கண்டு வில்லன் ரோபோ அதிர்ச்சி அடைந்து சனாவைக் காப்பாற்ற வருவதற்குள் அந்த ரோபோவை மாடியில் இருந்து சிட்டி தள்ளிக் கொன்றுவிடும். சனா இறந்துவிட்டதாக மனமுடைந்து போகும் வில்லன் ரோபோ ஹேங்க் ஆகிக் கீழே விழுந்துவிடும். இறந்து கிடக்கும் வில்லனை ஒரேயடியாகச் செயல் இழக்க வைக்க  சிட்டி வேகமாக ஓடிப் போய் சனாவையும் வசீகரனையும் அழைத்துக் கொண்டு வரும். வந்து பார்த்தால் அந்த இடத்தில் விழுந்துகிடந்த வில்லன் ரோபோ மாயமாக மறைந்திருக்கும். மூவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் வில்லன் ரோபோவின் வெடிச் சிரிப்பு கேட்டுக் கொண்டே இருக்கும். உண்மையில் மயங்கியதுபோல் நடித்த வில்லன் ரோபோ, வசீகரனையும் சிட்டியையும் ஒரு சிறையில் போட்டுப் பூட்டி வைக்கும். மனித நடமாட்டமே இல்லாத இடத்துக்கு சனாவைக் கொண்டு செல்ல முடிவெடுக்கும். அவருடைய மெமரியில் அப்படியான இடமாகச் சொல்லப்படும் இடம்தான் மச்சு பிச்சு மலை. சுஜாதாவின் கதையில் மிகவும் இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இடத்தை ஷங்கர் வெறும் பாட்டுக்கான லொக்கேஷன் என்று கேவலப்படுத்தியிருப்பார். அது மட்டுமில்லாமல் இதை ஒரு பெருமையாகவும் பலர் சொல்கிறார்கள். யாருமே போகாத இடத்துக்குப் போவது என்றால் டிராவல் ஏஜென்ஸிக்குத்தானே அந்தப் பெருமை போக வேண்டும். அதை எப்படி டைரக்டரின் பெருமையாகச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மச்சு பிச்சு மலைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வில்லன் ரோபோ தனக்குத் துணையாக இரண்டு ரோபோக்களை மட்டும் அழைத்துக் கொண்டுசெல்கிறார். அந்த இரண்டு ரோபோக்களை வீழ்த்திவிட்டு வசீகரனும், சிட்டியும் வில்லனுடன் அவருக்குத் தெரியாமல் புறப்பட்டுவிடுகிறார்கள். அப்படியாக மச்சு பிச்சு மலையில் நான்கே பேர் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஆரம்பிக்கிறது க்ளைமேக்ஸ் சண்டை. மேட்ரிக்ஸ் படத்தில் நடந்த இறுதி சண்டைக் காட்சி போல் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் அனல் பறக்கும் சண்டை நடக்கிறது. வில்லன் ரஜினி, சிட்டியை மூளைச் சலவை செய்யப் பார்க்கிறது. நாமெல்லாம் எந்திரங்கள் மனிதர்களை நம்பாதே. அவர்கள் உனை ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்லிப் பார்க்கிறது. ஆனால், முடியாது நான் சனாவைக் காதலிக்கிறேன். அவளுக்காக எதையும் செய்வேன் என்றூ சிட்டி அப்பாவியாகச் சொல்கிறது. நீ சனாவைக் காதலிப்பது நிஜம்தான். ஆனால், சனா உன்னைக் காதலிக்கவில்லை. அவள் உன்னை ஏமாற்றிவிடுவாள் என்றூ வில்லன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறது. ஆனல், சிட்டி அதை நம்பாமல் வில்லனை அழிப்பதில் குறியாக  இருக்கிறது. ஆனால், வில்லன் ரோபோவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிட்டி திணறுகிறது. ஒரு கட்டத்தில் முழு வலிமையையும் இழந்து கிடக்கும் சிட்டிக்கு சனா ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டுக்கிறாள். சனா தந்த உற்சாகத்தால் வீறு கொண்டு எழும் சிட்டி, அந்த அதகளச் சண்டையில் கடைசியில் வில்லன் ரஜினியைக் கொன்றுவிடுகிறது. வசீகரனையின் சனாவையும் சிட்டி பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகுதான் எமோஷனல் க்ளைமேக்ஸ் வருகிறது. சனாவுக்கு சிட்டியுடன் திருமணம் நிச்சயமாகிறது. சிட்டிக்கு நம்மை வைத்து காமெடி கீமெடி செய்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்கிறது. அனைவரும் சிட்டிதான் மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள். தாலி கட்டுவதற்கு முன்பாக, சனா தனக்கு காஷ்மீர் ரோஜா வேண்டும் என்று சிட்டியிடம் கெஞ்சிக் கேட்கிறாள் (படத்தின் ஆரம்பகட்ட விளம்பரத்தில் எந்திரன் ரஜினி ஒரு ரோஜாவை முகருவது போன்ற காட்சி இடம்பெற்றது நினைவிருக்கிறதா) . இதோ ஒரு மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுகிறேன் என்று சிட்டி பறக்கிறது. காஷ்மீரில் அது பனிக் காலம். ரோஜா எங்குமே தென்படவில்லை. சிட்டி, பனி மலையில் ஒற்றை ரோஜாவைத் தேடி அலைகிறது. கடைசியாக  பனி மூடிய ஒரு தோட்டத்தில் ரோஜாக்கள் ஏராளம் உறைந்து இருப்பது தெரிகிறது. அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்ததுபோல் சிட்டி அந்த தோட்டத்தையே பெயர்த்து ஹெலிகாப்டரில் வைத்துக் கொண்டுவருகிறது. ஆனால், அது வந்து சேர்வதற்குள் வசீகரனுக்கும் சனாவுக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. சிட்டி அதிர்ச்சியில் உறைந்துபோகிறது. ஒவ்வொருவரையும் பார்த்து சோகமாக வசனம் பேசிவிட்டு கடைசியில் சனாவிடம் வருகிறது. சனா ஏதோ சொல்ல வாயெக்கிறார். யூ டூ சனா... என்று கேட்கிறது. முதலும் கடைசியுமாக சிட்டியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிகிறது. அதன் பிறகு சிட்டி வேகமாக கண்ணாடி லேபுக்குள் போய் கதவை பூட்டிக் கொள்கிறது. சனாவின் நினைவுகள் ஒவ்வொன்றாக மனதில் அலைமோத வேதனை தாங்காமல் சிட்டி தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து தற்கொலை செய்து கொள்கிறது. இதுதான் சுஜாதா எழுதிய திரைக்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;இது எமோஷனலாகவும் இருக்கிறது. தர்க்கபூர்வமாகவும் இருக்கிறது. சுவாரசியமாகவும் இருக்கிறது. இதிலும் கிராபிக்ஸுக்கான சகல வாய்ப்புகளும் இருக்கின்றன. ராணுவம் ஹெலிகாப்டரில் குண்டுகள் வீச வரும்போது இரும்புச் சங்கிலியை வீசி வானில் மிதக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களை ஒன்றுடன் ஒன்று மோதி வெடிக்கச் செய்யும் காட்சி மிகவும் சவாலான ஒன்று. அதோடு, மச்சுபிச்சு மலைக்கு நான்குபேரும் புறப்பட்டுப் போகும் காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் சேஸும் சுஜாதா எழுதியிருந்தார். சிவாஜி படத்தில் சுமோ காருக்குள் இருந்தபடியே நடக்கும் சண்டை போல் இதில் ஹெலிகாப்டர் சேஸ்! வில்லன் ரஜினியின் ஹெலிகாப்டரை பத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் துரத்துகின்றன. வானில் நடக்கும் அந்த சேஸ், கிராபிக்ஸ் டீமுக்கான சரியான சவால். கடைசியாக மச்சு பிச்சு மலையில் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் நடக்கும் ஒன் டு ஒன் சண்டையை எப்படியெல்லாமோ பிரமாதமாக எடுக்கலாம். இந்த காட்சிகளில் என்ன கிராபிக்ஸ் பயன்படுத்தினாலும் அதில் கதாநாயகனும் இருப்பார் என்பதால் அது தந்திருக்கும் அனுபவம் அதி அற்புதமாக இருந்திருக்கும். ஷங்கர் கோட்டைவிட்டுவிட்டார். உண்மையில் சுஜாதா எழுதிய க்ளைமேக்ஸ் ஷங்கருக்குக் கிடைக்கவில்லையா? அல்லது அவர் உண்மையிலேயே தனக்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்று நினைத்து இப்படிச் செய்துவிட்டாரா? எது எப்படியானாலும் நாட்டாமை க்ளைமேக்ஸை மாத்து என்று கலாநிதி மாறன் வீட்டு வாசலிலும் ஷங்கர் வீட்டு வாசலிலும் நின்று கொண்டு சுஜாதாவின் ஆத்மா கதறிக் கொண்டிருப்பது மட்டும் நிச்சயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-5025850617883548288?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/5025850617883548288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5025850617883548288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5025850617883548288'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரனும் சுஜாதாவின் ஆவியும்..!'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-5646335643298792478</id><published>2010-10-16T08:14:00.000-07:00</published><updated>2010-10-16T08:14:57.054-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 22</title><content type='html'>யாரைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்…&lt;br /&gt;படைத்த கடவுளையா..?&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேடிக்கை…&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் கூடி உதிரத் தேரை இழுப்பது நீங்கள்&lt;br /&gt;பழி படைத்தவனின் மீதா..?&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையின் சாத்தானை பீடத்தில் ஏற்றினீர்கள்&lt;br /&gt;பிரிவினையின் பதாகையை உச்சியில் கட்டிவிட்டீர்கள்&lt;br /&gt;வெறுப்பின் பரிவட்டத்தை தலையில் கட்டிக் கொண்டு ஒருவர் கையசைக்க&lt;br /&gt;ஊர் கூடி இழுத்தீர்கள் உதிரத் தேரை&lt;br /&gt;ஒற்றைச் சார்பு சரித்திரங்களை சக்கரங்களாக்கி&lt;br /&gt;எதிர் தரப்புப் பிழைகளைச் சாட்டையாக்கி&lt;br /&gt;வேற்றுமையின் விரிசல்களை வடங்களாக்கி&lt;br /&gt;உருண்டோடச் செய்கிறீர்கள் உங்கள் தேரை&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளோ&lt;br /&gt;அன்பின் விக்கிரகங்களை உங்களிடம் ஒப்படைத்திருந்தார்&lt;br /&gt;பரஸ்பர நட்பின் கற்பூர ஒளியில் நீங்கள் தொழுதிருக்க வேண்டிய தெய்வம் அது.&lt;br /&gt;அஹிம்சையின் முரசுகள் அதிர&lt;br /&gt;கருணையின் வீதிகளில் ஓடியிருக்க வேண்டிய தேர் &lt;br /&gt;வேறொன்று மனிதர்களே…&lt;br /&gt;அவர் சமாதானத்தின் வெண் குதிரைகளை அனுப்பியிருந்தார்&lt;br /&gt;அதை நீங்கள் வெறும் பொம்மையாக்கிவிட்டீர்கள்.&lt;br /&gt;பன்முகத்தன்மையின் வண்ணமய ஆலவட்டங்களைப் பரிசளித்திருந்தார்&lt;br /&gt;நீங்கள் வேதனையின் கறும் பூதகணங்களைச் செதுக்கிக் கொண்டீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன&lt;br /&gt;இயேசுவை அனுப்பினார்&lt;br /&gt;இன்ன செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் பாராட்டச் சொன்ன &lt;br /&gt;வள்ளுவரை அனுப்பினார்&lt;br /&gt;போரே கூடாதென்று போதித்த  &lt;br /&gt;புத்தனை அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களோ அவர்களைப் புறந்தள்ளினீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதத்தை கையில் ஏந்தும் தமிழன்  &lt;br /&gt;வள்ளுவரையன்றோ கொல்கிறான்&lt;br /&gt;வன்முறைப் பாதையில் போகும் பவுத்தன் &lt;br /&gt;புத்தரையன்றோ மிதித்துச் செல்கிறான்&lt;br /&gt;தந்திரங்களில் ஈடுபடும் கிறிஸ்தவன் &lt;br /&gt;ஏசுவையன்றோ ஏமாற்றுகிறான்.&lt;br /&gt;கடவுள்&lt;br /&gt;குளிர் காய தீயைக் கொடுத்தார்&lt;br /&gt;நீங்கள் உங்கள் குடில்களைக் கொளுத்திக் கொண்டீர்கள்&lt;br /&gt;வழுக்கல் நிலத்தில் ஊன்றிக் கொள்ள கைத்தடிகளைக் கொடுத்தார்&lt;br /&gt;நீங்கள் அதைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியை மட்டும் தான் படைத்தார்.&lt;br /&gt;எல்லையில் முள் வேலி பதித்து&lt;br /&gt;தேசங்களை உருவாக்கிக் கொண்டது நீங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை மட்டும் தான் படைத்தார்&lt;br /&gt;அகதிகளை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆணையும் பெண்ணையும் மட்டும் தான் படைத்தார்&lt;br /&gt;சிங்களராகவும் தமிழராகவும்&lt;br /&gt;இந்துவாகவும் இஸ்லாமியராகவும் &lt;br /&gt;யூதராகவும் கிறிஸ்தவராகவும் பிரித்துக் கொள்(ல்)வது நீங்கள்தான்&lt;br /&gt;&lt;br /&gt;பறத்தலை பறவைக்கு மட்டுமே விதித்திருந்தார்&lt;br /&gt;கொத்து குண்டுகளை வீசும் விமானங்களை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மரப்பொந்துகளையும் குழிகளையும் ஊர்வனவற்றுக்கே ஒதுக்கியிருந்தார்&lt;br /&gt;பதுங்குகுழிகளை நீங்களே படைத்துக் கொண்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலியை மட்டுமே உங்களுக்குக் கொடுத்தார்&lt;br /&gt;வெறுப்பின் விஷம் தோய்ந்த வார்த்தைகளை உமிழ்வது நீங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளை மட்டுமே கொடுத்திருந்தார்&lt;br /&gt;அவை ஏந்திய துவக்குகள் அவர் கொடுத்தவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நகங்களையும் பற்களையும் மட்டுமே கொடுத்திருந்தார்&lt;br /&gt;ரத்தக்கறைகள் அவருடையவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றுக் கழுத்தையும் விரிந்த இடையையும்தான் தந்திருந்தார்.&lt;br /&gt;சயனைடும், பெல்ட் வெடிகுண்டும் அவர் தந்தவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மழையைக்கூட ஒற்றைத் துளிகளாகத்தான் அனுப்புகிறார்&lt;br /&gt;அணைகளைக் கட்டி வெள்ளத்தை வருவித்துக் கொள்வது நீங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைக் கூரையின் கீழ் உங்களைப் படைத்தார்&lt;br /&gt;நீங்கள் தனித் தனி வீடுகளைக் கட்டிக் கொண்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அணையா இரு விளக்குகளை எரியவிட்டார்&lt;br /&gt;நீங்கள் அதன் ஒளியில் இருந்து உங்களை மூடிக் கொண்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை வாழ அனுப்பினார்&lt;br /&gt;நீங்கள் செத்து மடிகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலைகளை உலகின் ஓரங்களில்தான் உறைய வைத்தார்&lt;br /&gt;கண்ணிவெடிகளையும் வெடிகுண்டுகளையும் &lt;br /&gt;காலடியில் பதித்துக் கொண்டது நீங்கள்தான்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் முறையிட வேண்டிய நீதிமன்றம் இது அல்ல…&lt;br /&gt;குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் அவரல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஹிட்லரை அனுப்பியதற்கு பதில் கேட்டீர்கள்&lt;br /&gt;இன்று பிரபாகரனையும் ராஜபக்சேவையும் அனுப்பியதற்கு பதில் கேட்கிறீர்கள்&lt;br /&gt;அற்ப மானிடர்களே…&lt;br /&gt;ஹிட்லரையும்&lt;br /&gt;பிரபாகரனையும்&lt;br /&gt;ராஜபக்சேவையும் அனுப்பிய அதே கடவுள்தான்&lt;br /&gt;காந்தியையும் அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி…&lt;br /&gt;நீங்கள் தொழ மறந்த தெய்வம்&lt;br /&gt;பின்பற்றத் தவறிய வழிகாட்டி&lt;br /&gt;அவர்&lt;br /&gt;அடக்குமுறையின்  தீயை அஹிம்சையின் நீரால் அணைக்கச் சொன்னார்.&lt;br /&gt;அதிகாரத்தின் அந்தகாரத்தை அன்பின் சிறு அகல் விளக்கால் விரட்டச் சொன்னார்.&lt;br /&gt;வெறும் வார்த்தையாக மட்டுமா சொன்னார் &lt;br /&gt;வாழ்ந்தும் காட்டினாரே &lt;br /&gt;அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்&lt;br /&gt;கத்தியின்றி…&lt;br /&gt;ரத்தமின்றி… &lt;br /&gt;அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவத்தின் சாம்ராஜ்ஜியங்களை&lt;br /&gt;அன்பின் சாமான்யர்களைக் கொண்டு வெல்லும் ஒரு போரை அவர் முன்னெடுத்தார்&lt;br /&gt;அவர் பிறந்த தேசத்தைவிட &lt;br /&gt;அவர் விட்டுச் சென்ற தேசம் சிறப்பாக அன்றோ இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ஒரு மன்னன்தான்&lt;br /&gt;அகம்பாவத்தின் கிரீடம் தரிக்காத தலையை உடையவர்&lt;br /&gt;ஆணவத்தின் கவசங்கள் மூடாத மார்பை உடையவர்&lt;br /&gt;தியாகத்தின் உடைவாளை இடையில் தரித்திருந்தார்&lt;br /&gt;சமரசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்&lt;br /&gt;சத்தியத்தின் கைத்தடியை ஊன்றி நடந்தார்&lt;br /&gt;அவர் அமர்ந்த நாற்காலி சிம்மாசனமானது.&lt;br /&gt;அவர் நடந்த பாதை ராஜ பாட்டையானது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவும் உலகுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது.&lt;br /&gt;இலங்கையும் ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காந்தி எப்படிப் போரிட வேண்டும் என்று காட்டினார்.&lt;br /&gt;பிரபாகரனுன் ராஜபக்சேயும் எப்படிப் போரிடக்கூடாது என்று காட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலைவிட&lt;br /&gt;கோயிலுக்கான பாதை பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றார் காந்தி&lt;br /&gt;நீங்கள் அவரைப் புறக்கணித்தீர்கள்.&lt;br /&gt;குப்பை மேடுகளையும் சாக்கடைகளையும் கடந்து &lt;br /&gt;தேவாலயத்தை அடையமுடியாது என்றார் அவர்&lt;br /&gt;நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.&lt;br /&gt;மூன்று முறை அல்ல… &lt;br /&gt;முன்னூறு முறைகள்…  &lt;br /&gt;மூவாயிரம் முறைகள்…&lt;br /&gt;அவரை மறுதலித்ததன்  மூலம் நீங்கள் கடவுளை மறுதலித்தீர்கள்&lt;br /&gt;கடவுளை மறுதலித்ததன் மூலம் நீங்கள் உங்களையே மறுதலித்துக் கொண்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நல்லதொரு வீணையை மட்டுமே கொடுத்தார்&lt;br /&gt;நலங்கெடப் புழுதியில் எறிந்தது நீங்கள்… நீங்கள் மட்டுமே…&lt;br /&gt;&lt;br /&gt;மேடை அவருடையதுதான்&lt;br /&gt;நாடகமோ உங்களுடையது…&lt;br /&gt;திரைக்கதை&lt;br /&gt;வசனம்&lt;br /&gt;நடிப்பு எல்லாம் உங்களுடையது.&lt;br /&gt;அவரோ பார்வையாளன்.&lt;br /&gt;திரைச்சீலை விழும் நேரம் வரை&lt;br /&gt;பிரமாண்ட அரங்கில் &lt;br /&gt;தன்னந் தனியனாக அமர்ந்து பார்க்க நிர்பந்திக்கப்பட்ட&lt;br /&gt;வெறும்  பார்வையாளன்&lt;br /&gt;&lt;br /&gt;(இறுதி பாகம் / முழு வடிவம் : விரைவில் புத்தக வடிவில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-5646335643298792478?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/5646335643298792478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5646335643298792478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5646335643298792478'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/22.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 22'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-7947692389584547222</id><published>2010-10-13T18:20:00.000-07:00</published><updated>2010-10-13T18:20:36.865-07:00</updated><title type='text'>புத்தம்  சரணம் கச்சாமி - 21</title><content type='html'>முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்களே. அதுபோல்தான் ஆகிவிட்டது. போரை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர்கள் தமது பலம் என்ன..? எதிரியின் பலம் என்ன என்பதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். நம்மால் வெல்ல முடியுமா..? எவற்றையெல்லாம் இழக்க நேரிடும் என்பதைக் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. அதுகூடப் பரவாயில்லை... நாம் ஆரம்பித்திருக்கும் போர் நியாயமானதுதானா..? என்று ஒரு நொடியாவது யோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். வெல்ல முடியாத எதிரியாக இருந்தாலும் வெல்லப்பட வேண்டியவன் என்றால் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கிவிடலாம். நம் பக்கம் இருக்கும் தார்மிக பலம் நாம் தோல்வியுற்றாலும் வெற்றியடைந்ததாகவே பெருமிதப்பட வைக்கும். ஆனால், ஈழத் தமிழர்கள் ஆரம்பித்தது வெல்ல முடியாத போர் மட்டுமல்ல... வெல்லக்கூடாத பேரும் கூட.  &lt;br /&gt;&lt;br /&gt;ஷெல் தாக்கி இறந்த பச்சிளம் குழந்தைகளையும் கை கால் இழந்த முதியவர்க¬ளையும் பெண்களையும் பார்க்கும்போது எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய...&lt;br /&gt;&lt;br /&gt;களையெடுக்கும்போது சில நெற்கதிர்களும் பிடுங்கப்பட்டுவிடுவதை யார்தான் தடுக்க முடியும்? இன்னொரு வகையில் பார்த்தால் இந்த மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல...  இவர்கள் கையில் தனி நாடு கேட்டு இடைவிடாது முழங்கும் ஏ.கே. 47கள் இல்லையே தவிர மனதின் மணல் படுகைகளில் இலங்கை தேசத்தின் மீதான வெறுப்புக்  கண்ணிவெடிகள்  ஏராளம் புதைந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்கள் ரகசிய ஆசைகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அப்படி வாக்களிக்கும்படி வற்புறுத்தபட்டிருந்தார்கள் என்று சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றாலும் இவர்கள் தங்களுக்காகத் தவறாகக் குரல் கொடுப்பவர்களை உள்ளூர விரும்பவே செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் என்று நம்பியவர் மீது முழு நம்பிக்கையை வைத்திருந்திருக்கிறார்கள். ‘பிரபாகரன் ஒருவருக்காக ஒட்டு மொத்த ஈழத் தமிழனமும் இறக்கத் தயாராக இருப்பதாக’ பிடிபட்ட ஒரு எளிய சாதாரண மனிதர் சிறையில் இருந்தபோது ஒரு நாள் முழங்கினார். ‘நாங்கள் பிரபாகரனை மட்டும்தான் பிடிக்க விரும்புகிறோம். அதற்கு அதுதான் வழி என்றால் அதையே செய்கிறோம்’ என்று சொன்னேன். வேறென்ன சொல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை குண்டு வீசுவதற்கு முன்னாலும் அறிவிப்பு செய்யத்தன் செய்கிறோம். அப்பாவி மக்களே  பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று. கடைசி கட்ட போரின் போது கூட 48 மணி நேர அவகாசம் கொடுத்தோம். புலிகளிடமிருந்து தப்பித்து வந்துவிடுங்கள் என்று. என்ன செய்ய 3 லட்சம் பேரில் 300 பேர் கூட வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் தரித்தவனைக் கொல். அப்பாவியை விட்டுவிடு என்று எல்லாரும் வாய் கிழியக் கத்துவதைப் பார்க்க முடிகிறது. யார் இங்கே அப்பாவி..? மறைந்து கிடக்கும் வேரன்றோ மரத்தைத் தாங்குகிறது. ஆயுதம் ஏந்தினால்தான் போராளியா..? ஆயுதம் ஏந்துபவனைப் பாதுகாப்பவனும் போராளிதானே. நீங்கள் உண்மையிலேயே அப்பாவியாக இருந்திருந்தால் புலிகள் நடத்தும் போர் எங்களுக்கானது அல்ல. நாங்கள் அவர்களுடைய வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா… கொலைகாரக் கூட்டம் கொள்ளையடித்து வருவதை நாசூக்காகப் பகிர்ந்து கொள்ள நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடந்தார்கள். என்ன செய்வது கொள்ளையடிப்பவனை நோக்கி எய்யும் அம்பு குறுக்கே வந்து நிற்பவரையும் குத்திக் கிழிக்கத்தானே செய்யும். பசுத் தோலைப் போர்த்தி அலைந்த புலிகளை உண்மையான பசுக்கள் அல்லவா விரட்டி அடித்திருக்க வேண்டும். பதுங்க இடம்கொடுத்து பாதுகாத்தன. பாவம் புலி வேட்டையில் பசுக்களும் இறந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை நாலு பேர் பார்க்க உடம்பெல்லாம் தடவி சோதனை போட்டோமாம். அமைதிப் பூங்காவாக இருக்கும் நாடுகளில் கூட விமான நிலையங்கள், ரயிவே நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எத்தனையோ சோதனைகள் போடத்தான்படுகின்றன. கையில் சந்தனமாலையையும் முகத்தில் புன்னகையையும் சுமந்து வரும் பேதைகளைப் பற்றி இந்தியாவுக்குத் தெரியாதா என்ன..? ஒரு டிசம்பர் ஆறுக்காக வருடா வருடம் அந்த சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. போர் நடக்கும் பூமியில் அது நடந்தால் குற்றமா..? எமது தேச காலண்டரில் எல்லா நாட்களுமே டிசம்பர்-6தானே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அப்பாவிகளைப் பற்றிய அக்கறை உண்மையில் தீவிரவாதிகளுக்கு அல்லவா இருந்திருக்க வேண்டும். நான் என் தேசத்துக்காக என் இலட்சியத்துக்காகப் போராடுகிறேன். போர்க்களத்துக்குச் செல்லும்போதெல்லாம் சீருடையை ஒரு வீரன் போல் அணிந்து கொள்வேன். எனது கால் படும் இடமெல்லாமே போர்க்களமாகிவிடும் என்பதால் அதை எந்த நேரமும் நான் அணிந்தே இருப்பேன். இது என் வீரத்தைக் காட்ட மட்டுமல்ல. நான் அப்பாவிபோல் உடை அணிந்தால் நாளை உண்மையான அப்பாவிகள் எல்லாருமே போராளியாக எண்ணப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, நான் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று வீரத்தோடு விவேகமாக அல்லவா சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், நீ அப்பாவிபோல் உடை அணிந்துகொண்டு அராஜகச் செயல்கள் செய்து வந்தாய். பின்விளைவுகளை நீ யோசிக்கவில்லை. நீ யாருக்காகப் போராடுவதாகச் சொல்கிறாயோ அவர்கள் மேல் உனக்கே அக்கறை இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி வரும். அதுமட்டுமல்லாமல் அந்த அப்பாவிகளையே பகடைக் காய்களாகவும் அவர்கள் பயன்படுத்தினார்கள். மருத்துவமனையில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்துவது, சட்டென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது… இப்படிச் செய்தால் என்ன ஆகும். வானில் இருந்து தாக்கும் விமானத்துக்கு எந்த திசையில் இருந்து குண்டு வீசப்பட்டது என்பது மட்டுமே தெரியும். அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மீது ஏவிகணைகள்  ஏவிக் கொன்றூவிட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. செஞ்சிலுவை சங்கத்தினர் எத்தனை தற்காலிக முகாம்களை புலிகளின் இந்த அராஜக நடவடிக்கையால் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கோரிக்கையில் இருந்த அநியாயத்தையும் அவர்களுடைய தவறான நடவடிக்கைகளையும் பார்த்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அழகாக நாடுவிட்டு நாடு பறந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கோ, ஐரோப்பாவுக்கோ, கனடாவுக்கோ படித்து திறமையை வளர்த்துக் கொண்டு போவதென்றால் ஈழத் தமிழர்களில் இத்தனை பேருக்கு அயல்நாட்டு வாசம் கிடைத்திருக்குமா என்ன..? துர் நாற்றம் மிகுந்த ஈழத்தின் ஜன்னல்களைச் சாத்திக் கொண்டார்கள். போர் அவர்களுக்கு ஒரு சொர்க்கத்தின் வாசலைத் திறந்தது. தமிழ் தேசம் என்ற பொய்யான கற்பிதத்தை மட்டும் விட்டுவிட முடிந்தவர்களுக்கு அது ஒரு பொன்னான வாய்ப்பு. பலர் அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், புலம் பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத செல்வச் செழிப்பு மிகுந்த நாடுகளுக்கு எளிதில் போய் ராஜ வாழ்க்கை வாழும் வாய்ப்புகள் இருந்த போதிலும் சிலர் அதைச் செய்யவில்லை. தமிழீழக் கனவை, அது கனவு மட்டுமல்ல கற்பனை என்று தெரிந்த பிறகும் கைவிடவில்லை. இலவம் பஞ்சு காயாகும் என்று காத்திருந்த முட்டாள் கிளியைப் போல் களமாடும் தலைவன் வென்று தருவான் அந்தக் கனவை என்று கண்களைத் திறக்கவே இல்லை. அவர்கள் நிரந்தரமாகத் தூங்க வேண்டிவந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்ய…தவறான இடத்தில் அல்லவா நம்பிக்கையை வைத்துவிட்டார்கள். தெய்வத்துக்கு பதிலாக சாத்தானை அல்லவா தொழுதுவிட்டார்கள். சாத்தான் தன்னால் என்ன முடியுமோ அதைப் பரிசளித்தது. தலை தாழ்த்தி வணங்கியவர்களின் தலையை வாங்கியது. கூட இருந்தவர்களைக் குழியில் தள்ளியது. நம்பிப் பின் தொடர்ந்த ஆட்டு மந்தையை விஷப் புல்வெளி நோக்கி ஓட்டியது. மரணத்தின் சதுரங்கக் கட்டங்களில் தன்னை நம்பிய மக்களைப் பகடைக் காய்களாக உருட்டி விளையாடியது.  மல்லிகை முற்றங்களில் குருதியைப் பெருகச் செய்தது. கொக்கு பூத்த வயல்வெளியை சாம்பல் காடாக்கியது. பாவம்… ஈழ வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் இருந்த இலைகளையெல்லாம் உதிர்த்தன தமிழ் மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பட்டுப் போய் நிற்கும் இன்றைய மரங்களைப் பார்க்கையில் எங்கள் மனம் ‘ஐய்யகோ…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே உச்சரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் போரின் உச்சகட்டத்தில் நடந்த கொடூரங்களை நினைத்துப் பார்க்கும்போது  புத்தனை வணங்கும் என் புத்தி பேதலித்தே போய்விடுகிறது. கழுத்தை நெரிக்கத் தொடங்கிய சிங்கள ராணுவத்தை தடுத்து நிறுத்த பொய்யான செய்திகளை இணைய நதிகளில் பெருக்கெடுக்கச் செய்தனர். அதைப் பார்க்கும் சர்வதேச சமூகம் எப்படியும் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். ஆனால், சாத்தான் ஓதிய இந்த வேதம் சர்வதேச சமூகத்தின் செவிகளில் எட்டவில்லை. சரியாகச் சொல்வதானால், வேதம் ஓதுவது சாத்தான் தான் என்பது நன்கு தெரிந்துவிட்டதால் அது மவுனம் காத்தது. சிங்கள ராணுவத்தின் டாங்கிகள் தார்ச்சாலையில் தன் இரும்பு நகங்களைப் பதித்தபடி முன்னேறத் தொடங்கியது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் வருகையில் இருள் அரக்கன் ஓடி ஒளிவதுபோல் புலிகள் ஒடுங்கினர். ஆனால், கதிரவனின் முன் காரிருள் தப்ப முடியுமா..? உண்மையில் நெருங்கி வந்த அந்த வெளிச்சத்தில்தான் மக்களுக்கு தாங்கள் இதுவரை தொழுதது தெய்வத்தை அல்ல என்பது தெரிய வந்தது. ஆனால், என்ன செய்ய… அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. சாத்தான் தன் கடைசி ஆயுதமாக தன்னை நம்பியிருந்தவர்களையே கவசமாகப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தப்பி ஓட முயன்றவர்களை கொடூரமாக கொன்று குவித்தது. அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களை சிங்கள அரசு கொன்றதாக பொய்யுரையைப் பரப்பியது. கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் கூட வரமாட்டேன் என்று சொல்லி பதுங்குகுழிக்குள் பதுங்கினார்கள் சிலர். அந்த பதுங்கு குழியைச் சுற்றி கண்ணிவெடியைப் பதித்து வைத்தார்கள் புலிகள். நான் நினைக்கிறேன், தனி ஒருவனுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா என்று கோபப்பட்ட ஒரு சொரணையுள்ள தமிழனுடைய துப்பாக்கி குண்டுதான் அநாதைப் பிணமாக ஆற்றோரம் அவனைக் கிடக்க வைத்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் கதை. ஒவ்வொரு தவறுக்கும் குறைந்த பட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவருடைய இனத்தில் இருந்து ஒவ்வொருவரையாக தூக்கிலிடுவதாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்தைத் தூக்கிலிட்டாலும் தண்டனையின் பட்டியல் முடிவுக்கு வந்திருக்காது. இலங்கைப் பிரச்னையில் கொல்லப்பட்ட அனைவரையும் உயிர்த்தெழ வைத்து ஒற்றை நபரைக் காரணம் காட்டும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டால் அனைத்துச் சுட்டு விரல்களும் வல்வெட்டித்துறையை நோக்கியே நீண்டிருக்கும். உயிர்த்தெழுபவர்கள் உண்மையே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-7947692389584547222?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/7947692389584547222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/7947692389584547222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/7947692389584547222'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/21.html' title='புத்தம்  சரணம் கச்சாமி - 21'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-4808386712637993698</id><published>2010-10-04T18:08:00.001-07:00</published><updated>2010-10-04T18:08:46.248-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி -20</title><content type='html'>என் பெயர் சமரவீரா... ராணுவ வீரன். &lt;br /&gt;&lt;br /&gt;சொந்த இனம் வந்த இனத்தால் வஞ்சிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டு நின்றவன். எம் முன்னோர்களை அடக்கி ஆண்டவன், எமது வீட்டில் கூலி வேலை செய்ய வந்தவன் வீட்டுக்கு வாரிசு என்று சொல்லிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன். தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப்படுவதைக் கேட்டு வளர நேர்ந்தவன். எனது தலைவர்களும், அமைச்சர்களும், பிரதம மந்திரிகளும், சகோதர சகோதரிகளும் கண் முன்னே கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க நேர்ந்தவன். அதனால், இனி பொறுப்பதற்கில்லை என்று பொங்கி எழுந்தவன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்ற கேள்வியே அபத்தமானது. சிங்களர்களின் சொந்த நாடான இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று பிரிட்டிஷார் காலத்தில், இலங்கைக்கு தேயிலைத் தோட்ட கூலி வேலைக்காக வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்கள். இன்னொரு பிரிவினர் தென்னிந்தியாவிலிருந்து வந்து எம் மக்களை அடித்துக் கொன்று வலுக்கட்டயமாக எங்களுடைய பகுதியை ஆக்ரமித்துக் கொண்டவர்கள். இரண்டு தரப்பினருக்கும் எமது பூமியில் இருக்கவே அதிகாரம் கிடையாது. இந்தநிலையில் தனி நாடு வேண்டுமென்று கேட்டால்..?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் விரிவாகச் சொல்வதானால்... இந்த இரண்டு தரப்பினரையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு வாழப் பழகித்தான் இருந்தோம். ஏனென்றால், நாங்கள் பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்தவரின் வழி வந்தவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்த புத்த பெருமானின் கைகளில் ஆயுதத்தைத் திணித்தது யார்..? இதற்கான விடை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இலங்கை பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1981-ல் கடைசியாக இலங்கையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு நியாயமற்ற போரை புலிகள் ஆரம்பித்துவிட்டதால் அதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால், போரை ஆரம்பித்தபோது புலிகள் சில காரணங்களைச் சொன்னார்கள். தமிழர்களுக்கு கல்வியில் உரிமை மறுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கிடைக்கவில்லை. உயர்மட்ட வேலைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்படுகிறார்கள்... அதனால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போரை ஆரம்பித்திருக்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாதத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாங்கள் அடக்கி ஒடுக்கியதால் நீங்கள் ஆயுதங்களை எடுத்தீர்களா..? அல்லது நீங்கள் ஆயுதத்தை எடுத்ததால் நாங்கள் அடக்கி ஒடுக்க வேண்டி வந்ததா..? என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு விடை தெரியவேண்டுமானால் 1981 கணக்கெடுப்பை ஒருவர் நன்கு படிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இலங்கையில் பவுத்தர்கள் 70 சதவிகிதம் இருந்தார்கள். இனரீதியாகச் சொல்வதானால் அவர்கள் சிங்களர்கள். இந்துக்கள் அதாவது தமிழர்கள் 15 சதவிகிதம் இருந்தார்கள். எஞ்சிய 15 சதவிகிதத்தினரில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இருந்தனர். தமிழர்களில் 66 சதவிகிதத்தினர் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்தனர். எஞ்சிய 33 சதவிகித தமிழர்கள் அமைதியாக, அன்பாக இலங்கையின் எஞ்சிய பகுதியில் அதாவது சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் வசித்தனர். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த வடக்கு, கிழக்கு பகுதியில் 3% சிங்களர்கள் மட்டுமே வசித்தனர். அவர்களும் காலப்போக்கில் இடம்பெயர்ந்துவிட்டனர். அல்லது பெயர்க்கப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி மறுக்கப்பட்டது என்றொரு கதை சொல்கிறார்களே அதற்கு வருகிறேன். சுமார் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் மருத்துவம் (42%), கால்நடை மருத்துவம் (50%), பொறியியல் (35%), விவசாயம் (30), கட்டுமானப் பொறியியல் (37%), பல் மருத்துவம் (62), பயோ சயின்ஸ் (33%) என பல்கலைகழகத்தில் இடம் பெற்றிருந்தனர். இதையா சிங்கள ஒடுக்குதல் என்கிறீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்பணித்துறையில் அவர்களுடைய பங்கு என்னவாக இருந்தது தெரியுமா..? பொறியாளர்கள் (44%), சர்வேயர்கள் (30%), மருத்துவர்கள் (35%), பல் மருத்துவர்கள் (25%), விஞ்ஞானிகள் (42%), பல்கலைக்கழக ஆசிரியர்கள் (25%), நீதித்துறைப் பணியாளர்கள் (17%), அக்கவுன்டன்ட்கள் (33%) என சமூகத்தின் அனைத்து உயர் மட்டப் பணிகளிலும் அவர்களுடைய பங்கு அவர்களுடைய மக்கள் தொகை சதவிகிதத்தைவிட பல மடங்கு அதிகமாகவே இருந்தன. ஒரு சிறுபான்மை இனம் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பதா அடக்குமுறை..?&lt;br /&gt;&lt;br /&gt;1983-ல் 15 கேபினட் அமைச்சர்களில் 3 பேர் தமிழர்களாக இருந்தனர். சீனா, ஃபிரான்ஸ், பிரிட்டன், மேற்கு ஜெர்மனி மற்றும் பல நாடுகளின் இலங்கை அரசின் சார்பிலான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். சிங்களர்கள் தமிழர்களை நம்பினார்கள்... தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அதைத்தான் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று சொல்லி விடுதலைப் புலிகள் போர் பிரகடனம் செய்தார்கள். ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்திடம் இதைவிட தன்மையாக நடந்துகொள்ளமுடியுமா..? பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும்... அப்படி அது செய்யும்போது அதுவரை பால் ஊற்றி வந்தவர்களே அதை அடித்தும் கொல்வார்கள். தவறு யார் மீது..?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக உலகில் நீதி, நியாயம் குறித்து ஒரே கோணத்தில் பார்க்கப்படுகிறது. எளியவன், எண்ணிக்கையில் குறைவாக இருப்பவன் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் குற்றம் என்று சொல்வது கிடையாது. வலியவன், எண்ணிக்கையில் அதிகமானவன் நல்லது செய்தால் அதையும் நாம் பாராட்டுவது கிடையாது. சரியோ தவறோ எளியவனைத் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடு... அதுதான் முற்போக்கு... நற்போக்கு... இந்த அணுகுமுறை சரியே கிடையாது. பெரும்பான்மைக்கு சேவகம் செய்யச் சொல்லவில்லை. பெரும்பான்மைக்கும் சம வாய்ப்பு கொடு என்றுதானே நாங்கள் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகமெங்கும் சிங்கள பேரினவாத அரசு குறித்து திட்டமிட்டு பொய்யுரைகள் பரப்படுகின்றன. சிறுபான்மையினத்தை நாங்கள் அடக்கி ஒடுக்குகிறோமாம். பாம்பு எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவை. ஆனால், அதை மடியில் போட்டுக் கொஞ்ச முடியாது. ஏனென்றால், பாம்பு தன் உமிழ் நீரை மற்றவர்களின் உயிரைப் போக்கும் விஷமாக மாற்றி வைத்திருக்கிறது. அடித்துக் கொல்லப்படுவதில் இருந்து அது தப்பிக்க முடியாது. அதனுடன் சுமுகமான உறவு ஒருபோதும் சாத்தியமில்லை. ஏதோ நாம் பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போவோம். அது பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. நாம் கொல்லாவிட்டால் கொல்லப்பட்டுவிடுவோம். பாம்பைக் கொல்லும்போது அதை மறைத்துவைத்துப் பாதுகாக்கும் புதருக்கும் தீ வைத்தாக வேண்டியிருக்கிறது. தீப்பந்தத்துடன் வரும்போது பூவும் பிஞ்சுமாக, இளந்தளிர்களைக் காற்றில் அசைத்தபடி இருக்கும் புதர் செடிகளைப் பார்க்கும்போது, இந்தத் தளிர்களையா நாம் எரியூட்டப் போகிறோம் என்று எமக்கும் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால், என்ன செய்ய பாம்புகள் பதுங்கியிருக்கும் புதர்கள் அல்லவா அது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்துக்கு இன்று நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். இது ஒரு கவித்துவமான நீதி... தினையை விதைத்தவன் தினையை அறுப்பான். வினையை விதைத்தவன் வினையை..! ஒரு பிரபாகரனுக்காக ஒட்டு மொத்த விடுதலைப் புலிகளும் தங்களை அழித்துக் கொள்ளத் தயார் என்று சொன்னார்கள். நாங்கள் என்ன செய்ய..? உண்மையில் நாங்கள் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல. ஈழப் பகுதியை மட்டுமல்ல ஈழத்தில் விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களையும் காப்பாற்றத்தான் நாங்கள் போராடினோம். தனி நாடு கேட்காத தமிழர்களை நாங்கள் ஒன்றும் செய்தது கிடையாது. இன்றும் கூட சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கொழும்புவில் இருக்கும் தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் தமிழர்களுக்குப் புரியும்வகையில் சொல்வதானால், உங்களுடைய தமிழகத்தை தெலுங்கர்கள் ஆட்சி செய்தனர். இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் அவர்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? ஆங்கிலேயர்கள் உங்களை ஆட்சி புரிந்தனர். இந்தியாவில் தங்கிவிட்ட ஆங்கிலோ இந்தியர்கள் வதவதவெனப் பெருகி நாட்டின் ஒரு பகுதியை அடைத்தபடி வளர்ந்துவிட்டு எமக்கு தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அதைத்தான் நாங்கள் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு உனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமானால், உன் பரம்பரையின் ஆதி மனிதர் அந்த இடத்தில் பிறந்திருக்க வேண்டும். ஐநூறு வருடம் இருந்துவருகிறோம். அறுநூறு வருடம் இருந்து வருகிறோம் என்ற சரித்திரப் புரட்டுகள் போதாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தினார்கள்... அதனால்தான் தனி நாடு கேட்கிறோம் என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தனர். அரசு வேலைகளில், சொத்துக்கள் வைத்திருப்பதில், சமூக படிநிலைகளில் சொந்த இனத்தினரான சிங்களர்களைவிட பல மடங்கு உயரத்திலிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த ஒரு இடத்தையும் எடுத்துப் பாருங்கள். பெரும்பான்மை எப்போதுமே பந்தயத்தில் பின் தங்கி இருந்ததாக சரித்திரமே கிடையாது. நாங்கள் தோற்கப்பட்டிருந்தோம். வெற்றி பெற விரும்பினோம். எங்களுடைய நாட்டில் எங்களுக்கான உரிமையை நாங்கள் போராடிப் பெற வேண்டி இருந்தது. இதைவிடக் கேவலம் வேறெதுவுமே இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த கல்வி நிலையங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் படிக்கும் வசதி இருந்தது. ஆனால் தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இந்தக் கல்வி நிலையங்களில் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒன்று தெரியுமா... தாயகப் பகுதியான தமிழகத்தில் கூட தாய்மொழிக் கல்வி என்பது முழுவீச்சில் இருந்தது கிடையாது. சேயகமான ஈழத்தில் அது உச்சத்தில் இருந்தது. ஈழத்தில் பொறியியல், மருத்துவப் படிப்பை ஒரு தமிழர் தன் தாய் மொழியிலேயே படிக்க முடியும். அந்த அளவுக்கு அவர்களுக்கு உரிமையும், வளமும் வசதியும் இருக்கத்தான் செய்தது. ஆனால், சிங்களன் அப்போது தன் அடிப்படைக் கல்விகூடப் பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான ஒரு நிலையில் சிங்கள தேசத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது தவறா..? சிங்கள பூமியில் சிங்களர்களுக்கு முன்னுரிமை என்று சொன்னது தவறா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் தங்களுடைய பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் தமிழர்கள் பகுதிகளில் ஏராளமான ஆங்கிலப் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தமிழர்களுக்கு ஆங்கிலக் கல்வி எளிதில் கிடைத்தது. ஆங்கிலேய அரசாங்கத்தில் பதவியும் கிடைத்தது. மருத்துவம், பொறியியல், நீதித்துறை என சமூகத்தின் உயர்மட்ட பிரிவுகள் அனைத்திலும் தமிழர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர். சிங்களர்கள் அடிமட்டப் பணிகளில் மட்டுமே நிறைந்திருந்தனர். 1981 கணக்கெடுப்பு வரையிலும் இதுதான் நிலமை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் நிலவியது அதனால்தான் ஆயுதத்தை ஏந்தவேண்டி வந்தது என்றொரு புரட்டும் சொல்லப்படுவதுண்டு. உண்மையில் தமிழர்களில் வேலையில்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிங்களர்களில் வேலை இல்லாமல் இருந்தவர்களின் எண்ணிகைதான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல... தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இருந்த சிங்களர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவந்தது. ஆனால், சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த தமிழர்களின் எண்ணிகையோ அதிகரித்து வந்துள்ளது. யார் அழித்தொழிப்பு, இனச் சுத்திகரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர்..? சிங்களர்களா..? விடுதலைப் புலிகளா..?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசின் ஆணைகள், பத்திரங்கள், தபால்தலை, அறிவிப்புப் பலகைகள் என அனைத்திலும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாம் 1983 வரையிலும் இருந்துவந்த நிலைமைதான். விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் வசித்த தமிழர்களைவிட சிங்கள அரசின் ஆளுகையில் இருக்கும் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்கிறார்கள். சிங்களர்களின் பெருந்தன்மையை, அன்பைப் புரிந்து கொள்ளாமல் போனதால்தான் இந்தப் பிரச்னை உருவாகியுள்ளது. அதிலும் தமிழர்கள் அனைவரையும் குற்றம் சொல்லுவது தவறுதான். தவறான தலைவனால் வழிநடத்தப்பட்டும் ஒரு பிரிவினரால் மற்ற அனைவருமே வேதனையை அனுபவிக்க நேர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று  முழங்கினார்கள். இந்தப் புலிகள்தான் தமிழ் பேசிய முஸ்லீம்களை போட்டது போட்டபடி வீடு வாசல் நிலபுலன்களை விட்டுவிட்டு ஓடுவிடுங்கள்... இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று விரட்டினார்கள். கிழக்கில் இருப்பவர்களை அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளினார்கள். பொது நீரோட்டத்தில் கலந்து இலங்கையின் இறையாண்மையை மதித்து அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்களின் நலனைப் பாதுகாக்க முற்பட்ட பிற தமிழ் தலைவர்களை படுகொலை செய்ததும் இந்த விடுதலைப் புலிகள்தான். ஒரு ஆங்கிலப் பத்திரிகை கூட ஒரு முறை செய்தி வெளியிட்டிருந்தது... இலங்கை ராணுவம் கொலை செய்த தமிழர்களைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம் இருப்பார்கள் என்று. ஆனால், அவர்கள் சொன்னார்கள் புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் சொல்வது சரிதான். ஈழத் தமிழர்களின் ஒரே தலைமை புலிகள்தான். மாற்றுக் கருத்து கொண்டவர்களைத்தான் கொன்றொழித்தாயிற்றே. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்... புலிகளை ஆதரித்த ஒருவர் ஒன்று பயத்தினால் அதைச் செய்திருப்பார்... அல்லது அறியாமையினால் செய்திருப்பார். எங்களுக்கு புலிகள் குறித்து பயமும் கிடையாது. அறியாமையும் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் முன்னால் நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். போரா... அமைதியா... என்று. அவர்கள் போரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எங்கள் குழந்தைகளைக் கொன்றதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவர்களுடைய குழந்தைகளையும் கொல்லும்படிச் செய்துவிட்டார்கள் அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில கதவுகளைத் திறக்கக்கூடாது. அவர்கள் திறந்துவிட்டார்கள். திரும்புதல் சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கும் இப்படியான ஒரு அழிவு தம் மீது கவிழும் என்று ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஏதோ நாம் கொஞ்சம் போராடினால் கேட்பதைக் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டார்கள். அது திசைகள் எல்லாம் கலங்கும்படியாக கர்ஜித்தது. என்ன செய்ய... தூக்கம் கலைந்த சிங்கத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-4808386712637993698?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/4808386712637993698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/4808386712637993698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/4808386712637993698'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/20.html' title='புத்தம் சரணம் கச்சாமி -20'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-1474268341565759604</id><published>2010-10-02T21:46:00.003-07:00</published><updated>2010-10-02T21:46:09.721-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 19</title><content type='html'>அதிலும் இந்த ஜனநாயகக் கூக்குரல்களை எழுப்பும் ஒருவன் பள்ளிக்கூட மைதானத்தில் கொடி மரத்தின் முன்னால் சீருடையில் சிதறிக் கிடந்த சிறுவர்களைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பால் அருந்திய மார்பில் ரத்தம் கசிவது புரியாமல் கதறிய பச்சிளம் குழந்தையைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். ஷெல் வீச்சில் குழந்தை சிதறிப் போனது நினைவில்லாமல் அள்ளிக் குவித்த துண்டங்களை தூளியில் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்த சித்தம் கலங்கிய தாயைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பீரங்கி வண்டிகள் செம்மண் சாலையில் பதித்த தடங்களில் தேங்கிக் கிடந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டு அதில் நடுங்கிய நிலவின் பிம்பத்தைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாட்டில் இருப்பவர்களையும் பொதுவாக இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்; அதற்கு மேலே வசிப்பவர்கள் என்று. ஆனால், எங்கள் ஊரில் இருப்பவர்களை கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படப் போகிறவர்கள் என்றுதான் பிரிக்க முடியும். மரணம் என்பது மனித வாழ்வில் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஒவ்வொருவரும் பிறந்த உடனேயே அவரவருக்கான மரணக் கழுகு அதி உயரத்தில் வட்டமிட்டபடி பின் தொடர ஆரம்பித்துவிடும். ஆனால், அதன் நிழலை 50-60 வயது வரை யாரும் பார்க்கவே முடியாது. அதன் பிறகுதான் முதல் முதலாகக் அந்தக் கழுகு கண்ணில் படும்படியாகப் பறக்கத் தொடங்கும். பிறகு மெதுவாக வீட்டின் பின்வாசல் மரத்தில் வந்து உட்காரும். பிறகு கிணற்றடியில் வந்து அமரும். மூடப்பட்ட பின் வாசல் கதவைத் தன் கூர்மையான நகங்களால் தட்டித் திறக்கும். உங்களுக்கு 70-80 வயது ஆன பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வத்தபடி வீட்டுக்குள் நுழையும். தத்தித் தத்தி  குறுக்கும் நெடுக்குமாக நடக்கும். மெள்ளத் தலைமாட்டில் வந்து உட்காரும். அதன் சுவாசம் முதன் முறையாக உங்கள் சுருக்கம் விழுந்த முகத்தில் படும். இரவுகளில் தூங்கும் போது கண் விழித்தபடி பக்கத்தில் உட்கார்ந்தபடி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கால் விரல்களை உடல் முழுவதுமாக விரித்து உயிரை மட்டும் தூக்கிக் கொண்டு திரும்பி வரமுடியாத தேசத்துக்கு பறந்து சென்றுவிடும். இதுதான் உலகம் முழுவதுமான வழக்கம். ஆனால், ஈழத்தில் அப்படி அல்ல. மரணக் கழுகுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய தலைக்கு மேலே, வெகு அருகில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். பிறந்த குழந்தைகளின் ஏன் கருப்பையில் இருக்கும் குழந்தைகளின் மீது கூட அது உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலரது தோளில் அமர்ந்து கொண்டிருக்கும். லேசாகத் திரும்பினால் அதன் கோரமான கண்கள் மின்னுவதைப் பார்க்க முடியும். அதன் மூச்சுக் காற்று பிடரியில் ஒவ்வொரு நிமிடமும் புஸ் புஸ் என்று ஒலித்துக் கொண்டிருக்கும். மரணக் கழுகுகளின் பரந்து விரிந்த சிறகுகளின் நிழல், ஈழத்தின் மீது நிரந்தரமாகக் கவிழ்ந்து கிடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெடிகுண்டு அல்லது துப்பாக்கி சூட்டில் உடனே இறப்பவர்கள். காயம் பட்டு சிறுகச் சிறுக இறப்பவர்கள்… பட்டினியால் இறப்பவர்கள். வழி முறைகள் வேறு வேறு. இறுதி விளைவு ஒன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி... புலிகள் யாரைக் கொன்றார்கள். துரோகிகளைக் கொன்றார்கள். உளவாளிகளைக் கொன்றார்கள். தனி நாடு வேண்டாம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். இலங்கை அரசு தருவதை வாங்கிக் கொண்டு வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? எதிரியைவிட துரோகிகளும் துரோகிகளைவிடக் கோழைகளும் மோசமானவர்கள் அல்லவா. இத்தனை இழப்புக்குப் பிறகு ஈழம் வேண்டாம் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது..? புலிகள் எடுத்த எடுப்பிலேயா தனி நாடு கோரினார்கள். எத்தனையோ கோரிக்கைகளை முன் வைத்து எதுவுமே கிடைக்காமல் போனதால்தானே தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆள்வதற்கு ஐந்து தேசங்களைக் கொடு... முடியாதென்றால் ஐந்து ஊர்களையாவது கொடு... அதுவும் முடியாதென்றால் ஐந்து வீடுகளையாவது கொடு என்று கெஞ்சிக் கேட்டும் எதுவும் கிடைக்காமல் போனதால்தானே  நிச்சயிக்கப்பட்டது குருக்ஷேத்திர யுத்தம்.யுத்தம் என்று ஆரம்பித்த பின் நேர்ந்த இழப்பைப் பார்த்துவிட்டு அந்த தருமன் கூடச் சொல்லவில்லையே, தருவதை வாங்கிக் கொண்டு போய்விடுவோம் என்று. அப்படிப் போவதாக இருந்தால் போரை ஆரம்பித்திருக்கவே வேண்டாமே... வேண்டுமென்றால் ஆரம்பித்து, போதுமன்றால் நிறுத்திக் கொள்ள இதென்ன விளையாட்டா... போர் நண்பர்களே போர்... இதில் ஒன்று அவன் வெல்ல வேண்டும். அல்லது நாம் வெல்ல வேண்டும். ஒன்று இந்த பூமியில் அவன் இருக்க வேண்டும் அல்லது நாம் இருக்க வேண்டும். அவன் இருந்தால் நாம் இருக்க முடியாது என்றான பின் நாம் இருக்க அவனை இல்லாமல் ஆக்கித்தானே ஆக வேண்டும். கடல் அலையற்று இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே... எதிர்த்தோம்... அதனால் அல்லவா இது நாள் வரை இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;துரோகத்தின் வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்... புலிகளின் செயல்கள் உங்களுக்குப் புரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ராஜீவ் காந்தி அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயவர்த்தனாவிடன் ஒப்பந்தம் செய்து கொண்டாரே. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே..?&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : அவர்கள் செய்து கொண்ட 1987 ஒப்பந்தம் எதை முன்வைத்தது தெரியுமா... போராட்டக்குழுவினர் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்... இலங்கை அரசு கிழக்கு வடக்கை இணைத்து தனி மாநிலமாக அறிவிக்கும். தமிழ் பகுதிக்கு சுய நிர்ணய உரிமையைத் தரவேண்டும். சம உரிமைக்கு வழி செய்து தரவேண்டும்... இந்திய அரசு தேவைப்பட்டால் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து தரும்... இதுதான் இலங்கையில் அமைதி திரும்ப செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்... தம்பியைச் சிறைப் பிடித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்கள். இந்தியாவை நம்பி விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தனர்... இந்திய அரசு இலங்கைக்கு அமைதிப் படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பியது... ஆனால், சுய நிர்ணய உரிமையும் தரப்படவில்லை... சம உரிமைக்கு வழி செய்தும் தரவில்லை... அது மட்டுமா நடந்தது...  நடுநிலை என்ற போர்வையில் களம் இறங்கிய  இந்திய அமைதிப் படை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்க ஆரம்பித்தது. இந்திய ராணுவத்திடம் இருக்கும் ஆயுதங்கள் தமிழர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். ஆனால், இந்திய ஆயுதங்கள் தமிழர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன. இந்திய ராணுவம் தமிழ் பெண்களைக் கற்பழிக்க ஆரம்பித்தது. புலிகள் மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்த வேண்டி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களக் காடை ஜெயவர்த்தனே தான் ஆரம்பித்த போரை அமைதிக்கான போர் என்று வர்ணித்தான்... உண்மைதான்... தமிழர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டால் அதன் பிறகு அமைதி தானாகத் திரும்பிவிடுமே... இந்த நாசகரத் திட்டத்துக்கு நீயும் உடந்தையாக இருந்தாய். உனக்கான சந்தன மாலையின் கண்ணிகளை எண்ணி எண்ணிக் கோர்த்தது நீதானே... உமக்கான சவப் பெட்டிகளின் ஆணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தது நீவிர்தானே... &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறுதானே&lt;br /&gt;&lt;br /&gt;புலி : ராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் துரதிஷ்டகரமான நிகழ்வு. இதற்கு முன்னாலும் சிங்கள ராணுவ அணி வகுப்பின் போது ஒரு முறை அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரகசியமாகவெல்லாம் இல்லை. ஒட்டு மொத்த உலகமே பார்க்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்திராவைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதால் சீக்கியர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறித் தாக்குதலால் அவர் மீது கோபம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் ராஜீவின் மரணத்தால் பலனடைந்த வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் அந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடும். ஆனால், திட்டமிட்டே புலிகள் மீது அவப்பழி போடப்பட்டது. அவரைக் கொல்வதற்கு புலிகளுக்கு 100 சதவிகித காரணங்கள் இருந்ததும் உண்மையே. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய ராணுவம் ஈழத் தமிழ் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்ததற்கெல்லாம் கணக்குப் பார்த்து பழி தீர்ப்பதென்றால் ராஜீவ் இன்னும் பல ஜென்மங்கள் எடுத்து வர வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பிரேமதாசன்... பேரைப் பாருங்கள். எவ்வளவு இனிமையான பெயர்... இந்தப் பெயரை வைத்துக் கொண்டு எத்தனை அராஜகங்கள் புரிந்தாய்... பிரேமத்தின் தாசனாக இருக்க வேண்டியவன் பிரேதத்தின் தாசனாக மாறியதால் அவனுக்கான தீர்ப்பு அவனது மொழியிலேயே வழங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் போர் யாரோடு... புலிகளோடுதானே... புலிகள் அதைத்தானே செய்தார்கள். அப்பாவிகளை அவர்கள் ஒருபோதும் தாக்கியதில்லையே... இலங்கை அரசு நியாயமான போரை நடத்தியது என்றால் சர்வதேச அமைப்புகளை ஏன் வெளியேற்றியது. நடுநிலையான பத்திரிகையாளர்களை ஏன் கொன்றது? பாதுகாப்பு வளையம் என்பது உண்மையிலேயே பாதுப்புக்கானது என்றால் நடுநிலையான பார்வையாளர்களை அங்கு அனுமதிக்க மறுத்தது ஏன்..? உலக நாடுகள் அனைத்தும் இதைக் கண்டித்த பிறகும் கூட இந்திய அரசு இந்த சதிவேலைகள் குறித்து எந்த விமர்சனமும் எழுப்பவில்லையே... ஏன்..? புலிகள் வசம் 70000 பேர் சிக்கி இருக்கிறார்கள் என்று சிங்கள அரசு சொன்னது. இந்திய உள்துறை அமைச்சரும் அதையே வழிமொழிந்தார். சர்வதேச அமைப்புகளும் பிற ஊடகங்களும் குறைந்தது அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று சொல்லிவந்தது. அதை அன்று இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு இலங்கை அரசு எண்பதாயிரம் அப்பாவிகளை மீட்டதாகச் சொன்னது. இந்திய அரசும் அதை தனது ராஜாங்க நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று மார்தட்டிக் கொண்டது. எழுபதாயிரம் பேர் இருந்த இடத்தில் இருந்து 80000 பேரை எப்படி ஐயா மீட்டீர்கள். இன்னும்20000 பேர் அங்கு இருப்பதாகவும் அவர்களையும் மீட்டுவிடுவோம் என்றும் சொன்னார்கள். அப்படியானால் இதற்கு முன்னால் 70000 பேர்தான் இருப்பதாகச் சொன்னார்களே... எஞ்சிய நபர்களைக் கொன்று குவித்திட திட்டமிட்டிருந்தீர்களா..? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்ததும் பதுங்கிவிட்டார்களா..? இலங்கையின் இந்த கபட நாடகங்களைக் கண்டும் காணாததுபோல் ஏன் இந்தியா இருந்துவந்தது..? இந்த நாடகத்தை எழுதி இயக்கியதே இந்திய அரசிதானா..? இறையாண்மை குறித்து இயம்புவதெல்லாம் நாடகத்தின் நாசூக்கான வசனங்கள்தானா..? கணவன் ஒருவனைக் கொன்றதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் பூண்டோ டு கருவறுக்கத் தீட்டம் தீட்டியதா தியாகத்தின் திரு உருவம்..? இத்தாலியப் பத்தினித் தெய்வம் இலங்கைத் தமிழர்களைப் பழி வாங்கியதா..? மார்பைத் திருகி எறிந்து சூளுரைத்த காவிய நாயகி கண்ணகி கூட அறவோர்களையும் அந்தணர்களையும்  குழந்தைகளையும் பெண்டிரையும் முதியோரையும் விட்டுவிடச் சொன்னாளே அவள் உருவாக்கிய அழிவுத் தீயிடம்... இந்த நவீன கிராதகி ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் உயிரோடு கொல்ல உத்தரவிட்டாளா..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-1474268341565759604?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/1474268341565759604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/1474268341565759604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/1474268341565759604'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/19.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 19'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-463136809087177327</id><published>2010-10-02T07:33:00.003-07:00</published><updated>2010-10-02T07:33:22.449-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 18</title><content type='html'>உங்கள் காடுகள் அன்பானவை... சுள்ளி பொறுக்கக் காட்டுக்குச் செல்பவர்களை கிழங்குவகைகளும் சேர்த்துத் தந்து பத்திரமாக அனுப்பிவைத்துவிடும். எங்கள் காடுகளைப் போல் கண்ணிவெடி வெடித்து கால் கைகளை முடமாக்கிவிடாது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அங்காடிகள் நேர்மையானவை. காலிப் பையும் காசும் கொண்டு சென்றால் காசை மட்டும் வாங்கிக் கொண்டு காய்கனிகளைப் பைகளில் நிரப்பி அனுப்பிவிடும். எங்கள் அங்காடிகளைப் போல் உயிரைக் காவு கேட்காது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய ஊரில் கல்லறைகள் என்பவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறு தோட்டம்போல் அமைந்திருக்கும். ஒரே ஒரு வாசல்தான் இருக்கும். இறந்து போன ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கல்லறைகள் எழுப்பப்பட்டிருக்கும். இறந்த தினத்தன்று நீங்கள் கறுப்பு உடை அணிந்து கொண்டு கையில் மலர் கொத்துடன் வந்து மெழுகுவர்த்தியை ஏற்றி முழந்தாளிட்டு இறந்தவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்வீர்கள். எங்கள் ஊரில் தனியாக கல்லறைத் தோட்டம் என்று எதுவும் கிடையாது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கல்லறை கட்டுவதென்றால் கல்லறைத் தோட்டமாக அல்ல கல்லறை நகரமாகத்தான் அது இருக்கும். குடும்பத்துக்கு ஒரு கல்லறை மாடம்... கிராமத்துக்கு ஒரு கல்லறை ஸ்தூபி... இதுதான் இங்கு சாத்தியம். எங்கள் சமூகத்தில் சமூக நல்லிணக்கம் முழுவதுமாக நிலவுவதுண்டு. இந்துக்கள் புதைக்கப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் எரிக்கப்படுவார்கள். மதத்தின் கொடூர விதிகள் எங்களைக் கட்டிப்போடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய பேருந்துப் பயணங்கள் சுகமானவை... பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த வயல் வெளிகளினூடே காற்றைக் கிழித்தபடி செல்லும். கூடவே அதிகாலைச் சூரியன் உடன் வர அல்லது தென்னை மரங்களினூடே முழு மதி மறைந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடியபடியே உடன் வர... என உங்கள் பேருந்துப் பயணங்கள் சுகமானவை. பாதுகாப்பானவை. எங்கள் பயணங்களிலோ போக வேண்டிய இடத்துக்கு நாங்கள் ஒரு போதும் போய்ச்சேர முடிந்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நெடுஞ்சாலையில் தென்படும் சுங்க சாவடிகளில் நீங்கள் உங்கள் ஆவணங்களைக் காட்டினால் போக அனுமதித்துவிடுவார்கள். உரிய கட்டணம் செலுத்தினால் மரியாதையுடன் அனுப்பிவிடுவார்கள். எங்கள் சாலைகளிலோ காவல் அரண்கள் வந்ததென்றால் அனைவரும் இறங்க வேண்டும். ஒவ்வொருவராக சோதிக்கப்படுவார். அனைவரும் பார்க்க வயசுப் பெண்களின் உடலெங்கும் ஊரும் கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக இருந்து பார்க்க வேண்டும் அந்த வலியை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கடல் பயணங்கள் இதமானவை. தூளியில் ஆடுவதுபோல் கடல் அன்னை உங்களைத் தாலாட்டியபடி அழைத்துச் செல்வாள். போய் வாருங்கள் என காற்றில் ஆடி விடைகொடுக்கும் கடலோரப் பனை மரங்கள்... சேருமிடம் வருகையில் வாருங்கள் வாருங்கள் என வரவேற்கும் கடலோர மரங்கள்... உங்கள் கடல் பயணங்கள் ரம்யமானவை. ஆனால், எங்கள் பயணங்களில் எங்கள் படகுகள் நடுக் கடலில் நிறுத்தப்படும். ஒரு அறையில் அனைவரையும் அடைத்துவைப்பார்கள். வாசலில் இருவர் துவக்குடன் நிற்பார்கள். ஒவ்வொருவராக விசாரணைக்கு வரச் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் ஊரையும் உரத்த குரலில் கத்தச் சொல்வார்கள். அலைகடல் மேலே தத்தளிக்கும் அந்தப் படகில் கொல்லப்படும் ஆண்கள் பாக்கியவான்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கயவர்கள் தவறு செய்தால் காவலர்களிடம் முறையிடலாம். காவலர்கள் தவறு செய்தால் நீதி மன்றத்தில் முறையிடலாம். நீதிபதிகள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். காவலர்களும் நீதிபதிகளும் அரசாங்கமும் சேர்ந்து தவறு செய்தால்..? வில்லன்கள் மட்டுமே நடிக்கும் நாடகத்தில் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கதாநாயகி யாரிடம் போய் முறையிடுவாள்..? &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நாட்டில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாமல் இறக்கும் அநாதைகளுக்குக் கூட உரிய மரியாதையுடன் நடத்திவைக்கப்படும் இறுதிச் சடங்குகள். எங்கள் நாட்டிலோ உற்றாரும் உறவினரும் அனைவரும் இருந்தபோதும் காடுகளில் நாயும் நரியும் கழுகும் காகமும் தின்று தீர்த்த சடலங்களின் எண்ணிக்கை உங்களுக்குத் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பாருங்கள்... நீங்கள் ஒரு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறீர்கள். வயலிலோ, கடையிலோ, அலுவலகத்திலோ எங்கோ ஒரு இடத்தில் நீங்கள் வேலைசெய்துவருகிறீர்கள். திடீரென்று வானில் தாழப்பறந்தபடி பறக்கும் சில ஹெலிகாப்டர்கள். வந்திருப்பது தேவதூதர்கள் அல்ல என்பது உங்களுக்கு விரைவிலேயே தெரிந்துவிடும். அவர்கள் உங்களுக்கு கெடு விதிப்பார்கள். சுட ஆரம்பிப்பதற்கு முன் ஓடிப் போய்விடுங்கள் என்று அந்த அசரீரி ஒலிக்கும். நீங்கள் அலறி அடித்துக் கொண்டு காட்டுப் பக்கம் ஓடினால் அங்கு உங்களுக்காகக் காத்திருப்பார்கள் கையில் துவக்குகளுடன் சில காவலர்கள். அங்கிருந்து தப்ப படகுத்துறை நோக்கி ஓடினால் அங்கும் புன்முறுவல் பூத்தபடியே காத்திருப்பார்கள் வேறு சில காவலர்கள். வழியில் வரும் பஸ்ஸையோ காரையோ பிடித்து ஏறிச் சென்றால் சாலை ஓரத்தில் காத்து நிற்பார்கள் இன்னும் சில காவலர்கள். பள்ளியிலோ, கோயிலிலோ அடைக்கலம் தேடலாம் என்று ஓடினால் அங்கும் காத்திருப்பார்கள் உங்களுக்கான காலன்கள். எந்தத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இல்லை நான் எங்குமே ஒடமாட்டேன் என்று வீட்டுக்குள்ளேயே இருந்தால் ஹெலிகாப்டர்களில் இருந்து வீசப்படும் குண்டுகளுக்குச் சிக்கி உயிரை விடலாம். நாளை அந்த படுகொலையில் தப்பிப் பிழைக்கும் உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, இங்குதான் எங்கள் வீடு இருந்தது என்று அடையாளம் காட்டுவதற்கு பதிலாக இங்குதான் என் தந்தை கொல்லப்பட்டார் என்று அடையாளம் சொல்லும். உங்களுக்கு ஒன்று தெரியுமா..? நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்று உங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாழும் போது உங்கள் பேரக் குழந்தைகளுக்கு இதுதான் நான் படித்த பள்ளிக்கூடம்... இதுதான் நீ பிறந்த மருத்துவமனை... இந்தக் கோயிலில்தான் உனக்கு காது குத்தி மொட்டையடித்தோம் என்று மலரும் நினைவுகளைச் சொல்லி மகிழ்வீர்கள். எங்கள் நாட்டில் கற்பழிப்புக்கும் படுகொலைக்கும் கண்ணிவெடிகளுக்கும் தப்பிப் பிழைத்தவர்கள் ஒவ்வொரு இடத்தையும் எப்படி சொல்லிக் காட்டுவார்கள் தெரியுமா..? இந்தப் பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்தபோதுதான் அண்ணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின் அவன் திரும்பவே இல்லை. இந்த வயக்காட்டு வரப்பில்தான் அம்மா ஷெல் வீச்சுக்கு பலியானாள்... இங்குதான் முன்பு ஒரு கோவில் இருந்தது. அங்குதான் அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட்டார்கள்... ஆம்... எங்கள் பூமியில் எந்த ஒரு இடமும் எங்கள் நினைவில் இப்படித்தான் பதிவாகி இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள்... நாங்கள் துவக்கை ஏந்தியது  தவறா..?&lt;br /&gt;&lt;br /&gt;இரவுகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால், பதுங்கு குழிக்குள்  பள்ளிகள் நடத்த நேர்ந்ததை எங்களால் மன்னிக்க முடியவில்லை. எந்தவொரு போரிலும் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேசவிதி. ஆனால், இங்கு அந்த இடங்கள் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்பட்டன. அந்த இடங்கள் தாக்கப்படாது என்ற நம்பிக்கையில் எத்தனையோ அப்பாவிகள் அங்கு அடைக்கலம் தேடியிருந்தனர். அது தெரிந்த பிறகும் இன்னும் சொல்லப்போனால் அது தெரிந்ததனால்தான் அந்த இடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் தட்டிக் கேட்ட விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளாம்... பிரபாகரன் குற்றவாளியாம். அது சரி... ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேயன் எழுதிய சரித்திரத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மனைக்கூடக் குற்றவாளி என்றுதான் எழுதினான். குற்றத்துக்கு தண்டனையாக தூக்கிலும் போட்டான். காலம் சரித்திரத்தை மாற்றி எழுதவில்லையா? செக்கிழுத்த செம்மல் தெரியுமா உங்களுக்கு... சுதந்திரக் கடலில் உரிமைக் கப்பலை மிதக்கவிட்டவன்... அவனுக்கு கிடைத்த பரிசு தெரியுமா..? மாடோடு மாடாக பூட்டப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்ட கொடூரம்... சொல்லுங்கள்... அவன் தீவிரவாதியா..? அவன் தண்டனை தரப்பட வேண்டியவனா..? வாஞ்சிநாதன் குற்றவாளி என்றால்... பகத் சிங் குற்றவாளி என்றால்... நேதாஜா சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என்றால்... தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனும் குற்றவாளிதான்... &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும், ஈழத் தமிழர்கள் ஆரம்பத்தில் அமைதியாகத்தான் போராடினார்கள். சிங்கள அரசு ஒவ்வொரு அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் ஈழத் தமிழ் போராளிகள் உண்ணாவிரதம் இருத்தல், அரசு அலுவலகங்கள் முன் சென்று கோஷங்கள் எழுப்புதல் என்று அமைதியாகத்தான் போராடிப் பார்த்தனர். சிங்களர் அரசு அடக்குமுறையின் அக்னி அஸ்திரங்களைப் பிரயோகித்த போதெல்லாம் தமிழ் போராளிகள் அஹிம்சையின் நீர் கொண்டுதான் அதை அணைத்து வந்தார்கள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கிட்டத்தட்ட 35-40 வருடங்கள் அன்பின் பாதையில்தான் போராடி வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நூலகம் தெரியுமா... உலகிலேயே தமிழ் சமுதாயத்தின் மிகப் பெரிய நூலகம்... ஒரு நூலகம் உங்களை என்னய்யா செய்தது..? அதை ஏன் கொளுத்தினார்கள்..? அவர்கள் கொளுத்தியது வெறும் நூல்களை மட்டுமா... தமிழனின் ஆண்டாண்டு கால பாரம்பரிய அறிவைக் கொளுத்தினார்கள்... தமிழனின் கலாசாரத்தைக் கொளுத்தினார்கள்... தமிழன் சிங்களர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கொளுத்தினார்கள்... நெல்லின் உமி சிறிது நீங்கிப் பிரிந்தாலே மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது... அவர்களோ நெல் வயலையே கொளுத்தினார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் ஆரம்பித்த அமைதிப் போராட்டங்கள் ஸ்படிக நீர் போல் பாய்ந்து கொண்டிருந்தன. சிங்களன் அதில் சிவப்பு நிறத்தைக் கலந்தான். புத்தன் அவர்களுக்கு காவி அங்கியைக் கொடுத்தான். அவர்களோ அந்த அங்கிக்குள் துவக்குகளை மறைத்துவைக்க ஆரம்பித்தார்கள். பூவும் பூஜையும் வேண்டாம் என்று சொன்ன புத்தனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்தார்கள். புத்தனின் வெண் முத்துப் பல்லைப் போற்றிப் பாதூகாத்து வணங்கி வருகிறார்கள். அவன் சொன்ன அகிம்சை எனும் சொல்லைத் தூக்கித் தூர எறிந்துவிட்டார்கள். அதனால்தான் நவீனகாலத் தமிழன் புறநானூற்றுத் தமிழனாக ஆக வேண்டி வந்தது. சிங்களன் சிங்கமாக மாறியதால்தான் தமிழன் புலியாக மாறினான். போர்ப்பாதை புலிகள் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒன்றல்ல... அவன் மீது திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் கடைப்பிடித்துவந்த சுய ஒழுங்கே அதற்கான சாட்சி. புலிகள் போர் தர்மத்தை மீறி ஒரு செயலாவது செய்ததாகச் சொல்ல முடியுமா... தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியதெல்லாம் அதிகார வர்க்கத்தினர் மீதும் அவர்களுடைய கைக்கூலிகள் மீதும்தான். அப்பாவிகள் மீது அல்ல. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் என்று அவன் எந்த ஒன்றின் மீதாவது தாக்குதல் நடத்தியதாகச் சொல்ல முடியுமா..? பிறர் அந்த அராஜகங்களை நிகழ்த்திவிட்டு எங்கள் மேல் பழி போடும் கயமைதான் காணப்படுகிறது. உண்மையில் நாங்கள் வீரனைப் போல் போரிட்டோம். ஏனென்றால் நாங்கள் மாவீரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : சக போராட்டக் குழுக்களை அழித்தீர்கள்... இஸ்லாமியர்களைத் துரத்தி அடித்தீர்கள்... மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் கொன்றீர்கள்... இவையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காதே. &lt;br /&gt;&lt;br /&gt;புலி : நீங்கள் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். போர்க்களம் என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அதிலும் சிங்கள காடைகள் இருக்கிறார்களே அவர்களைப் போன்ற கொடிய அரக்கர் கூட்டத்தை எதிர்த்துப் போராடும்போது மிகவும் எச்சரிக்கையாக, ஒற்றுமையாக இருந்தாக வேண்டியிருக்கிறது. நான் இறந்தால் என் கண்களை யாருக்காவது பொருத்துங்கள். அவர்கள் மூலம் மலரப் போகும் ஈழத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன குட்டிமணியின் கண்களை உயிருடன் இருந்தபோதே கதறக் கதறத் தோண்டி எடுத்து பூட்ஸ் காலில் போட்டு நசுக்கி கொன்றனர் கொடூரர்கள். கையில் துவக்குடனும் கழுத்தில் சயனைட் குப்பியுடன் பிறக்க நேர்ந்த தமிழ் தலைமுறை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே...? &lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளின் இருப்பிடங்கள், பணம் கிடைக்கும் வழிகள், ஆயுதங்கள் கிடைக்கும்விதம், தாக்குதல் நடத்த வகுக்கும் வியூகம், புலிகளுக்கு மறைமுகமாக உதவுபவர்கள் யார் யார்... என எத்தனையோ விஷயங்களை ரகசியமாகப் பாதுகாத்தாக வேண்டியிருந்தது. இந்த நிலையில் உளவாளிகளும் மாற்றுக் கருத்து கொண்டு பிரிபவர்களும் நிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடியை விட அபாயகரமானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மூலம் ஆபத்து வரலாம். அந்த பயம் இருக்கிறதே அதைப் போல் கொடிய விஷயம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வழிமுறையும் தேர்ந்தெடுத்தாயிற்று. எதிரி யார் என்பதும் நன்கு தெரியும். போர்க்களத்துக்கு வந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதிரில் இருப்பவனை சுட்டு வீழ்த்த வேண்டும்... அவ்வளவுதான். அங்கு எந்த சந்தேகத்துக்கோ... கேள்விக்கோ... தயக்கத்துக்கோ, பின்வாங்கலுக்கோ இடம் கிடையாது. அப்படி உனக்கு தைரியம் இல்லை என்றால் நீ போர்க்களத்தை விட்டு வெளியே சென்றுவிடு. போர்க்களத்தில் ஆயுதத்துடன் இறங்கிவிட்டு எதிரியைச் சுடாமல், நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்று திரும்பிப் பார்த்து பேச ஆரம்பித்தால் பயம் வரத்தான் செய்யும். உன்னுடைய ஒவ்வொரு தயக்கமும் பின்வாங்கலும் இன்னொரு பேரழிவைக் கொண்டுவரும். எனவே, சில கடுமையான ஒழுங்கைக் கொண்டுவந்தாக வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமைதி நிலவும் நாடுகளில் நடக்கும் கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள் அரசியல்கள், அதிருப்திகள், போட்டுக் கொடுத்தல்கள், காலை வாருதல்கள், கட்சித் தாவல்கள் என எத்தனையோ நடந்துவருகின்றன. இன்று என் பக்கம் இருப்பவர் நாளை எதிர்பக்கம் போவதால் பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடாது எனக்கு. அப்படி இருக்கும் நிலையிலுமே மாற்றுக்கருத்தை சகித்துக் கொள்ளமுடியாமல் வெட்டிக் கொல்வது, தீவைத்துக் கொல்வது என சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஆனால், போர்க்களமோ இதைவிட நூறு மடங்கு அபாயகரமானது. ரகசியக் கோட்டையின் ஒற்றைச் செங்கல் உருவப்படுகின்றதென்றால்கூட அது உள்ளே நடக்கும் அனைத்தையும் வெளியே தெரியவைத்துவிடும். கோட்டையின் விரிசல்கள் அது எத்துணை சிறியதாக இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டுவிடவேண்டும். பெரிய கப்பலை மூழ்கடிக்க சிறிய துவாரமே போதும்... இப்படியான நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவருக்கும் தங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இலக்குக்கான விசுவாசத்தை உரத்து முழங்கிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யத் தவறும் போது சில துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இசை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உகந்த கருவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு தரப்பட்டிருக்கும். ஆனால், உங்கள் முன்னால் இருக்கும் பலகையில் நீங்கள் வாசிக்க வேண்டிய குறிப்புகள் அழகாக, அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். அனைவரும் ஸ... என்று இசைக்கும்போது நீங்களும் ஸ என்றுதான் இசைத்தாக வேண்டும். அப்போது பார்த்து ரீ என்று இழுத்தால் இசை நிகழ்ச்சி இம்சை நிகழ்ச்சி ஆகிவிடும். கேவலம் ஒரு இசை நிகழ்ச்சிக்கே இத்தனை இறுக்கமான விதிகளும் நடைமுறைகளும் இருக்கும்போது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மாபெரும் சங்கீதமான போரில் எத்தனை கண்டிப்பும் ஒழுங்கும் இருந்தாக வேண்டியிருக்கும்... அதில் நேரும் எந்தவொரு சிறிய இசைகேடும் ஒருபோதும் சரி செய்ய முடியாத அபஸ்வரமாகப் போய்விடும். போரை நடத்தும் தலைவன், அவன் விரும்பாவிட்டாலும் சர்வாதிகாரியாகத்தான் இருந்தாக வேண்டி இருக்கிறது. எல்லாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாக வேண்டியிருக்கிறது. அது அவனுடைய குற்றம் அல்ல... போரின் இயல்பு அது... இறக்க நேர்பவர்களைப் பற்றி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் அவன் சிந்தித்தாக வேண்டிவரும். &lt;br /&gt;&lt;br /&gt; இஸ்லாமியர்கள் தமிழ்தான் பேசினார்கள். அந்த வகையில் அவர்கள் தமிழர்களின் போராட்டத்தைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள் என்றார்கள். அதுவே மாபெரும் தவறு.சிங்களர்களுக்கு உளவு வேலை பார்த்ததோடு நிற்காமல் ஆயுதங்களை ஏந்தி தமிழர்களைக் கொல்லவும் ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களை விரட்ட வேண்டி வந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்கு எத்தனை முறை மன்னிப்பும் கேட்டுவிட்டோம். போர்க்கால ஜனநாயகம் என்பது வேறு. சாதாரண கால ஜனநாயகம் என்பது வேறு.&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-463136809087177327?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/463136809087177327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/463136809087177327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/463136809087177327'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/10/18.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 18'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-8092203042004445588</id><published>2010-09-30T20:57:00.001-07:00</published><updated>2010-09-30T20:57:07.178-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 17</title><content type='html'>விடுதலைப் புலிகள் தரப்பு (அருகில் இருக்கும் தலைவரைப் பார்த்து) : மார்ச் 8 க்கு என்ன முக்கியத்துவம் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருப்பவர் : தெரியும். சர்வதேச மகளிர் தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : பிப் 14 க்கு என்ன விசேஷம் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருப்பவர் : காதலர் தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி :  இன்னொருவரைப் பார்த்து : ஜனவரி 1 &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாமவர் : ஆங்கிலப் புத்தாண்டு தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : ஜூலை 24..?&lt;br /&gt;&lt;br /&gt;பதில் தெரியாமல் முழிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட தினம். லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்த தினம். கறுப்பு ஜூலை...  &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : மே 31..?&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டைப் பிதுக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். தமிழ் இனத்தின் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்ட, இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்க முடியாத அறிவுச் செல்வம் சிங்கள நாய்களால் எரியூட்டப்பட்ட நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செப் 26..?&lt;br /&gt;&lt;br /&gt;பதில் தெரியாமல் முழிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : செப் 15&lt;br /&gt;&lt;br /&gt;பதில் தெரியாமல் முழிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலி : மாவீரன் திலீபன் உண்ணாவிரதம்  ஆரம்பித்த நாள்... செப் 26 அவன் உயிர் துறந்த தினம். அவன் உயிர் துறந்தபோது நான் அருகில் இருந்தேன். உண்ணாவிரதமிருந்து உயிர் துறப்பது என்பது எவ்வளவு கொடுமை தெரியுமா... காலையில் வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏர் கூலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மாலையில் பழரசம் குடித்து முடிக்கும் சங்கதி அல்ல... நீச்சல் தெரிந்தவனால் நீரில் மூழ்கி இறக்க முடியாது... கடைசி நேர மூச்சுமுட்டலைத் தாங்க முடியாமல் எப்படியும் நீரை விட்டு வெளியேறிவிடுவான் என்று சொல்வார்கள். உணவை மறுத்து உயிரை விடுவதும் அப்படியான ஒரு மரண வேதனையைத்தான் தரும். &lt;br /&gt;&lt;br /&gt;உயிரைப் போக்கிக் கொள்வதில், இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது பட்டினி கிடந்து உயிர் துறப்பதுதான். சயனைட் தின்று இறப்பதற்கு பெரிய வீரம் தேவையில்லை. கழுத்தில் இருக்கும் குப்பியைக் குனிந்து கடித்தால் போதும். அடுத்த நொடியில் மரணம். வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு தாக்கி இறப்பதிலும் அதிக வலி கிடையாது. ஒரு ஸ்விட்சை இப்படி அழுத்தினால் போதும் அடுத்த விநாடியில் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால், பட்டினி கிடந்து இறப்பது அப்படியல்ல... முதலில் கண்கள் இருட்டிக் கொண்டுவரும். கால்கள் தளர்ச்சியுறும். கைகள் தளர்ச்சியுறும். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஓராயிரம் கற்களை ஏற்றி வைப்பதுபோல் ஒரு பாரம் அழுத்தும். கழுத்தை நெரிப்பதுபோல் கண்கள் பிதுங்கும். ஒரு துளி நீருக்காக... ஒற்றை பருக்கைக்காக உடல் ஏங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தேன். 11 உதயமும் 12 அஸ்தமனங்களும் வந்து வந்து போயின. திலீபன் உயிருக்குப் போராடினான். இல்லை இல்லை... சுதந்திரத்துக்காகப் போராடினான். இந்த உலகில் காடு அழித்து கழனியாக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் செழித்துக் கிடந்தன உணவு தானியங்கள், காய்கள், கனிகள்... ஆனால், திலீபனின் ஒற்றை நேர உணவுக்கான தானியம் மட்டும் இந்த உலகில் இருந்திருக்கவில்லை. அவன் சுதந்திர தேசத்தில் விளைந்த ஒற்றை நெல் மணியைக் கேட்டான். பெரும்பான்மையால் சிறுபான்மை அழித்து ஒழிக்கப்படாத நாட்டில் ஓடும் நதியில் இருந்து ஒரு துளி நீர் கேட்டான்... நான் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தேன். சாகும் தறுவாயில் அவனது கண்களில் ஒரு ஒளி. பிரகாசமான ஒளி. ஈழம் மலரப் போவதை அவன் முன் கூட்டியே கண்டான் போலிருக்கிறது. செப் 15-ல் ஆரம்பிக்கப்பட்ட அவனது உண்ணாவிரதம் முடிந்த நாள் செப் 26.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நாட்காட்டிகள் வேறு... எங்கள் நாட்காட்டிகள் வேறு... நீங்கள் வாழும் உலகம் வேறு. நாங்கள் வாழும் உலகம் வேறு. உங்கள் உலகில் இறக்கும் தந்தையின் உடலுக்கு மகன்கள் எரியூட்டுவார்கள். எங்கள் உலகில் கொல்லப்படும் மகன்களுக்கு தந்தைகள் எரியூட்டுவார்கள். குடும்பத்தில் ஒரு நபர் அகால மரணமடைந்தாலே ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அங்கே ஒரு இனமே அகால மரணமடைந்து கொண்டிருக்கிறது... ஈழத்தில் யாரும் மரிப்பதில்லை. கொல்லப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் உலகில் ஒருவர் நிமிர்ந்து பார்த்தால் வானில் நிலவு தெரியும்... நட்சத்திரங்கள் தெரியும்... குளிர்ந்த காற்று எங்கோ கூவும் குயிலின் ஓசையைச் சுமந்துவரும். எங்கோ மலரும் மலரின் வாசம் உங்கள் நாசியை நிரப்பும். எங்கள் வானில் நிமிர்ந்து பார்த்தால் ஏவுகணைகள் சீறிப் பாய்வது தெரியும். ஷெல்கள் வேகமாக பூமியை நோக்கி வருவது தெரியும். நள்ளிரவில் குளிர் காற்று எங்கள் பூமியில் மரண ஓலத்தை சுமந்தபடி அலையும். அநாதையாகக் கிடந்தழுகும் பிணத்தின் வாடை அல்லது வெடித்துச் சிதறிய உடலின் பச்சை ரத்த வாடை உங்கள் நாசியை வருடிச் செல்லும். உங்கள் உலகம் வேறு... எங்கள் உலகம் வேறு. உங்கள் வானம் வேறு எங்கள் வானம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் நாங்கள். மானமாக உயிர் வாழும் உரிமையைக் கேட்டதால் படுகொலை செய்யப்பட்டவர்கள் நாங்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் விளையாட பொம்மைத் துவக்குகளைத் தருவதில்லை. எங்கள் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்த சிங்கள அமைச்சன் என்ன சொன்னான் தெரியுமா... நாங்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை. எதிர்காலத் தீவிரவாதிகளைத்தான் கொன்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொதிக்கும் தாரில் உயிருடன் போடப்பட்ட குழந்தைகள் விறைத்துச் சாவதை நீங்கள் பார்த்ததுண்டா..? இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் வாய்வைத்து பால் குடிக்க முயலும் குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? பிறந்த ஓரிரு மாதங்களில் உடம்பில் ஊடுருவிய ஷெல் துண்டுகளை எடுப்பதற்காக ஆப்பரேஷன் செய்யப்பட்ட குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? களங்கமற்ற சிரிப்புடன் அதன் உடம்பில் மாட்டப்பட்ட குளுகோஸ் டியூபை பிடித்து விளையாடிய பிஞ்சுக் கரங்களை நீங்கள் பார்த்ததுண்டா..?&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடைய புனித நூல்தான் சொல்கிறது சிங்களர்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று. இந்தியாவின் கலிங்க தேசத்தில் தவறுகள் செய்ததற்காக தண்டிக்கப்பட்டு நாடுகட்டத்தப்பட்டது ஒரு கூட்டம். அதில் அதிர்ஷ்டவசமாகக் கரையொதுங்கியவர்கள்தான் இலங்கையின் முதல் சிங்களக் குடியேற்றத்தினர். ஆனால், அவர்கள் அங்கு கரையொதுங்கிய காலத்திலேயே பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இலங்கையில் 1956-ல் அதை நினைவுகூரும்விதமாக  ஒரு தபால் தலைகூட வெளியிடப்பட்டது. முதன் முதலாகக் கால் பதிக்கும் இளவரசனுக்கு கை கொடுக்கும் வேடர் மகள்! பின்புலத்தில் அவர்கள் ஓட்டி வந்த படகு. சோழர்கள் காலத்தில் வந்த தமிழர்கள், ஆங்கிலேயர் காலத்தில் வந்த தமிழர்களுக்கும் அராபிய தமிழர்களுக்கும் முன்பாகவே அங்கு இருந்திருக்கின்றனர் ஆதி தமிழர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆளற்ற தீவு யாருக்கு சொந்தம் என்றால் முதலில் காலடி எடுத்து வைத்தவனுக்குத்தான் என்பது உலக நியதி. ஐரோப்பியர்களின் வருகைக் காலம் வரை தமிழ் சாம்ராஜ்ஜியம் தனித்து, தலை நிமிர்ந்தே இருந்து வந்திருக்கிறது. ஈழப் புரவிகள் இலங்கைத் தேரை ஒருபோதும் இழுத்ததில்லை. ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு தேசங்களை ஒன்றாக்கினார்கள். அதுதான் உண்மை. இந்தியாவைத் துண்டாக்கி ரத்த ஆறைப் பெருக வைத்தான். இலங்கையை ஒன்றாக்கி பிணக்காடாக்கிவிட்டிருக்கிறான். இலங்கையின் இறையாண்மை குறித்துப் பக்கம் பக்கமாக உலகம் பேசுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தின் இறையாண்மையை அழித்துத்தான் அது உருவாக்கப்பட்டதென்ற உண்மையை யாரும் சொல்வதேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;  தமிழர்கள் இலங்கையின் மக்கள் தொகையில் 22 சதவிகிதம்தான் இருக்கிறார்களாம். அரசு பணிகளில் அதற்கும் மேல் இருக்கிறார்களாம். ஈழத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 95%க்கும் மேலானவர்களாயிற்றே அவர்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் அவர்களுடைய பங்கு வெறும் 30%தான் இருக்கும். தென்னிந்தியா முழுவதையும் ஒரு தனி தேசமாக அறிவித்துவிட்டு தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தால் அது நியாயமாக இருக்குமா..? தேசத்தின் எல்லையை யார், எப்படி வரையறுப்பது..? 50%க்கும் மேலாக உயர் பதவிகளில் இருந்தனராம். அது கண்களை உறுத்திவிட்டிருக்கிறது. நாங்கள் உயர் பதவிகளில் இருந்தது என்பது எங்கள் திறமையின் அடிப்படையிலான ஒன்றுதான். எந்தத் தந்திரத்தின் மூலமும் நாங்கள் முன்னணிப் பதவியை எட்டவில்லை. ஒருமுகப்பட்ட, கடின உழைப்பு. அதுவே எங்கள் வெற்றிக்கு வழி வகுத்தது. ஆக, சரித்திர நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி ஈழத் தமிழனுக்கு மானமுள்ள வாழ்க்கை வாழ தனித்துப் போவதே ஒரே தீர்வாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ புலிகள் தனி நாடு கேட்டதால்தான் பிரச்னை இந்த அளவுக்கு மோசமானதாகச் சொல்கிறார்கள் பலர்.  &lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் கிடைத்ததும் சிங்கள அரசின் அராஜகங்கள் படிப்படியாக அதிகரித்தன. சுதந்திரம் பெற்றதும் முதன் முதலாகக் கையெழுத்திடப்பட்ட அரசு உத்தரவு எது தெரியுமா..? இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடு கடத்தும் உத்தரவுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;10 லட்சம் மலையகத் தமிழர்கள் ஒரு இனிய அதிகாலையில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இரவில் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு தன் அறையில் படுத்த ஒருவர் எழுந்து பார்க்கும்போது வெட்டவெளியில் அம்மணமாக நிற்பது போன்ற அதிர்ச்சி. ஒரு நாட்டில் வேறு நாட்டவர் பத்திருவது வருடங்கள் வாழ்ந்துவிட்டால் அந்த நாட்டின் குடிமகனாக முடியும் என்று சட்டங்கள் சொல்கின்றன. நூறு வருடங்களுக்கு மேல் மூன்று நான்கு தலைமுறைகள் வாழ்ந்துவிட்டிருந்தனர் இந்திய வம்சாவளியினர். ஒருவர் இருவர் அல்ல... 10 லட்சம் பேர். அவர்கள்  இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டவர்கள். காடுகளை அழித்துக் கழனிகளாக்கியவர்கள். தேயிலை உற்பத்தியில் இன்று இலங்கை உலகில் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு முதலும் கடைசியுமான காரணம் இந்த மலையகத்தமிழர்கள் சிந்திய ரத்தமும் வேர்வையும்தான். மரம்தான் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டதே... இனி வேர் எதற்கு என வெட்டினர் மூடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; மெள்ள மெள்ள வெறுப்பின் அணையில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்களில் விவசாய வளர்ச்சி பணி என்ற பெயரில் சிங்களர்களைக் குடியேறவைத்தனர். தமிழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சிங்களர்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. அவர்கள் வந்து பவுத்த விகாரைகளைக் கட்டினர். தமிழர்களின் கோயில்களின் கோபுரங்களில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த புறாக்கள் பவுத்த விகாரைகளின் வெண்கல மணிச் சத்தத்தைக் கேட்டு அஞ்சி நடுங்கத் தொடங்கின.  அந்த வெண்கல மணிகளின் சத்தம் கேட்கும் பகுதிகள் அனைத்தும் சிங்களர்களுக்கு சொந்தமானது என கொக்கரிக்க ஆரம்பித்தனர். தாயைப் பிரிந்த கோழிக் குஞ்சின் மீது கழுகின் நிழல் கவிழ்வதுபோல் பவுத்த விகாரைகளின் வெண்கல மணி நாதம் இலங்கை முழுவதும் கவிழத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி மொழியாக இனி சிங்களம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிடையே தமிழர்களை அடக்குவதில் யாருக்கு முதலிடம் என போட்டி நடக்கத் தொடங்கியது. அரசாங்க அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றின் பிரமாண்டக் கதவுகள் தமிழர்களின் கண் முன்னே தாமாக மூடிக் கொண்டன.  இலங்கைத் தமிழ் சமூகம் உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகப் போர், பேச்சுவார்த்தை என அற வழிகளில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தது. சிங்கள அரசு போராட்டக்காரர்களைக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்டபங்களும் ஸ்தூபிகளும் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்தினர் தமிழர்கள். சிங்கள அரசு அந்த நினைவிடங்களையும் தரைமட்டமாக்கினர். அப்போதுதான் தமிழர்களுக்குப் புரிந்தது கொல்லப்படுபவர்களுக்கு நினைவிடங்கள் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அராஜகவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் சொன்னால்தான் புரியும் என்று. ஈழத் தமிழனின் கையில் ஆயுதம் வந்தது அப்படித்தான். தமிழனுடைய முதல் துப்பாக்கியில் இருந்து முதல் குண்டு பாய்வதற்கு முன்னால் சிங்களத் துப்பாக்கியில் இருந்து ஓராயிரம் குண்டுகள் தமிழ் சமூகத்தின் மீது பாய்ந்துவிட்டிருந்தது. தமிழர்கள், தாக்குவதற்காக ஆயுதம் ஏந்தவில்லை... தற்காத்துக் கொள்ளவே ஆயுதத்தை ஏந்தினர். அதிலும் கூட சிங்கள ராணுவம், அராஜக அரசியல்வாதிகள், உளவாளிகள் ஆகியோரையே புலிகள் கொன்று குவித்தனர். தமிழர்களை அடித்துத் துரத்திவிட்டு அந்தப் பகுதிகளில் குடியேறிய சிங்களர்களையும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களையும் தான் கொன்று வந்திருக்கின்றனர். நூறு வசவுகளைப் பொறுத்துக் கொண்டு அதன் பிறகே சக்ராயுதத்தை பிரயோகித்த கிருஷ்ணனைப் போல் புலிகள் ஒருவரைக் கொல்வதற்கு முன் அவருடைய பல்வேறு துரோகங்களை இன்னல்களைப் பொறுத்துக்கொண்டே வந்துள்ளனர். தங்களால் கொல்லப்படவேண்டியவர் எவரோ அவரை மட்டுமே கொல்லும் அவதாரமாகவே புலிகள் இருந்துவந்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த பட்டமோ பயங்கரவாதிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வீடுகளில் அழைப்பு மணி ஒலித்தால் அதிகாலையாக இருந்தால் பால்காரர் பால் போட்டதைத் தெரிவிக்க என்று நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்வீர்கள். அல்லது பேப்பர்காரர் தினசரியை கொண்டுவந்திருப்பார் என்று சோம்பல் முறித்தபடியே எழுதுவந்து கதவைத் திறப்பீர்கள். பகல் நேரத்தில் என்றால் தபால்காரர் என்று விரைந்துவந்து கதவைத் திறப்பீர்கள். ஒருவேளை அகாலத்தில் இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி அது ஒலித்தால் வேண்டுமானால் நீங்கள் லேசாக கலவரப்படக்கூடும்... ஆனால், எங்கள் வீடுகளில் ஒலிக்கும் அழைப்பு மணிகள் அப்படிப்படவை அல்ல. எந்த நேரத்தில் ஒலித்தாலும் எங்கள் ஈரக்குலையை நடுங்க வைக்கும். வாசலில் வந்து நிற்பது எங்கள் வீட்டு ஆண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்ல வந்திருக்கும் சிங்களக் காவலராக இருக்கலாம். எங்களை போட்டது போட்டபடி வீட்டை விட்டுவிட்டு ஓடச் சொல்லும் சிங்களக் காடைகளாக இருக்கலாம். பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துக் கொல்ல வந்திருக்கும் கலவரக் கும்பலாக இருக்கலாம்... &lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பு மணிதான் என்றில்லை. வீட்டை நெருங்கும் வாகனங்களின் ஓசை... மாடிப்படிகளில் ஏறிவரும் காலடி ஓசை... ஏன் கோவில்களில் ஒலிக்கும் மணியோசைகூட எங்களைக் குலை நடுங்க வைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இருந்து உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் எங்கள் வீடுகளுக்கு வரும்போது அவ்வப்போது கேட்கும் துவக்குச் சத்தத்தையும் வெடி குண்டுச் சத்தத்தையும் கேட்டு உங்கள் குழந்தைகள் தீபாவளி நெருங்குகிறது என்றெண்ணி துள்ளிக் குதிக்கும். தமிழகத்துக்கு நாங்கள் வரும்போது உங்கள் வானில் பறந்த விமானங்களின் ஒலி கேட்டு கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்ட எங்கள் குழந்தைகளைப் பார்த்து உங்கள் குழந்தைகள் கைகொட்டிச் சிரிக்கும். உங்கள் குழந்தைகள் வேறு... எங்கள் குழந்தைகள் வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகள் கிட்டிபுள் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். எல்லைக் கோட்டை தொடுபவன் வெல்வான். எங்கள் நாட்டிலும் விளையாட்டுகள் நடக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் வானில் விமானம் வட்டமிட்டதும் யார் முதலில் சென்று பதுங்கு குழிக்குள் இறங்குகிறார்கள் என்று. எங்கள் உலகத்தில் குழந்தை விளையாட்டுகளில் கூட தோற்பவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வானத்தின் கீழ் வசித்தாலும் உங்கள் சூரியனும் எங்கள் சூரியனும் ஒன்றல்ல... உங்கள் கடல்கள் சாதுவானவை... மீன் பிடிக்கச் செல்பவர்களை மீனுடன் திருப்பி அனுப்பிவைத்துவிடும். எங்கள் கடல்களைப் போல் காணாமல் போகச் செய்துவிடாது யாரையும். எங்கள் நாட்டில் கொல்லப்படுபவர்களுக்கு சற்றும் குறையாதது காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கையும். ஒருவர் காணாமல் போய்விடுகிறார் என்றால் என்னதான் செய்யமுடியும் அவரை நம்பி இருக்கும் ஒரு குடும்பம். வருவான் வருவான் என வழி மேல் விழிவைத்துக் காத்திருப்பதா..? ஒருவேளை இறந்திருந்தால் மேலுலகில் அவர் ஆத்மா ஒரு வாய் சோறு கிடைக்காமல் கதி கெட்டு அலைவயுமே என்று பதறி காணாமல் போனவருக்கு நீத்தார் சடங்கு செய்வதா..? ஒருவேளை உயிருடன் இருந்துவிட்டால்… உயிருடன் இருப்பவனுக்கு பிண்டம் வைப்பதா..? அய்யகோ… &lt;br /&gt;&lt;br /&gt;கற்பழிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு, சுடப்பட்டு, வெட்டப்பட்டு கண் முன்னே கொல்லப்படுவர்களின் பெற்றோர்கள் பாக்கியவான்கள். அந்தத் திசையில் இனி அடியெடுத்து வைக்க முடியாது என முடிவு செய்து கொண்டு திரும்பிவிடலாம். ஆனால், காணாமல் போகிறவர்களின் பெற்றோர்களின் நிலை இருக்கிறதே அது இந்த உலகில் எதிரிகளுக்குகூட நேரக்கூடாது ஆண்டவனே... எங்கெல்லாம் அடையாளம் தெரியாமல் அழுகும் சடலம் கிடக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் ஒடிச் சென்று பார்க்க வேண்டிவரும். மருத்துவமனைக்கு ஒவ்வொரு முறை குற்றுயிரும் குலையுயிருமாக ஒவ்வொரு உயிர் கொண்டுவரப்படும்போதும் அது தன் மகனாக இருக்குமோ என தவிக்கவைக்கும். செய்தித் தாள்களில் அச்சிடப்படும் போராளிகளின் சிதறிய உடலுடன் தன் மகனது உடலைப் பொருத்திப் பார்த்து கலங்க வைக்கும். கண் முன்னே மரிப்பவன் ஒரு முறை மரிக்கிறான். காணாமல் போகிறவனோ..?&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-8092203042004445588?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/8092203042004445588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/8092203042004445588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/8092203042004445588'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/17.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 17'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-1315609256014025729</id><published>2010-09-11T19:31:00.000-07:00</published><updated>2010-09-11T19:31:06.881-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 16</title><content type='html'>இதைத் திட்டமிட்டு முடித்த பிரபாகரன் உயிருடன் இருப்பது சோனியாவுக்கு எப்போதுமே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தியாவில் 2009 தேர்தல் வந்தது. ராஜபக்சே புலிகளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்திருந்தார். பிரபாகரன், சோனியாவுக்கு செய்தி அனுப்பினார். நினைவிருக்கிறதா..? பிரியங்கா-நளினி சந்திப்பு… வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தவர் உண்மையில் சந்தித்தது மத்திய சிறையில் இருந்த நளினியைத்தான். ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள்முடியப் போகிறது… ஈழம் இன்னும் மலரவில்லையே… சிங்கள அரசு வேறு பாசக் கயிறை வீச ஆரம்பித்திருக்கிறது. இனியும் தாமதித்தால் உண்மையைச் சொலிவிட வேண்டியிருக்கும் என்று சோனியாவுக்கு அந்த சந்திப்பின் மூலம் ரகசிய மிரட்டல் விடுத்தார். பதில் செய்தி பகரப்பட்டது. மக்கள் இயக்கமாக அரசியல் தளத்தில் வளராமல் கொரில்லா படையாக ராணுவ வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்று வந்ததாலும் ராஜீவ் கொலையினாலும் சர்வதேச அரங்கில்  புலிகளின் பெயர் பெரிதும் களங்கப்பட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் ஈழத்துக்கு ஆதரவாக நேரடியாக எதுவும் பேச முடியாது. எனவே, முதலில் சர்வதேச அரங்கில் புலிகள் பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு அவர்கள் கொரில்லா தாக்குதலை நிறுத்தவேண்டும். சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தவறுகள் செய்ய வைக்க வேண்டும். அதை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும். புலிகள் மீதான தீவிரவாத முத்திரை மறக்கடிக்கப்பட்டு அவர்களுடைய ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு கொடூர நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். சிங்கள ராணுவம் எவ்வளவுதான் சுற்றி வளைத்தாலும் கடைசி நேரத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வந்து பிரபாகரனைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லும். அதற்குத் தோதாகப் பிரபாகரன், கப்பல்கள் எளிதில் வந்து போக முடியும்படியான முள்ளிவாய்காலுக்கு ஒதுங்க வேண்டும். இதுதான் சோனியா,  பிரபாகரனுக்கு அனுப்பிய செய்தி. ராஜீவ் காந்தியைப் போலவே பாவம் பிரபாகரனும் அதை நம்பினார். கடைசி யுத்தத்தில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். இந்தியா எப்படியும் கைவிடாது என்று கடைசி வரை நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்ததன் ரகசியம் இதுதான். சோனியாவின் கூந்தல் தன் கையில் என்ற மிதப்பு அவருக்கு. அவர் முதலும் கடைசியுமாகச் செய்த ஒரே தவறு அதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவம் சுற்றி வளைத்தது. சொல்லி வைத்தது போலவே தமிழக ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை அப்பாவி ஈழத் தமிழர்களின் வேதனையை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இணைய நதிகளில் ஈழ ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பிரபாகரன் இந்தப் புதிய வியூகம் குறித்து சிரித்துக்கொண்டார். எல்லாம் திட்டமிட்டதுபோல் நடப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆனால், விதி அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருந்தது. அது அவருக்குத் தெரிய வந்தபோது பாவம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சோனியா அரசு, ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு பதிலாக சிங்களர்களுக்கு சாதகமாக சாய ஆரம்பித்தது. ஐநா சபையில் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. பிரபாகரனுக்கு, தான் ஏமாற்றப்படுவது தெரியவந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் பி.ஜே.பி. பக்கம் போவதுபோல் காயை நகர்த்தினார். அது எப்படியும் சோனியாவை கலவரப்படுத்தும் என்று நினைத்திருப்பார். ஆனால், காலம் கடந்துவிட்டிருந்தது. பிரபாகரனுக்கு அருகிலேயே ஒரு உளவாளியை விதைத்திருந்தது கிறிஸ்தவ லாபி. முள்ளிவாய்க்கால் பக்கம் ஒதுங்கிய பிரபாகரன் கடற்புலிகளின் உதவியுடன் தப்பிக்க முயன்றார். ஆனால், உடன் இருந்த உளவாளியால் கொல்லப்பட்டார். 1970 களில் ஆரம்பித்த வங்கிக் கொள்ளையில் இருந்து தனக்கு வழிகாட்டியாக இருந்த கிறிஸ்தவ சக்திகளின் கைப்பாவையாக இருந்த பிரபாகரன் கடைசியில் அந்த சதிகாரர்களாலேயே கொல்லப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் தூக்குக் கயிற்றில் இருந்து மீட்டார் என்று பாராட்டப்படும் அதே சோனியாதான் பிரபாகரனைக் கொல்வதற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தையே தூக்கிலிட்டுக் கொன்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே… &lt;br /&gt;&lt;br /&gt;காவி : உண்மை எப்போதும் கற்பனையைவிட அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். எங்களைக் கடத்தியதற்கு பதில் சோனியாவையும் ராபர்ட் வதோதராவையும் இன்னும் சில பாதிரிகளையும் நீங்கள் கடத்தி நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தினால் உண்மை புலப்பட்டுவிடும். ஓநாய்க்கு யார் கட்டுவது மணி..? &lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசிய நாடுகளில் அரசியல் தலைவர்களின் அகால மரணம் என்பது ஏதோ அங்கு நடக்கும் உள் நாட்டு பிரச்னைகளின் விளைவால் நடக்கும் ஒன்று அல்ல. கிறிஸ்தவ ஓநாய்கள் நீ அந்த மானைக் கொல்லு நான் இந்த ஆடைக் கொல்றேன் என்று திட்டமிட்டு நடத்தும் ரத்த வேட்டை. பாகிஸ்தானில் ஜுல் ஃபிகர் அலி பூட்டோ, ஜியா உல் ஹக், பெனசீர் பூட்டோ. இந்தியாவில் சஞ்சய், இந்திரா, ராஜீவ்… நேபாளத்தில் மன்னர் பரம்பரை… இலங்கையோ பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. பங்களாதேஷில் முஜிபூர் ரஹ்மான், ஜியாஉர் ரஹ்மான். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அமெரிக்காவில் கூட கென்னடி, லிங்கன் என படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அது என்னமோ உண்மைதான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் கிறிஸ்தவ தூண்டுதல் இல்லாமல் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் உதவிக்கு வந்த பெரும்பாலானவர்கள் அந்த கிறிஸ்தவர்கள்தானே. இறக்கவிருந்த என்னை மருந்துபோட்டுக் காப்பாற்றியது கூட ஒரு கன்யாஸ்திரீதான். அகதிகளாக அலைய நேரும் மக்களுக்கு ஆதரவு தருவது கிறிஸ்தவ தேசங்கள்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடை அணிந்தவர் : அதை அப்படித்தான் செய்யவும் செய்வார்கள். அகதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்தால்தானே அதன் மூலம் பணப்பட்டுவாடா செய்து போராளிகளை ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க வைக்க முடியும். பாலூட்ட வருவதுபோல்தான் வருவார்கள். மார்புக் காம்பில் நஞ்சு தோய்த்திருப்பது குடித்த பிறகுதானே தெரியவரும். இது இன்று நேற்று செய்வதா என்ன..? ஆதி காலந்தொட்டே அதுதானே வழக்கமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைவதற்கும் அவர்கள் அந்த தந்திரத்தைத்தானே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மருத்துவ வசதி செய்கிறேன், கல்வி தருகிறேன் என்று ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைந்து அங்கிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் சிறு சிறு இடைவெளிகளை ஊதிப் பெரிதாக்குவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவ வர்த்தகத்துக்கு வழி அமைத்துக் கொடுப்பார்கள்… அவர்கள் கிறிஸ்தவ அரசுக்கு வழி வகுத்துக் கொடுப்பார்கள்… கிறிஸ்தவ பார்ப்பனர்களும் கிறிஸ்தவ ஷத்ரியர்களும் கிறிஸ்தவ வைசியர்களும் உலக சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அழித்து ஒழிப்பார்கள். இதுதானே காலனி நாடுகளில் கிறிஸ்தவம் செய்துவந்த திருவிளையாடல்கள். &lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பார்… காலனி நாடுகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள். கடைசியில் சுதந்திரம் கொடுத்துவிட்டுப் போகும்போது அவர்களில் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவருடைய நகத்தில் ஒரு கீறல்… உடம்பில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டதா..? இந்தியாவில் ரத்தால் வரையப்பட்ட பிரிவினைக் கோடின் கதை உனக்குத் தெரியுமா..? கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி ஏகாதிபத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிட்டோம் என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கிறிஸ்தவன்  தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச் செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில்  பிரிவினையின் விஷத்தைக் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறான். சமத்துவ நெல்வயல்களில் வெறுப்பின் தீயை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். சகோதரத்துவ பூமியெங்கும் சந்தேகத்தின் கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். நேரடி ஆதிக்கத்தை கைவிட்டு விட்டு ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தமக்கான சிதையின் விறகுகளைத் தாங்களே எடுத்து வைக்கும்படி செய்து வருகிறான். நந்த வம்சம் கடலோரத்தில் முளைத்த நாணல்களைக் கொண்டு தமக்குள் தாக்கிக் கொண்டு மடிந்ததுபோல் பிற மதத்தினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாகிறார்கள். செப் 11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நேரடி தாக்குதல் இலக்காக தாம் இருக்கக் கூடாது என்று இந்தியாவை கேடயமாகப் பிடிக்கும் தந்திரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இனி தாலிபான்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைக் குறி வைப்பார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து இந்தியர்கள் மீது மேலும் வெறுப்பைக் கக்க வேதங்கள் ஓதியாயிற்று. போதாத குறைக்கு சீனாவையும் இப்பொது இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிட ஆரம்பித்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரான் இராக்கில் இனிமேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறிட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃப்கானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் கிறிஸ்தவ தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். கிழக்கு தைமூரின் கதை தெரியுமா உங்களுக்கு… இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் கேட்டுப் போராடியது. ஐநா சபையும் இன்னபிற கிறிஸ்தவ தேசங்களும் ஒடி வந்து கேட்டதை வாங்கிக் கொடுத்தன. அதற்குக் காரணமென்ன… கிழக்கு தைமூரில் 97 சதவிகிதத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு கொடூரம் என்னவென்றால், எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கும்படி கிறிஸ்தவ தேசங்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்போய் அனைவரும் கையேந்துகிறார்கள். கத்தியால் குத்தியவனிடமே போய் கருணை மனு கொடுத்தால் என்ன ஆகும்..? இந்துவும் முஸ்லீமும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் அமைதி திரும்பும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்தால் அந்த நாடுகளில் நிம்மதி பிறக்கும். சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் இலங்கையில் அமைதி திரும்பும். அண்டை வீட்டுக் காரன் அல்ல பின்னின்று ஆட்டுவிக்கும் அந்நிய தேசத்து கிறிஸ்தவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீரும். அதைவிட்டு மத்யஸ்தம் செய்ய கிறிஸ்தவ தேசங்களை நாடினால் என்ன நியாயம் கிடைக்கும். ஆடுகளின் பிரச்னையை ஓநாயிடம் முறையிட்டா தீர்த்துக் கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அப்படியானால் இலங்கையில் நடந்த அனைத்துக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறீர்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடை அணிந்தவர் : நிச்சயமாக அவர்களேதான் காரணம். இலங்கையின் கதையை முடித்தாகிவிட்டது. அடுத்ததாக இந்தியா குறிவைக்கப்பட்டிருக்கிறது. இண்டலெக்சுவல் அளவில் தலித் விரோத மதம் என்று இந்து மதத்துக்கு முத்திரை குத்தியாகிவிட்டது. அரசியல் அதிகாரம் ஏற்கெனவே சோனியா கைக்கு வந்துவிட்டது. பி.ஜே.பியும் கூட இன்று சோனியாவின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. ஜாயின் பி.ஜே.பி. வொர்க் ஃபார் காங்கிரஸ் என்ற உத்தரவுடன் பல ஒற்றர்களை பி.ஜே.பி.யில் ஊன்றியாகிவிட்டது. பி.ஜே.பி.யை. அவர்கள் நினைத்தாலும் தடுக்கமுடியாதபடி அடிப்படைவாதத்தை நோக்கிக் கொண்டு செல்ல இந்த ஒற்றர்கள் வெகுவாக உதவுவார்கள். காங்கிரஸில் இருக்கும் செக்யுலர் முட்டாள்களைக் கொண்டு அதை மேலும் கிளறிவிடுவார்கள். மெக்காலே ஒவ்வொரு இந்துவும் தன்னை இந்து என்று சொல்ல வெட்கப்பட வைப்பேன் என்றூ சூளுரைத்துக் கொண்டு பதவி ஏற்றான். சோனியா, ஒவ்வொரு இந்தியனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படும்படியான செயல்களைச் செய்ய வைத்து வருகிறாள். வர்த்தக நிறுவனங்கள் பூராவும் கிறிஸ்தவ முதலாளிகளால் நிரம்ப ஆரம்பித்திருக்கிறது. ஊடகம் ஏற்கெனவே அவர்கள் கைக்குப் போயாகிவிட்டது. கட்டடத்தை நின்ற நிலையிலேயே இடிந்து விழ வைக்க எல்லா இடங்களிலும் ரகசிய குண்டுகளைப் பொருத்தியாகிவிட்டது. ஒரே ஒரு ஸ்விட்சைத் தட்டினால் போதும் பன்னெடுங்காலமாக இருந்த வலிமையான கட்டடம் வெறும் மண் குவியலாகத் தரைமட்டமாக்கப்பட்டுவிடும். இலங்கையில் நடந்ததில் இருந்து இந்தியர்கள் தங்களுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இலங்கையின் அதே கதி இந்தியாவுக்கும் நேரும். அந்த நாள் வெகு தொலைவில் ஒன்றும் இல்லை. &lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-1315609256014025729?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/1315609256014025729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/1315609256014025729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/1315609256014025729'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/16.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 16'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-533347074712986785</id><published>2010-09-11T01:03:00.000-07:00</published><updated>2010-09-11T01:03:04.271-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 15</title><content type='html'>அனந்தன் : இந்தப் போரில் பல கிறிஸ்தவ பாதிரிகளும் பத்திரிகையளர்களும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்களே… பிரபாகரன் முதன் முதலில் கொன்றது கூட ஆல்ஃபிரெட் துரையப்பா என்ற கிறிஸ்தவரைத்தானே…&lt;br /&gt;&lt;br /&gt;காவி : ஏன் கொன்றார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பழிவாங்க அவரைக் கொன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : மிக மிகத் தவறு. இலங்கையில் நடந்த ஒரு மாநாட்டுக்கு இலங்கை அதிபரை அழைக்காதது, மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தியது, அனுமதி பெற்ற தேதியையும் தாண்டி மாநாட்டை நடத்தியது, அனுமதி மறுக்கப்பட்டவர்களை பேச அரங்குக்கு அழைத்து வந்தது, மின் கம்பம் சரிந்தது என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா நூற்றில் ஒரு சதவிகிதம்கூடக் காரணம் இல்லை. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் என்ன தெரியுமா..? ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுதான். ஆஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா..? வரதராஜ பெருமாள் கோவிலின் வாசலில் வைத்து கொன்றார் பிரபாகரன். பின்னால் பொங்கிப் பிரவகிக்கத் தொடங்கிய ரத்த அருவியின் முதல் துளி அது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் தன் மகனுக்கு சூட்டிய அழகுப் பெயர் என்ன தெரியுமா..? சார்லஸ்..! &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அது விடுதலைப் போரில் உயிர் துறந்த ஒரு மாவீரனின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அல்லவா..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடை அணிந்தவர் : அப்படித்தான் சொல்வார்கள். வீர மரணம் எத்தனையோ பேர் அடையத்தான் செய்தனர். ஆனால், பிரபாகரனுக்கு சார்லஸ் மட்டுமே நினைவுக்கு வந்திருக்கிறார். கிறிஸ்தவ நாடுகளின் செல்லப் பிள்ளையாக வேண்டுமல்லவா..? உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களையும் அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம்! வேலை முடிந்துவிட்டது. கழட்டி விட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : பிரபாகரன் சிங்களப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு அல்லவா உயிரிழந்தார். இதில் கிறிஸ்தவ சதி எங்கிருந்து வருகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;காவி :  கிறிஸ்தவ சதியின் வல்லமையே அதுதான். எந்தவொரு செயலுக்கும் மேலே வெண்ணிறத்தில் சாம்பல் படிந்ததுபோல் சாதுவாக ஒரு காரணம் இருக்கும். உள்ளுக்குள் ஒரு கிறிஸ்தவ காரணம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். அருகில் சென்று தொட்டுப் பார்ப்பவர்களுக்கே அந்த அழிவின் வெப்பம் தெரியும். பிரபாகரன் மரணத்திலும் அப்படித்தான். உங்களை ஒன்று கேட்கிறேன்… பிரபாகரனுடைய மரணத்தை இந்த உலகில் பெரும் ஆர்வத்துடன் யார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : சிங்கள அரசியல்வாதிகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அதுதான் இல்லை. அவர்கள் அவரது இருப்பை உள்ளூர விரும்பினார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களுடைய அராஜகங்களைத் தொடர முடியும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர் அல்லது தமிழர் யாராவது..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அதுவும் இல்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் (சிறிது யோசித்தபடியே) : புலிகளால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது… (சட்டென்று நினைவு வந்தவராக) சோனியா காந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி : ஆனால், அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை கூடக் கொடுக்க வேண்டாம் என்று கருணையோடு மன்னிப்பு அல்லவா வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி (அலட்சியமாக) : கருணையா… ராஜீவ் கொலைக்கு எவரொருவருக்காவது சட்டபூர்வமாக தண்டனை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றால், யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்க அவர் சம்மதம் தந்தார் என்றால் அந்த தூக்குக்கயிறு நேராக அவரது கழுத்தை நோக்கி நீளும் என்ற பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : பயமா..? அவர் எதற்கு பயப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : பிறகு, கொலை செய்யச் சொன்னவர் பயப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்..?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் (அதிர்ந்தபடி) : ராஜீவைக் கொல்லச் சொன்னது சோனியாவா..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி : ஆமாம் அவரேதான். லண்டனில் ராஜீவ் படித்த கல்லூரியில் வைத்து ஆண்டனியோ மெய்னோ சந்தித்தபோதே ராஜீவின் மரணக் கடிகாரத்தின் மணல் துளிகள்  உதிர ஆரம்பித்துவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புல்வெளியில் ராஜீவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட சோனியாவின் காதல் கரங்கள் அன்றே இறுக்கத் தொடங்கிவிட்டன. சஞ்சய் காந்தியின் விமான விபத்து… இந்திரா காந்தியின் படுகொலை… என சோனியாவுக்கான தடைகள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன. ராஜீவின் மரணம் கடைசி தகர்ப்பு. அது பிரபாகரனின் மூலம் நிறைவேற்றப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : புலிகள் ஏன் அதைச் செய்ய முன் வந்தார்கள்? அதனால் அவர்களுடைய இயக்கத்துக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு அல்லவா ஏற்படும். அது தெரியாதவர்களா அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காவி : அவர்கள் அதைச் செய்ய முன் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. மேலோட்டமாகத் தெரிவது புலிகளுக்குப் பிடிக்காத வகையில் ராஜீவ் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். ஆனால், அதற்காக கொல்லும் அளவுக்குப் போக அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லைதான். உண்மையில், ராஜீவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த விஷயங்களே வேறு. ஆயுதப் போரை ஆரம்பித்துவிட்டோம். இலங்கை அரசும் ரொம்பவும் கொடூரமாகவே நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டாட்சிக்கு ஒப்புக் கொண்டால் எங்களுக்கு மிகவும் அவமானமாகப் போய்விடும். என்னையே யாராவது கொன்றாலும் கொன்றுவிடுவார்கள். எனவே, நீங்கள் எங்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைப்பதுபோல் மிரட்டுங்கள். வேறு வழியில்லாததுபோல் நாங்களும் நடந்து கொள்கிறோம். அடிப்பதுபோல் அடியுங்கள் அழுவதுபோல் அழுகிறோம் என்று திட்டம் போட்டுத்தான் ராஜீவ்-பிரபாகரன் விவகாரங்கள் நடந்தன. எனவே, பிரபாகரன் ராஜீவைக் கொல்ல ஒருபோதும் தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால், அதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சோனியா காந்தி, பிரபாகரனுடன் ஒரு சதித்திட்டம்  தீட்டினார். ராஜீவ் இருக்கும்வரை மாநில ஆட்சிக்கு மேலாக வேறு எதுவும் கிடைக்காது. அவரைக் கொன்றால் அதற்கடுத்து இந்திய ஆட்சி என் கைக்கு வரும். நான் இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ஈழம் மலர நிச்சயம் உதவுவேன் என்று உத்தரவாதம் தந்தார். பிரபாகரன் அதை நம்பினார். ஆக ராஜீவைக் கொல்வது என்பது வெகு காலத்துக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்களை உருவாக்கும் பணி தான் அதன் பிறகு நடந்தது. அப்போதும் சர்வதேச அளவில் தங்கள் இயக்கத்தின் பெயருக்கு ஏற்படும் களங்கம் ஏற்படுமே என்று அவர் கலங்கியபோது, சோனியா, ரிச்சர்ட் ஜெயவர்த்தனா மூலம் சிங்களக் கைக்கூலியை வைத்து ஒரு பொய்யான தாக்குதல் முயற்சியை அரங்கேற்றினார். நாளை புலிகள் மேல் பழி வராமல் பார்த்துக் கொள்ள வேறு உத்தரவாதங்களும் தரப்பட்டன. என்னதான் ஆனாலும் வழக்கை இந்திய அதிகாரிகள்தானே எடுத்து நடத்துவார்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்று சோனியா உறுதி அளித்தார். இது போதாதென்று பெருமரங்கள் விழும்போது பூமியில் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்று இந்திரா காந்தி இறந்தபோது நடந்த சீக்கியக் கொலைகளை நியாயப்படுத்தியிருந்தார் ராஜீவ். எனவே, சீக்கியர்களுக்கும் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. பழியை இவர்கள் யார் மேலாவது போட்டுத் தப்பிவிடலாம் என்று பிரபாகரனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் புலிகள் அத்தனை பெரிய செயலைச் செய்ய முன் வந்தனர். ஆனால், மற்றவர்களைவிட தங்களை நம்பும் குணம் அவர்களுக்கு உண்டு. யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல் செய்து முடிக்கத்தான் அவர்கள் திட்டம் தீட்டினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது அல்லவா..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அது வேறொரு சதியின் அங்கம். அந்தப் பெரும் விபத்தில் புகைப்படக்காரர் இறந்துவிட்டார். ஆனால், அவர் பயன்படுத்திய கேமரா மட்டும் சேதமடையாமல் எப்படி தப்பியது..? சோனியாவின் டபுள் கேம் அது. புலிகளை ஒரு கட்டுக்குள் வைக்க செய்யப்பட்ட சதி அது. அவர்கள்தான் செய்தது என்பது தெரியாமல் போனால், செய்யச் சொன்னவர்களுக்கு இன்னும் அபாயம் அல்லவா. அதனால் அந்த கேமரா அங்கு போடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் கொலைதிட்டத்துக்கு உதவியாக இருந்த வேறு பலரைக் காட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு வீடியோ கேஸட்டை கமுக்கமாக மறைத்தும் விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தேர்தல் காலம். ராஜீவுக்குப் பிரதமராக வாய்ப்புகள் மங்கலாக இருந்த நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், ராஜீவ் ஆட்சிக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால்தானே புலிகள் அந்தக் கொலையைச் செய்ததார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காவி : இல்லை. அது உண்மை இல்லை. ராஜீவ் மத்திய ஆட்சியை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்த நேரம். போபார்ஸ் கேஸ் மூலம் 1989 தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அவருடைய நிலைமை எந்த வகையிலும் சீரடைந்திருக்கவில்லை. போபார்ஸ் கேஸை துரிதப்படுத்தினார்கள் என்பதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கலைத்திருந்தார். கைப்பொம்மையாக நியமித்த சந்திர சேகர் ஆட்சியையும் அல்ப காரணம் சொல்லி கவிழ்த்திருந்தார். எனவே, அப்போதைய தேர்தலில்  ராஜீவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. அனுதாப அலை மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; நாமே ஒரு சிறிய விபத்தை ஏற்பாடு செய்து, அதில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து தேர்தலைச் சந்திப்போம். எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருக்கு தலையணை மந்திரம் ஓதப்பட்டது. அப்பாவி ராஜீவ் அதை நம்பினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சதித்திட்டம் அவருக்கு விளக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உரையாற்றப் போகும்போது நேராக மேடைக்குச் செல்ல வேண்டாம். மேடைப் படிகளுக்கு அருகில் குண்டு வெடிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் அந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தில் இருங்கள். சுற்றிலும் நமது பாதுகாப்பு வீரர்கள்தான் இருப்பார்கள். மேலும் குண்டு வெடித்துச் சிதறும்போது அதில் பொதியப்பட்டிருக்கும் ஆணி போன்றவை மேல் நோக்கித்தான் சிதறும். நீங்கள் குனிந்து இருந்தால் உடம்புக்கு மேலாக அது தெறித்துப் போய்விடும். நீங்கள் குனிவதற்குத் தோதாக கையில் சந்தன மாலையுடன் ஒருவர் அங்கு காத்திருப்பார். அவர் மாலையை அணிவித்துவிட்டு உங்கள் காலில் விழுவார். நீங்கள் அவரைத் தூக்கிவிடும் சாக்கில் குனிந்து கொள்ளுங்கள். மேடையின் படியில் வெடிக்கும் குண்டு வெடித்துச் சிதறி உங்களுடைய உடம்பில் லேசான சிராய்ப்பை மட்டுமே ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள். மாலையுடன் நிற்கும் வேறு யாருக்கு அருகிலாவது நீங்கள் போய்விடக்கூடாது என்பதற்காக நமது கட்சி உறுப்பினர் ஒருவர் சந்தனமாலைப் பெண்ணுக்கு அருகில் நின்று கொண்டிருப்பார் என்று திட்டம் அவருக்குச் சொல்லப்பட்டது. அதை ராஜீவ் நம்பினார். விடுதலைப் புலிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டை படியில் பொருத்தாமல் சந்தனமாலையைக் கையில் வைத்திருப்பவரின் மடியில் பொருத்தினார்கள் படுபாவிகள். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் இருக்க குனியச் சொன்னார்கள். அந்தோ… அதுதான் அவருக்கு உலையும் வைத்தது. ஒருவேளை காலில் விழுந்தவரைத் தூக்க முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் குண்டு வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் சாய்ந்து தப்பியிருக்கக் கூடும். என்ன செய்ய? பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடத்துக் கீழ் தான் படுகுழி வெட்டப்பட்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;யார் செய்தது என்று தெரியாமல் கச்சிதமாக முடிக்க வேண்டும். அப்படியே தெரிய வந்தாலும் யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக்கூடாது. சோனியா  ஆட்சிக்கு வந்ததும்  புலிகளுக்கு ஈழத்தைப் பெற்றுத்தருவார் என ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கு மாநில அதிகாரம் பெற்றுத்தரப் பாடுபட்ட மிஸ்டர் கிளீன் ஸ்ரீ பெரும்புதூரில் முன் இரவில் வந்து சேர்ந்தார். மேடையைப் பார்த்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். படியருகே சிலர் நின்றிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறார்களே என்று அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தார். பெரு மரங்கள் சாயும்போது சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவராயிற்றே. ஒரு மாபெரும் யாகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சில உயிர்களை பலியிடுவதில் தவறில்லை என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார். ஆனால், பாவம் அன்றைய யாகத்தின் பலி ஆடு அவரே என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மேடைக்குப் போக வேண்டியவர் நேராகக் கூட்டத்துக்குள் கண்களை ஓட்டினார். சற்று தொலைவில் மங்கலான விளக்கொளியில் சந்தனமாலை பளபளத்தது. அருகில் கட்சி உறுப்பினர் நிற்பதும் தெரிந்தது. ராஜீவ் அவர்களை நோக்கி நடந்தார். மாலையைக் கழுத்தில் அணிவித்துவிட்டு அப்படியே காலில் விழுந்து கும்பிட்டார். விழுந்தவரைத் தூக்கிவிடக் குனிந்தார் ராஜீவ். குனிந்தவர் நிமிரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-533347074712986785?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/533347074712986785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/533347074712986785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/533347074712986785'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/15.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 15'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-434741217489252050</id><published>2010-09-11T01:00:00.000-07:00</published><updated>2010-09-11T01:00:51.520-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 14</title><content type='html'>அனந்தன் : இந்தப் போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடைக்காரர் (எந்தவித சலனமும் இல்லாமல்): போரில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அந்த மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;காவி : அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : என்னது எல்லாருக்கும் தெரியுமா..? தெரிந்துமா அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : ஆமாம். அவர்கள்தான் தங்கள் எதிரிகள் அனைவரையும் தமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும்படி திசை திருப்பிவிடுவதில் கெட்டிக்காரர்களாயிற்றே. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : யாரைச் சொல்கிறீர்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;காவி : வேறு யாராக இருக்க முடியும். உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : இலங்கையில் நடக்கும் சண்டை சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்தானே நடக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;காவி : குழந்தை போலவே கேட்கிறீர்களே..? இலங்கையில் நடக்கும் பிரச்னையின் மூல வேர் எங்கு இருக்கிறது தெரியுமா… கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் சிங்கள கடற்கரையில் தங்கள் கூடாரத்துக்காக என்றைக்குக் குழி தோண்ட ஆரம்பித்ததோ அன்றே இலங்கையின் அழிவுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுவிட்டது. 1500களில் வந்திறங்கிய அந்த கிறிஸ்தவக் கூட்டம் இலங்கை என்பது ஒரு தீவு… இரண்டு தேசங்கள் என்று பிரிவினையின் விதைகளை சரித்திரத்தின் சதுப்பு நிலத்தில் ஆழமாக ஊன்றினார்கள். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் அந்தச் செடியின் வேருக்கு நீர் ஊற்றி வளர்த்தார்கள். கிறிஸ்தவர்கள் அன்று ஊன்றிய பிரிவினை விதைதான் இன்று மரமாக வளர்ந்து கிளைகளில் எல்லாம் மண்டையோடுகள் தொங்க, இலைகளில் இருந்தெல்லாம் ரத்தத்துளிகள் சொட்ட இலங்கை முழுவதுக்குமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;டிவைட் அண்ட் ரூல் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் சிறுபான்மையாக இருந்த தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள். காலனி நாடுகளை விட்டுச் சென்ற பிறகு, டிவைட் அண்ட் டெஸ்ட்ராய் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதற்குத் தோதாக நாட்டை விட்டுச் செல்லும்போது அழகாக ஆட்சியை சிங்களக் கிறிஸ்தவர்களின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்றாக இருந்த இந்தியாவை பிரித்து ரத்தக் களறி ஆக்கினார்கள். இந்திய பிரிவினையில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் பேர் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சயனைட் போல் உடனடி விளைவு. இலங்கைக்கு மென் விஷம். 30 வருடங்களில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை ஐரோப்பிய கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னாலும் அங்கு தமிழர் - சிங்களர் சண்டை நடந்துதானே வந்திருக்கிறது. அல்லது அவர்கள் போன பிறகாவது அதைத் தொடராமலிருந்திருக்கலாமே..?&lt;br /&gt;&lt;br /&gt;காவி : உண்மைதான். இந்த உலகில் மனித இனம் பழங்குடிகளாக, நாடோடிகளாக இருந்த காலத்தில் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துதான் வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படையில், தேசத்தின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபோதும் தமக்குள் சண்டையிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட ரோமன் கத்தோலிக்கர்கள் பிராட்டஸ்டண்ட்கள் என்று வெட்டு குத்துகள் சரமாரியாக நடந்துதான் வந்திருக்கிறது. ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என எல்லா தேசங்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தன. இன்று அந்த நாடுகளில் எல்லாம் அமைதி திரும்பி சுபிட்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் மட்டும் கடந்த காலச் சண்டைகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஏன் என்று ஒருவர் சிறிது யோசித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : பிற மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் அடிப்படையில் சண்டையை விரும்புபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அதுதான் இல்லை. எல்லாருமே கடந்த காலக் காயங்களை மறந்துவிட்டு வாழத்தான் விரும்புகிறார்கள். ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதியில் இருக்கும் இடைவெளிகளைப் பெரிதாக்கி, காயங்களை ஆறவிடாமல் கிறிஸ்தவர்கள் கீறிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்காவில் அதை மற்ற மதத்தினர் செய்வதில்லை. தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்த ஓநாய்கள் ஒன்று கூடிவிட்டன. உலகில் இருக்கும் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் என சாது மிருகங்கள் அனைத்தையும் வேட்டையாடக் கிளம்பிவிட்டன. இன்று உலகின் எந்தவொரு நாட்டையும் எடுத்துப் பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா..? அங்கு அமைதி நிலவுகிறதா..? அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். அவர்களுடைய அஜெண்டா மிகவும் எளிமையானது. உலகில் இருக்கும் அனைவரும் கிறிஸ்தவராக மாறி ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு துணைபோக வேண்டும். இல்லையென்றால் தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துபோகும்படிச் செய்வார்கள். If your are not with us. your are against us. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மையினரிடம் சுய உரிமைப் போராட்டத்தை நடத்தச் சொல்லி தூண்டிவிடுவார்கள். பெரும்பான்மையிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும்படி அறிவுருத்துவார்கள். இரு தரப்புக்கும் அதி நவீன ஆயுதங்களை அணி அணியாக அனுப்பி வைப்பார்கள். இதுதான்  அவர்களுடைய அயலுறவுக் கொள்கை. உலகின் எந்த வளம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைச் சுரண்டுவது… தான் தயாரிக்கும் ஆயுதங்களுக்கான சந்தையைப் பலப்படுத்த உள்நாட்டுக் கலவரங்களையும் அண்டைநாடுகளுடன் சண்டைகளையும் தூண்டுவது, தீவிரவாத, பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வது, கிறிஸ்தவத்தைத் தவிர பிற மதங்களைப் பூண்டோடு அழிப்பது என்ற தன் செயல் திட்டத்தை வெகு சாமர்த்தியமாக அது நிறைவேற்றிக் கொண்டுவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், இலங்கையில்  சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாக புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே. &lt;br /&gt;&lt;br /&gt;காவி : அங்குதான் நீங்கள் மட்டுமல்ல. உலகமே ஏமாந்துவிடுகிறது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான். சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதங்கள் யாரிடம் இருந்து கிடைத்தன. இதே கிறிஸ்தவ தேசங்களிடமிருந்துதானே. அதை வாங்குவதற்கான பணம் யாரால் தரப்பட்டது. சிங்கள அரசுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு, தீவிரவாதத்தை ஒடுக்க என்ற பெயரிலும் விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர்ந்த அகதிகள் மூலமாகவும் பணம் தரப்பட்டது. ஆக, அகதிகளுக்கு உதவுகிறோம்; வளரும் நாடுகள் வளர உதவுகிறோம் என்ற பெயரில் நல்ல பெயரையும் சம்பாதித்தாயிற்று. தங்கள் ஆயுத விற்பனைக்கான சந்தையையும் உறுதிப்படுத்தியாயிற்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற மதங்களை அழிக்கவும் செய்தாயிற்று. கிறிஸ்தவத்தை வேரூன்றவும் வழி செய்தாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றைத் திரிப்பதன் மூலம் இரு பிரிவினரிடையே வேற்றுமையை வளர்த்து அவர்களை எதிரிகளாக்குவது. இருவருக்குமே ஆயுதங்களை வழங்குவது. இருவரையுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைப்பது. மிகவும் அருமையான திரைக்கதை. இலங்கையில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா  குறிவைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, செப்டம்பர் 11க்குப் பிறகு, இஸ்லாமியரின் முதல் எதிரியாக நாம் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என்று தீர்மானித்து இந்தியா பக்கம் நெருங்குவதுபோல் பாவலா காட்ட ஆரம்பித்திருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் இனி மேல் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைத் தாக்க ஆரம்பிப்பார்கள். இந்தியாவும் பதிலுக்குத் தாக்கும். அமெரிக்கா இரண்டு பேருக்கும் பணமும் ஆயுதமும் கொடுத்து பகைமை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளும். இதுதான் அவர்களுடைய எளிய செயல் திட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா கடைசியாக தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும். கடைசிக் கட்டப் போர் குறித்த அந்த அறிக்கையில் தமிழர்களுக்கு அடைகலம் தந்தது எல்லாமே கிறிஸ்தவ தேவாலயங்கள்தான்.  பிற மத கோயில்கள் மசூதிகளில் மக்கள் தங்கியிருந்தால் அது பொதுவாக வழிபாட்டுத்தலம் என்று மொட்டையாகக் குறிப்பிடப்படும். கடைசி கட்டத்தில் அங்கிருந்து உதவியவர்கள் எல்லாமே பாதிரியார்கள்தான். இதற்குப் பின்னாலும் தெளிவான சதியும் மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. நீங்கள் கோவில்களில் தஞ்சம் புகுந்தால் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும். மசூதிக்குள் ஒளிந்தால் மசூதி தகர்க்கப்படும். தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். பாதிரியார்களிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே ரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா போரை நடத்தியது யார் என்பது..? &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் நடத்தியது அவர்கள் இல்லையே. போரை நேரடியாக முன்னெடுத்தது இவர்கள்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;காவி : அது முழு உண்மையில்லை. இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, ஜுனியஸ் ரிச்சர்ட்  ஜெயவர்த்தனே, சாலமன் பண்டாரநாயகா,  இன்றைய ராஜபக்சே வரை யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்த வேஷம் போட்டுக் கொண்டவர்கள். அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தப் போரை நடத்துகிறோம் என்று அவர்கள் அனைவருமே சொன்னார்கள். உலகில் பொதுவாக போரை நிறுத்தினால்தான் அமைதி திரும்பும். ஆனால், இங்கோ போர் நடத்தினால்தான் அமைதி திரும்புமாம். வேதாகமத்தில் எந்த புனித தூதர் இதைச் சொல்லியிருக்கிறாரோ..? &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மட்டும் விதிவிலக்கா என்ன… அவர்களுடைய ஆஸ்தான ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர். அவர் என்ன செய்தார். அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தார். இவ்வளவு ஏன்…?  பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்..? தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்… சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனை ஆரம்பத்திலிருந்தே மூளைச் சலவை செய்தது கிறிஸ்தவ திருச்சபைதான். 1970களில் அவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்த போதிலிருந்தே அவருடைய காட்ஃபாதராக இருந்தது கிறிஸ்தவ பாதிரிகள்தான். தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால், அவரைப் பின்னால் இருந்து இயக்கிய கிறிஸ்தவ சக்திகளுக்கு வேறு கணக்குகள் இருந்தன. பிரபாகரன் பாவம் வெறும் அம்புதான். வில்லும் வில்லைப் பிடித்திருக்கும் கைகளும் வேறு நண்பரே…&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-434741217489252050?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/434741217489252050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/434741217489252050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/434741217489252050'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/14.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 14'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-6306753243433737687</id><published>2010-09-05T20:59:00.001-07:00</published><updated>2010-09-05T20:59:36.221-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 13</title><content type='html'>அனந்தன் : இலங்கையில் நடந்த சிறுபான்மை, பெரும்பான்மை பிரச்னை இப்படியான கொடூரமான நிகழ்வுகளால் நிரம்புவதற்கு மறைமுகமாக முக்கியமான காரணம் அங்கிருந்த இரண்டாவது வலுவான சமூகமான இஸ்லாமிய தமிழர்கள்தான். நீங்கள் மட்டும் தமிழீழத்துக்கு ஆதரவாக நின்றிருந்தால் சிங்களப் பெரும்பான்மை இந்த அளவுக்கு வன்முறையைக் கையில் எடுத்திருக்காது. அது தமிழர்களை விளிம்புக்குத் தள்ளியிருக்காது. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியும் அதிகரித்திருக்கும். இரு தரப்புமே ஒரு சுமுகமான தீர்வுக்கு வந்திருக்க முடியும். நீங்கள் எடுத்த பிழையான நிலைப்பாடுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று நான் சொல்கிறேன். மறுக்க முடியுமா உங்களால். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர் : துப்பாக்கி முனையில் மிரட்டிக் கூட்டி வந்திருக்கும் உங்களால் எது வேண்டுமானாலும் சொல்ல முடியும். என்னால், மறுக்க முடியாதுதான். ஆனால், சில உண்மையை உங்களுக்கும் உலகுக்கும் சொல்லிப் புரியவைக்க விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக மக்களுக்கு இலங்கைப் பிரச்னை என்றால் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் சிங்களர்களுக்கும் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்னை என்று தான் தெரியும். தமிழ் ஈழம் என்பதுதான் ஒட்டு மொத்த தமிழர்களின் இலக்கு என்றே பெரும்பாலான ஊடகங்களில் சித்திரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு இஸ்லாமியத் தமிழர் என்றொரு தனிச் சிறுபான்மை இனமும் இருக்கிறது. அதன் தேவைகள், கனவுகள், உரிமைகள், இலக்குகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை என்ற விஷயம் யாருக்கும் தெரிவதில்லை. அதனால்தான் ஒரு லட்சம் இஸ்லாமியர்களை போட்டது போட்டபடி தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தைவிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று துரத்தியடித்தவர்களை சுதந்திரப் போராளிகள் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறது. அல்லாவைத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன குழந்தைகளை அல்லாவின் சன்னிதியிலேயே கொன்று குவித்தவர்களை வீரர்கள் என்று போற்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் மட்டுமல்ல... இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் பரவலாக வசிப்பதோடு கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினராகவும் வசித்துவருகிறார்கள். இன்று நேற்று அல்ல... தமிழர்கள் இந்த இலங்கையில் வாழும் காலந்தொட்டே இஸ்லாமியரும் வாழ்ந்துவருகிறார்கள். தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாங்கள் தமிழர்கள் ஆகிவிடுவதில்லை. எங்களுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்கள். தாயுக்கும் பிள்ளைக்குமே அந்த கதி... இங்கோ தனித்தனியான இரு நபர்களுக்கும் சேர்த்து ஒருவரே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். உன் சிறகுகளை வெட்டிக் கொடுத்துவிடு... நான் உன்னைச் சுமந்துகொண்டு பறக்கிறேன் என்றார்கள். எதற்கு..? உங்களுக்காவும் சேர்த்து நாங்களே சவப்பெட்டி தயாரித்துத் தருகிறோம் என்றார்கள். எதற்கு..? எங்களுக்காக யாரும் போராட வேண்டாம். எங்கள் எதிரிகளை நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம் என்று நாங்கள் சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னையின் ஆணிவேரே அதில்தான் இருக்கிறது. விடுதலைப் புலிகள் தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டார்கள். அது முதலாவது தவறு. இரண்டாவதாக அவர்கள் மிகவும் தவறான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்கள். இரண்டுமே இஸ்லாமிய தமிழ் சமூகத்துக்கு உடன்படான விஷயம் அல்ல. இதை நான் சற்று விளக்கிச் சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மொழியை முதன்மைப்படுத்திப் போராடினார்கள். இஸ்லாமியரான எங்களுக்கு தேசம், இனம், மொழி இவையெல்லாமே இரண்டாம்பட்சமானவைதான். நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்குவோம். வேறு எந்த ஒன்றின் அடிப்படையிலும் அணிதிரளமாட்டோம். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல் இலங்கை விஷயத்தில், இரண்டாவது பெரிய சிறுபான்மை இனத்தவரான எங்களுக்கு நியாயம் எது என்பது தெரிந்திருக்கிறது. நாங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறோமோ அதற்கு உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று மட்டுமே கேட்கிறோம். அதனால்தான் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் ஆரம்பத்தில் 50-50 சதவிகித அதிகாரப் பகிர்வு கேட்டபோதே நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. தனி நாடு வேண்டும் என்று கேட்டதை எப்படி ஆதரிப்போம்? சிறுபான்மையான நாங்கள் பயந்துவிட்டோம் என்று பழித்தார்கள். உண்மைக்கு நெருக்கமாக இருப்பதைக் கோழைத்தனம் என்று சொல்வீர்கள் என்றால் நாங்கள் கோழைகளாக இருப்பதையே விரும்புகிறோம். துரோகிகள் என்று தூற்றினார்கள். மாற்றுக் கருத்து கொண்டு எதிரில் நிற்பவர்களையும் எதிரிகளாக்கிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுதான் வீரம் என்றால் அத்தகைய வீரம் எங்களுக்குத் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்கள் அப்படி ஒன்றும் சிறுபான்மையினரைத் தரக்குறைவாக நடத்திவிடவில்லை. எங்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி... உரிய அங்கீகாரம் கொடுத்தே வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களுக்கு அவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்களோ அதற்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்திருந்தது. சிங்களர்கள், அதிகாரம் தங்கள் கையில் இல்லாதபோது கைவிட்டுப் போன ஒன்றை அதிகாரம் கையில் கிடைத்ததும் சரி செய்ய முயன்றார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? திருட்டுத்தனம் செய்தவரைப் பிடித்து திருடியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடு என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக திருட்டை ஆதரிக்க முடியுமா என்ன..? நேற்றுவரை நான் திருடிக் கொண்டிருந்தேன்... இனியும் தொடர்ந்து திருட அனுமதித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னால் யார்தான் அதற்கு சம்மதிப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்கள் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு தமிழும் தெரிந்திருந்தது. சிங்களமும் தெரிந்திருந்தது. எனவே, நாங்கள் சிங்கள வழிக் கல்வியை ஏற்றுக் கொண்டோம். இதில் துரோகம் எங்கே வந்தது? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் அனைத்து துறைகளிலும் அவர்களுடைய இருப்புக்கு மீறிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, கல்வித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த சட்டத்தைக் கொண்டுவந்தது எங்கள் கல்வி அமைச்சர்தான். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. ஒரு நியாயமான செயலை துணிச்சலுடன் செய்தோம். அவ்வளவுதான். உண்மையைச் சொல்லப்போனால் அந்த சட்டத்தினால் நகர்ப்புற சிங்களர்கள்தான் தமிழர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அது உண்மையில் இலங்கையின் பின் தங்கிய பகுதியில் வசித்த மக்களுக்கு முன்னுக்கு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றது. ஆனால், தமிழர்கள் அதை இன அடிப்படையில் பார்த்து அய்யோ... பெரும்பான்மை சிறுபான்மையை நசுக்குகிறது... நாங்கள் பிரிந்து போகிறோம் என்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள். அமைதியாகப் போராடினோம். பலன் கிடைக்கவில்லை... அதனால் ஆயுதத்தை எடுத்தோம் என்றார்கள். ஒரு தவறை அமைதியாகச் செய்தால் மட்டும் அது சரியாகிவிடுமா.? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நாட்டைப் பிரித்துக் கொடு என்று கேட்பது எந்தவகையில் நியாயம்..? நாளைக்கே சைவப் பிள்ளைமார்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் அவர்கள் சாதிக்கு ஆதரவாகத்தான்  வாக்களிப்பார்கள். கரையார்களிடம் கேட்டால் அவர்கள் தங்கள் சாதிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். உடனே அவர்களுக்கென்று கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுக்க முடியுமா.? அண்டையில் இருக்கும் இந்தியா முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ஒருவருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. உலகில் எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அந்தப் போராளியைத் தன் சக தோழராக நினைக்கும் க்யூபாவே ஆதரவு தரவில்லை. ஏனென்றால் அது தர்மமல்ல. அப்படி தர்மமாகாத ஒரு செயலுக்கு இஸ்லாமியர் துணை போகாதது எப்படி தவறாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை பெரும்பான்மை உறவு என்பது கணவன் மனைவி உறவைப் போன்றது. கணவன் கொடுமைப்படுத்தினால் அப்போது கூட மனைவி முதலில் அவனைத் திருத்தி குடும்பம் சரிவர நடக்க முயற்சி செய்யவேண்டும். முடியவே முடியவில்லை என்றால்தான் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அதைவிட்டுவிட்டு கணவன் எந்த கொடுமையும் செய்யாதபோதே, நாளைக்கு நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் தலையில் கல்லைப் போடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்... என்னைக் கிணற்றில் தள்ளமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்..? என்று அதீதமாகப் பயந்து அவனை அடிக்க ஆரம்பித்தால் அவனும் வேறு வழியின்றி கையை ஓங்கத்தான் செய்வான். ஆம்பளை அடிச்சா கொஞ்சம் வலி கூடுதலாகத்தான் இருக்கும். என்ன செய்ய இந்த இடத்தில் அவன் ஆணாயிற்றே... அப்படி உனக்கு அவனுடன் வாழ முடியவில்லை என்றால் ஓடிப் போய்விடு. அதைவிட்டுவிட்டு கணவனின் சொத்தில் பங்கு வேண்டும்... அது வேண்டும்... இது வேண்டும் என்று கேட்டால்..? தமிழர்கள் அதைத்தான் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய அதிகப்பிரசங்கித்தனமான செயல்களினால் அவர்களுக்கு அதிக இழப்பை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அப்படி செய்யவில்லை என்பதால் சிங்களர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை. இதை வைத்துக் கொண்டு நாங்கள் சிங்களர்களுக்கு துணை போகிறோம் என்று எப்படிச் சொல்லமுடியும்? நாங்கள் நியாயத்தின் பக்கம் நின்றோம். நடுநிலை வகித்தோம். அதற்காக விடுதலைப் புலிகளால் நாங்கள் பட்ட வேதனை இருக்கிறதே சொல்லி மாளாது. நாளை ஈழம் என்ற ஒன்று மலர்ந்ததென்றால் இன்று சிங்களர்களிடம் சிறுபான்மையினரான தமிழர்கள் படும் துயரத்தைவிட அதிக துயரத்தை தமிழர்களிடம் நாங்கள் பட வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நிலத்தில் இருந்த எங்கள் விளை நிலங்கள் முழுவதும் விடுதலைப் புலிகளால் கையக்கப்படுத்தப்பட்டன. எங்கள் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. எங்கள் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. எங்களில் பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் எங்களுக்கு இலங்கை முழுவதும் சென்றுவர வேண்டியிருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே நாங்கள் ஒற்றர்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம். எங்களில் சிலர் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். சிலர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு யாழ்பாணத்தில் இருந்த இஸ்லாமியர் அனைவரும் துரத்தியடிக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்? அழுத்திக் கேட்டால் நாங்கள்தான் மன்னிப்புக் கேட்டுவிட்டோமே என்று ஒரு அசட்டுத்தனமான பதில். அவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டால் நாம் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாள் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. புலிகளின் வாகனம் அமைதியாக இருந்த தெருக்களுக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்தியபடியே நுழைந்தது. அதன் கூரையில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருந்தது. எல்லா இஸ்லாமியர்களும் ஓஸ்மானியா கல்லுரி வளாகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏதோ முக்கிய செய்தி சொல்லப் போகிறார்கள்… ஈழம் மலர்ந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆவலாக எல்லாரும் கூடினோம். இரண்டு மணி நேரத்துக்குள் எல்லா இஸ்லாமியரும் ஓடிப் போய்விடுங்கள்... என்று ஒற்றை வரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வீடு வாசல், நில புலன், கடை கண்ணிகள் அனைத்தையும் விட்டுவிட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் என்றென்றைக்குமாக தங்கள் பூர்விக மண்ணை விட்டு இடம் பெயர்க்கப்பட்டார்கள். கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ வேண்டிய கொடூரம். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று துரத்தப்பட்டவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை.  நகரமே கல்லறைத் தோட்டமாகிவிட்டிருக்கும் சூழலில் அகதிகள் முகாம் வீடாகியிருக்கும் கதையைப் பெரிதாகச் சொல்லவந்துவிட்டாயே என்கிறீர்களா? அது சரிதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு போயிருந்தால் உயிரோடு வாழ விட்டிருக்கிறார்களே அதுவே பெரிதென்று நினைத்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டிருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முழுவதிலும் இஸ்லாமியர்கள் சிறு சிறு குழுக்களாக வசித்து வந்தனர். ஒவ்வொரு சிறு குழுவுக்கும் ஒரு சிறிய மசூதி இருந்தது. காட்டாங்குடியிலும் ஒரு மசூதி இருந்தது. உலகிலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதுவும் ஒன்று. ஒரு நாள், தென்றல் காற்று மாலை நேரப் பிரார்த்தனைக்கான பாங்கு ஒலியைச் சுமந்தபடி இதமாகத் தவழ்ந்து சென்றது. அது அவர்களுக்கான மரண அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் மசூதி நோக்கி நடந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தெருக்களில் எல்லா ஊர்களையும் போலவே கூக்குரலும் கும்மளமுமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் விளையாட்டை நிறுத்திவிட்டு மசூதிக்கு உற்சாகத்துடன் ஓடினர். அக்ரம் அவர்களில் மிகவும் குட்டிப் பையன். ஆறு வயதுதான் ஆகியிருந்தது. அஜ்மல், ஜரூன், ரிஸ்வான் ஆகியோருக்கு பத்து வயதாகியிருந்தது. ஆஸ்ரஃபுக்கு 11 வயது. தல்ஹன், ஃபவுஸர் ஹஸன், ஆரிஃப், மகீன், கமாலுதீன், இம்தியாஸ் ஆகியோருக்கு 12 வயது. அன்ஸ், ஜவாத்க்கு வயது 13. ஜாஃபர், மொகம்மத் ஃபவுஸர், சஃபர் ஆகியோரின் வயது 14. 15 வயதான ஃபல்சான் தான் அந்தக் குழுவிலேயே அதிக வயது ஆனவன். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். எப்போதும் சேர்ந்தேதான் பள்ளிக்குச் செல்வார்கள். திரும்பி வருவார்கள். தெருவில் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள். ஒன்றாகத்தான் மசூதிக்குச் செல்வார்கள். அதனால்தானோ என்னவோ கடைசியில் ஒன்றாகவே படுகொலையும் செய்யப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் அன்று தொழுகைக்கு மசூதிக்குப் போனதும் கை, கால் கழுவிக் கொண்டு தங்கள் இடத்துக்குச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்தனர். அப்போது திடீரென்று மின்சாரம் போய்விட்டது. படுகொலை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த புலிகளின் வேலை அது. ஆனால், அன்று தொழுகைக்கு வந்திருந்த யாருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துக்கொண்டு மண்டியிட்டனர். தலை தாழ்த்தி வணங்கிவிட்டு நிமிர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இறைவன் இருக்கவேண்டிய சுவரில் கையில் துப்பாக்கிகளுடன் சாத்தான்களின் முரட்டு நிழல்கள். என்ன ஏது என்று உணர்ந்து கொள்வதற்குள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர் புலிகள். தொழுகையில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளான அந்த இஸ்லாமியர்கள் அல்லாவின் சன்னிதியில் அவர் முன்னாலேயே மரணத்தைத் தழுவினர். 147 பேர்... அல்லாவைத் தொழுது கொண்டிருந்தது மட்டுமே அவர்கள் செய்த தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள், பள்ளி ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என போருக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனின் மனதில் மையங்கொண்டிருந்த பிரிவினைவாதப் புயலானது இலங்கையை நிர்மூலமாக்கிவிட்டிருக்கிறது.  ரத்தமழையை முடிவற்றுப் பொழியும் வன்முறை மேகங்களை அது தொடர்ந்து அனுப்பிவந்தது. அமைதிக்கான பெருமரங்களை அது வேரோடு வீழ்த்தியது. சகோதரத்துவத்துக்கான கேணிகளை அது மண்ணைப் போட்டு மூடியது. ஸ்நேகத்தின் மின் இணைப்புகளை ஒரேயடியாகத் துண்டித்துவிட்டது. பரஸ்பர நம்பிக்கை எனும் பாலங்களை தரைமட்டமாக்கிவிட்டது. ஒருமைப்பாடு எனும் நெடுஞ்சாலைகளை நிரந்தரமாகத் தூர்த்துவிட்டது. புயல் கரையைக் கடந்துவிட்டது. ஆனால், வெள்ளம் இன்னும் வடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்களின் அராஜகங்கள் குறித்து மட்டுமே பெருமளவில் பேசப்பட்டுவந்துள்ளது. விடுதலைப் புலிகளின் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரியவந்ததில்லை. இன அழித்தொழிப்பு என்பது சிங்கள அரசால் மட்டுமல்ல... புலிகளாலும் செய்யப்பட்டது. புலிகள் அமைப்பு இந்த நாசகாரச் செயல்கள் அனைத்தையும் செய்துவிட்டு, தமக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. மூன்றாவது சக்தி ஒன்று இப்படிச் செய்கிறது. தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விரோதத்தை வளர்க்க முயல்கிறது என்று பொய்யுரைகளைப் பரப்பி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமா... இத்தனை நடந்த பிறகும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் இஸ்லாமியர் தரப்பாக யாரையும் பேச அனுமதிக்கவிடாமல் தடுத்தும் வந்தது. சுனாமி தாக்குதல் நடந்தபோது அதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது இஸ்லாமிய சமூகத்தினர்தான். உலக நாடுகள் கொடுத்த நிவாரணப் பொருட்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்பினோம். சிங்கள அரசு இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று நார்வே தூதுக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால், புலிகள் அமைப்போ, எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்... தமிழர்கள் வேறு... இஸ்லாமியர்கள் வேறு அல்ல என்று சொல்லிவிட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஸ்லாமியர் தரப்பையும் அழைப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த சிங்கள அரசும் எங்களை ஏமாற்றிவிட்டது. ஏமாற்றங்களை நாங்கள் அமைதியாக சகித்துக் கொண்டுவந்திருக்கிறோம். எமது வருங்காலத் தலைமுறையும் அப்படியே சகித்துக் கொண்டு இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம். இனியும் ஓட முடியாது என்றொரு நிலைவருமானால் திரும்பி நின்று தாக்க ஆரம்பிப்பார்கள் எங்கள் இளைய தலைமுறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-6306753243433737687?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/6306753243433737687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/6306753243433737687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/6306753243433737687'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/13.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 13'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-5888046233399465750</id><published>2010-09-05T20:53:00.000-07:00</published><updated>2010-09-05T20:55:04.219-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 12</title><content type='html'>&lt;b&gt;நெவர் அகெய்ன்… நெவர் அகெய்ன்&lt;/b&gt;&lt;br /&gt;ஈழ தேவியைச் சிறையெடுத்த ராவணனா நீ&lt;br /&gt;விபீஷண கருணம்மானுடன் சேர்ந்து உனை வீழ்த்திய ராமனா அவன்&lt;br /&gt;&lt;br /&gt;மீளும் வழி தெரியாமல் சர்வதேச வியூகத்தில் மாட்டிக் கொண்ட  அபிமன்யுவா நீ&lt;br /&gt;ஒரு பிடி மண்கூடத் தரமாட்டேன் எனச் சினந்து கருவறுத்து வென்றும்விட்ட &lt;br /&gt;துரியோதனனா அவன்&lt;br /&gt;&lt;br /&gt;வாக்களிக்கப்பட்ட பூமிக்கு கூட்டிச் செல்ல தவறிய மீட்பரா நீ..?&lt;br /&gt;வன்முறையின் இன்னிசை கேட்டுப் பின்னால் திரண்ட எலிகளை ஆற்றில் முழ்கடித்த நவீன பைப்பரா நீ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கிரமிப்பாளனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட புருஷோத்தமனா நீ&lt;br /&gt;மக்களின்  உயிரைப் பணயம் வைத்து சாகசம் புரிய முயன்ற டான் க்விசாட்டா நீ&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்ட புதிய ஹிட்லரா அவன்&lt;br /&gt;சுதந்திரப் போரை ஆயுதமேந்தி நடத்தித் தோற்ற புதிய சுபாஷ் சந்திர போஸா நீ..?&lt;br /&gt;&lt;br /&gt;நோயுற்ற குழந்தைக்கு கசப்பு மருந்தைத் தேனில் பொடித்துக் கொடுக்க முயன்ற தாதியா நீ&lt;br /&gt;மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்த மருத்துவனா நீ&lt;br /&gt;&lt;br /&gt;உன் மந்தைக் கூட்டத்தை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்ற மேய்ப்பனா நீ&lt;br /&gt;அல்லது வழி தவறிய வெள்ளாடா நீ&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கொண்ட யானையை மத்தகத்தில் அடித்து அடக்கிய பாகனா அவன்&lt;br /&gt;புல்வெளியில் வலைவிரித்து பறவைக் கூட்டத்தைப் பிடித்த வேடனா&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சுகளைக் காப்பாற்ற கழுகை எதிர்த்த கோழியா நீ&lt;br /&gt;மனித உருவில் திரியும் ஓநாயா அவன்&lt;br /&gt;&lt;br /&gt;மென் விலங்கு தின்று பசியாற விதிக்கப்பட்ட சிம்மமா  அவன்&lt;br /&gt;தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட களிறா நீ&lt;br /&gt;&lt;br /&gt;நீ தோற்றுப் போன தெய்வமா..? அல்லது தோற்றுப் போன சாத்தானா..?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வெற்றி பெற்ற சாத்தானா..? அல்லது வெற்றி பெற்ற தெய்வமா..?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது &lt;br /&gt;இரண்டு சாத்தான்களுக்கிடையில்&lt;br /&gt;தெய்வத்தின் குழந்தைகள் சிக்கிக் கொண்டனரோ&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் ரத்தமும் இன்னொன்றில் கண்ணீரும் தேங்கிக் கிடக்க&lt;br /&gt;உலகம் கூடி வேடிக்கை பார்க்க &lt;br /&gt;தலைகளை உருட்டி நீங்கள் ஆடிய  சதுரங்க ஆட்டமா..? &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதற்கு முன்னும் இருந்தவர்கள்தானா..?&lt;br /&gt;இனியும் வரப் போகிறவர்கள்தானா..?&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம் தமிழனாகவும் சிங்களனாகவும் வாழ முயன்றவர்கள்&lt;br /&gt;கண நேரம் கூட மனிதனாக வாழ மறந்துவிட்டனரே…&lt;br /&gt;&lt;br /&gt;எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை&lt;br /&gt;எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை&lt;br /&gt;எது நடக்கப் போகிறதோ அதுவாவது நன்றாக நடக்க என்னதான் வழி..?&lt;br /&gt;&lt;br /&gt;கடல் சூழ் இலங்கையின் கண்ணீர் காவியம்&lt;br /&gt;ஆழி சூழ் உலகுக்கு அறியத் தரும் பாடம்தான் என்ன..?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-5888046233399465750?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/5888046233399465750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5888046233399465750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5888046233399465750'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/09/11.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 12'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-9012598214048468945</id><published>2010-08-30T18:43:00.000-07:00</published><updated>2010-08-30T18:43:21.352-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 11</title><content type='html'>காட்சி : 15&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் (தமிழகத் தலைவரை  உற்றுப் பார்த்து) : உங்களை ஏன் தீ வைத்துக் கொளுத்தக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் (லேசாக அதிர்ந்து பிறகு சுதாரித்துக் கொள்கிறார்) : இலங்கைப் பிரச்னையின் அடிப்படையான காரணமே சகோதரச் சண்டைதான். மலையகத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். ஈழத்திலும் வடக்கு கிழக்கு என்று தனித்தனியாக இருந்தார்கள். இந்த ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளுமே மேலும் பல பிரிவுகள். போதாத குறைக்கு பிரபாகரன், தன் கொடியைத் தவிர ஈழத்தில் வேறு ஒரு கொடியையும் பறக்க அனுமதிக்கவில்லை. எருதாக இருந்தாலும் ஒன்று சேர்ந்தால் சிங்கத்தையே விரட்டிவிட முடியும். இங்கோ புலிகள் தமக்குள்  மோதிக் கொண்டதால் நயவஞ்சக நரிகள் கூட ஏய்த்துவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : தமிழகத்தில் உங்களுக்குள் பிரிவுகள் இல்லையா… சகோதரச் சண்டை இல்லையா என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் : தமிழகத்திலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் பிளவுகள் உண்டு. ஆனால், எதில் பிரிந்து செயல்படலாம். எதில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் அனைவரும் ஒரே குரலில் விடுதலை என்று முழக்கமிட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஈழத்தில் ஆளாளுக்கு பிரிந்து நின்று முழங்கினார்கள். பொதுக்களம் ஒன்றில் அவர்களை ஒன்றிணைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் முறிந்துபோயின. இலங்கையில் கூட்டாட்சிக்கு சிலர் ஒத்துக் கொண்டார்கள். சிலர் தனி நாடு என்றார்கள். சிலர் கூடுதல் அதிகாரம் என்றார்கள். ஒருவர் இன்னொருவரை துரோகி என்றார். கோழை என்றார். எதிரியைவிட்டு விட்டு தமக்குள் சண்டையிட்டனர். என்னதான் ஆனாலும் நாங்கள் மூன்றாவது மனிதர்கள்தானே. ஏதாவது ஒன்றை அழுத்திச் சொல்லவோ, ஒரு திசைக்கு மற்றவர்களை இழுக்கவோ எங்களுக்கு பலமோ அதிகாரமோ கிடையாதே… அதோடு, ஒன்று எங்களுக்கு ஆதரவாகப் பேசு. இல்லையேல் பேசாமல் இருந்துவிடு என்ற மிரட்டல் அல்லவா விடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : இலங்கைப் பிரச்னை தீர அப்படி என்ன பெரிய முயற்சி எடுத்துவிட்டிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத் தலைவர் : என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கிறோம். மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோதே ஐ.நா. சபையில் அதை எதிரொலித்தோம். தமிழகத்துக்கு வந்த அகதிகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொடுத்தோம். கோடிக்கணக்கில் நிவாரணங்கள் கொட்டிக் கொடுத்தோம். கடையடைப்புகள், கறுப்புக் கொடி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புகள் என எங்கள் தார்மிக ஆதரவைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், வந்தாரை வாழ வைத்த தமிழ் மக்களால் சொந்த பந்தங்களின் சோகத்தில் பங்கெடுக்க முடியாமல், அதைத் துடைக்க முடியாமல் போய்விட்டது. எங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. எங்கள் ஆலோசனைகள் காது கேட்காதவனிடம் சொன்ன ரகசியங்களைப் போல்  வீணாகிவிட்டன. எங்கள் உதவிகள் தரிசு நிலத்துக்குப் பாய்ச்சிய தண்ணீராகப் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவுமே நடந்து கொண்டிருக்கிறீர்கள். இலங்கைப் பிரச்னை என்பது உங்களைப் பொறுத்தவரையில் உங்கள் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒன்று மட்டும்தானே. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் : அது உண்மையல்ல. நாங்கள் அரசியல் சதுரங்கத்தில் பல காய்களை உருட்டிவிளையாடுவதுண்டு. ஆனால், இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தந்ததும் அடக்கி வாசித்ததும் அவர்களுடைய நடத்தைகளின் அடிப்படையில் மட்டுமே. உண்மையில் ஆதரவாளர்களாக இருந்த எங்களை எதிர்நிலைக்குக் கொண்டு சென்றதே அவர்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் தனி நாடு கேட்டுப் போராடியவர்கள்தான். இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்பட்டபோது நாங்களும் அதை எதிர்க்கத்தான் செய்தோம். இந்தி இருக்குமானால் இந்தியா இருக்காது என்று முழங்கத்தான் செய்தோம். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று போர்ப்பறை கொட்டத்தான் செய்தோம். ஆனால், கூட்டாட்சிக்குள்ளேயே தனி நாட்டாட்சிக்கு வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் அதை தொலைநோக்குப் பார்வையோடு ஏற்றுக் கொண்டோம். தனி நாடு கோரிக்கையை தவறென்று தெரிந்ததும் விட்டுவிட அரசியல் முதிர்ச்சி வேண்டும். ஆறரை கோடித் தமிழினம் இன்று நூறரைக் கோடி இந்திய தேசியத்தை வழி நடத்தும் நிலைக்கு உயர்ந்திருக்கிறதென்றால் அது எங்கள் பொறுமையினாலும் சாதுரியத்தினாலும்தான். தனியாகப் போவதல்ல. தலைமைப் பதவியை ஏற்பது… அதுவே சாதுரியம். எந்த இந்திய அரசு இந்தியைத் திணிக்க விரும்பியதோ அதே அரசு இன்று தமிழை செம்மொழி என்று உலகறிய உயர்த்திப் பிடித்திருக்கிறது.  ஈழப் புலி, பாய்ந்து சாதிக்காததைத் தமிழ்ப் புலி பதுங்கியே சாதித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழருக்கு  தந்த வெளிப்படையான ஆதரவு காரணமாக தமிழகத்தில் ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. எத்தனையோ பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைக் கண்டெல்லாம் மனம் கலங்கவில்லையே. ஆதரவை ஒருபோதும் பின்வாங்கவில்லையே. தேசம் வேறென்றாலும் இனம் ஒன்றல்லவா..? அழையா விருந்தாளியாக நாங்கள் அவர்கள் வீட்டின் முன் எத்தனை முறை போய் நின்றிருக்கிறோம் தெரியுமா… இன்னொரு நாட்டின் பிரச்னையைத் தீர்க்க எங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கும் மேலாக செய்து வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாமெல்லாரும் நாகரிக மனிதர்கள். கடந்த காலங்களில் மன்னர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் திணிப்பார்கள். ஒரு ராஜா இன்னொரு ராஜாவுடன் சண்டைக்குப் போவார். அதற்குப் பெரிய காரணமெல்லாம் இருக்காது. இந்த ராஜாவுக்கு அந்த ராஜாவைப் பிடிக்காது. அவ்வளவுதான். அதற்காக ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் மடிவார்கள். மக்களுடைய தரப்பு என்று ஒன்று அதில் இருக்கவே இருக்காது. மன்னருக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமே கிடயாது. ஆனால், நாம் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இது மக்களாட்சி காலம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. ஜனநாயகப் பாதையில் போகிற நாம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நமது எதிர்ப்பை முதலில் சாத்விகமான போராட்டங்கள் மூலம் தெரியப்படுத்துவோம். அதில் எந்த பதிலும் கிடைக்கவில்லையென்றால் அதே போராட்டத்தை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவோம். பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். கேட்டது எல்லாமே கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு நம்மை பலப்படுத்திக் கொள்வோம். இறுதிக் குறிக்கோளை மேலும் வலுவோடு வலியுறுத்துவோம். அப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் லட்சியத்தை அடைவோம். மக்களை மையமாகக் கொண்ட அரசியல் போராட்டம் என்பது அப்படித்தான் நடக்க வேண்டும். அப்பாவிகளின் உயிரை பணயம் வைக்கும் அதிகாரம் எவ்வளவு பெரிய கொம்பனுக்கும் எந்தப் புனிதக் கோட்பாடுக்கும் கிடையாது. இதுதான் ஜனநாயக உலகின் அடையாளம். ஆரம்பத்தில் அமைதியாகப் போராடிப் பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஆயுதத்தைக் கையில் தூக்கினோம் என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. சாத்விக ஜனநாயகப் போராட்டம் என்பது இலக்குக்கான வெறும் வழிமுறை மட்டுமல்ல. ஒருவகையில் இலக்கைவிட அதுவே மேலானது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் மக்கள் இயக்கமாக, அரசியல் தளத்தில் செயல்பட்டதே இல்லை. அது ஒரு சிறிய கொரில்லா அமைப்பாக உதித்து அப்படியே அஸ்தமித்தும்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்தோரின் நல்வாக்குகளும் முதிர்ந்த நெல்லிக்காயும் முதலில் கசக்கும். பிறகு இனிக்கும். லேசாகக் கசந்தபோதே துப்பிவிட்ட குழந்தையைப் பார்த்து மவுனமாக அழத்தான் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் சர்வாதிகார மாளிகையின் அராஜக ஜன்னல்களில் மோதி மோதி எங்கள் ஆதரவின் புறாக்கள் துடிதுடித்து விழுந்தன. அதன் கால்களில் கட்டப்பட்ட புரிந்துணர்வுக் கடிதங்கள் பிரிக்கப்படாமலேயே போயின. கள்ளத் தோணிகள் பல போய் வந்தன. ஆனால், நல்ல தோணி ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை. உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கும் இலங்கையில் இருந்தவர்களுக்கும் இடையிலான இணைப்பு நதி உறைந்தேகிடந்தது. இக்கரையில் நட்பின் பதாகையைக் கையில் பிடித்தபடி கால் கடுக்கக் காத்து நின்றோம். அக்கரையில் அந்த அக்கறை இருந்திருக்கவில்லை. சகோதரத்துவத்தின் பரிசல்கள் பயணிக்க, இறுதி வரை உருகவேயில்லை இடையில் இருந்த தவறான புரிதலின் பனிப்பாளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : பங்களாதேஷ், திபெத் அகதிகளுக்கு இருந்த உரிமைகளோ சலுகைகளோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு இருந்திருக்கவில்லையே… தமிழகம் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதானே நடத்தியிருக்கிறது. அடைக்கலம் தேடிவந்த அகதிகளுக்கே இதுதான் கதி. ஆறு மணியாகிவிட்டதென்றால் முகாமுக்குத் திரும்பி விட வேண்டும். அவ்வப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சொத்து வாங்க முடியாது. வாடகைக்குக் கூட வீடுகள் கிடைக்காது. வேலைகள் சுலபத்தில் கிடைக்காது. இவையெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக, எந்தவித ஒட்டுறவும் இல்லாமல் ஒப்புக்குத்தான் செயல்பட்டு வந்திருக்கிறீர்கள் என்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் : இல்லை. அகதிகள் விஷயத்தில் அவர்களை ஆரம்ப காலத்தில் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத்தான் தாங்கினோம். ஆனால், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்ய நினைத்தால்? மலர் செண்டுகள் மட்டுமே கண்டிருந்த விமான நிலையத்தில் வெடி குண்டுகள் வெடித்தன. மழை பெய்து மட்டுமே சேறான எங்கள் சந்தைகள் முதன் முறையாக ரத்தத்தால் நனைந்தன. இவ்வளவு ஏன்… மாலைகளும் பொன்னாடைகளும் மட்டுமே போர்த்தப்பட்ட தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் இருந்தவருக்கு மலர் வளையம் சுமத்தப்பட்டது. அமைதிப் பூங்காவுக்குள் நச்சுப் பாம்புகள் ஊடுருவ ஆரம்பித்தன. வேலியைப் பலப்படுத்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அமைதிப் பேச்சு வார்த்தைக்கான பொறுப்பை இந்திய அரசிடம் விட்டுக் கொடுத்த நீங்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டுமல்லவா..? பிற மாநிலத்தவர்களிடம் பொறுப்பை விட்டது தவறுதானே… அதுவும்போக, இந்திய உளவுத்துறைதான் போராளி இயக்கங்களிடையே சண்டையை மூட்டிவிட்டதாக தகவல்கள் வந்த பிறகும் அவர்களை நம்பி சும்மா இருந்தது உங்கள் தவறுதானே..?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் : இந்திய உளவுத்துறை சில சதிகளில் ஈடுபட்டது என்னவோ உண்மைதான். ஆனால், ஊசி இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் நூல் நுழைந்திருக்க முடியுமா என்ன… அதுவும்போக, இந்திய அரசின் உத்தரவுப்படிதானே நாங்கள் அதில் நடக்க முடியும். தமிழர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றால் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற  எண்ணத்தினால்தான்  பிற மாநிலத்தவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவர்கள் செய்த ஒவ்வொன்றும் எங்களிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டன. தமிழகம் தன்னால் முடிந்ததைச் செய்தது. இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : முடிந்ததைச் செய்வதா முக்கியம். வேண்டியதைச் செய்வதல்லவா அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் :  அது சரிதான். ஆனால், அதற்கு வாய்ப்பு எங்கே தரப்பட்டது..? ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரில் சிலரும்கூட அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக எவ்வளவு நேரம்தான் ஒருவர் மழையில் நனைவது..?&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : நாங்கள் உங்களுக்கு அடுத்தவர்தான் இல்லையா..?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் : என்ன செய்வது தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேறுதானே..? ஒருவர் தனக்கு நேரும் இழப்புகளை முன் வைத்து நியாயம் கேட்க வேண்டுமென்றால், அவர் எந்த தவறும் இழைக்காமல் இருக்க வேண்டும். நான் ஐம்பது தவறுகள்தான் செய்திருக்கிறேன். எதிரி 100 தவறுகள் செய்திருக்கிறாரே. என் பக்கம் அணி வகுத்து நிற்க வேண்டியதுதானே என்ற வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. உனது காலை ஒருவர் வெட்டிவிட்டார் என்று வழக்கு தொடுத்தால் உன் பக்கம் ஜெயிக்க வேண்டுமென்றால் நீ ஒடிந்த காலுடன் நீதி மன்றம் ஏற வேண்டும். பதிலுக்கு நீ போய் அவருடைய கையை வெட்டி விட்டு ஒரு கையில் அருவாளையும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட எதிரியின் கையையும் எடுத்துக் கொண்டுவந்து நீதி கேட்டால்… புலிகள் செய்த ஒவ்வொரு கொலையும் சிங்கள ராணுவத்தினரின் ஒன்பது கொலைகளை நியாயப்படுத்திவிட்டன. போர் என்று வந்துவிட்டால் நான் ஒருவரை கொன்றால் நீயும் ஒருவரைத்தான் கொல்ல வேண்டும் என்று கணக்குப் பேச முடியாது. யானைக்கு தரையில் பலம். முதலைக்கு நீரில் பலம். யானையை வெட்டவெளியில் எதிர்கொண்டார்கள். முதலையைப் பார்த்ததும் முண்டாவை தட்டிக் கொண்டு பாய்ந்து நீரில் குதித்து சண்டை போடப் போனார்கள். சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று தாக்குவது வீரமும் அல்ல; விவேகமும் அல்ல. பலம் குறைந்தவர்கள், பலம் மிகுந்தவர்களை எதிர்க்க மிகவும் சரியான வழி அமைதியான வழியிலான போராட்டம்தான். கொரில்லா தாக்குதல் போராளிகளுக்கு வெற்றியைத் தரலாம். ஆனால், மக்களுக்கு அது அழிவையே தரும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாமில் வசதிகள் குறைவாக இருப்பது பற்றிச் சொன்னீர்கள். அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதை கனத்த மனதுடன்தான் செய்தோம். புருஷனிடம் கோவித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு வந்துவிடும் மகளிடம் உண்மையான பாசத்தை வெளிக்காட்டினால் எங்கே மகள் பிறந்தவீட்டிலேயே இருந்துவிடுவாளோ என்ற பயத்தில் கொஞ்சம் பாராமுகமாக நடந்து கொள்ளும் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நிலையில்தான் இருந்தோம். இனி ஈழம் சாத்தியமில்லை என்பது தெரிந்த மறுகணமே இங்கு தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வாங்கித் தருவதாக அறிவித்திருக்கிறோம். 100 கோடி நிவாரணம் ஒதுக்கியிருக்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நேசத்துக்குரியவன் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு செய்த மோசத்தால் எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிரபராதி, தவறான வக்கீலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தண்டனை பெற வேண்டிவந்துவிட்டது. பார்வையாளர் நாற்காலிகளில் முன் வரிசையில் அமர்ந்தபடி மவுன சாட்சியாக நாங்கள் பார்த்த வழக்கு விசாரணை, நாங்கள் பார்க்க விரும்பிய ஒன்றல்ல. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிய எங்கள் கைகளில் படிந்த ரத்தம் எம் கண்களில் இருந்து கசிந்ததுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஓநாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒதுங்கிய மந்தை ஆடுகளை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்றான் ஒரு மேய்ப்பன். ஆடுகள் குறித்து நாங்கள் அழுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. யாமோ கள்வர்..? சொல்லுங்கள்... யாமோ கள்வர்..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-9012598214048468945?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/9012598214048468945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/9012598214048468945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/9012598214048468945'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/11.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 11'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-4414083709431642592</id><published>2010-08-27T22:20:00.000-07:00</published><updated>2010-08-27T22:21:06.913-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 10</title><content type='html'>இறந்தவர்களைப் புதைத்தல்&lt;br /&gt;நன்கு பரிச்சயமாகித்தான் இருந்தது எங்கள் காலகட்டத்தில்&lt;br /&gt;(அது எதைக் குறிப்பதாக இருந்தாலும்&lt;br /&gt;எங்கள் மன நல நிபுணர்கள் &lt;br /&gt;மனதின் சமநிலையைத் தக்க வைக்க உதவி புரிந்திருக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ அரிதாக நடக்கும் சம்பவம் போல் &lt;br /&gt;இது ஒன்றும் அவ்வளவு தெளிவாக &lt;br /&gt;மனதில் பதிந்து கிடக்க எந்தக் காரணமும் இல்லைதான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்&lt;br /&gt;நான் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல.&lt;br /&gt;ஒருபோதும் மனம் தளர்ந்துபோனது கிடையாது&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிகளை வெளியில் காட்ட மிகவும் கூச்சப்படுவேன் &lt;br /&gt;உங்களைப் போலவே,&lt;br /&gt;அன்றாடக் கடமைகளை அழகாகப் பார்த்துக் கொண்டு செல்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் விசுவாசமானவன். &lt;br /&gt;’மறந்துவிடு’ என்று அரசு சொல்லும்போது&lt;br /&gt;அப்படியே செய்துவிடுவேன்.&lt;br /&gt;மறந்துவிடும் என் திறமை என்றுமே &lt;br /&gt;சந்தேகிக்கப்பட்டது கிடையாது&lt;br /&gt;அது பற்றி நான் எந்தப் புகார் தெரிவித்ததும் கிடையாது&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும்&lt;br /&gt;அந்தக் கும்பல் அந்த காரைத் தடுத்தி நிறுத்தியவிதம்&lt;br /&gt;என் நினைவில் இப்போதும் இருக்கிறது.&lt;br /&gt;காரில் நான்கு பேர் இருந்தனர்.&lt;br /&gt;ஒரு பையன், ஒரு சிறுமி, &lt;br /&gt;ஒரு ஆண், ஒரு பெண்&lt;br /&gt;குழந்தைகளின் பெற்றோர் என்று நினைக்கிறேன்&lt;br /&gt;(நான்கோ ஐந்தோ பேர்தான் இருந்ததுபோல் தெரிந்தது)&lt;br /&gt;பிற கார்களைத் தடுத்து நிறுத்தியது போலத்தான்&lt;br /&gt;இந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள்.&lt;br /&gt;எந்த வித்தியாசமும் அதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன.&lt;br /&gt;தவறுதலாக எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா..?&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, காரியத்தில் இறங்கினார்கள்.&lt;br /&gt;வழமை போலவே எல்லாமும்&lt;br /&gt;கதவை மூடுதல்&lt;br /&gt;பெட்ரோல் ஊற்றுதல், &lt;br /&gt;சுற்றி நின்று கொள்ளுதல்&lt;br /&gt;எல்லாமே வழமை போல்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது யாரோ &lt;br /&gt;எதுவோ வித்தியாசமாக உணர்ந்தார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;இடதுபக்க இரண்டு கதவுகளையும் திறந்தார்கள்.&lt;br /&gt;இரண்டு குழந்தைகளையும் &lt;br /&gt;பெற்றோரிடமிருந்து வெளியே இழுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் கதறி அழுதன&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் நன்மைக்காக &lt;br /&gt;அவர்களுடைய விருப்பத்தை மீறி &lt;br /&gt;சில செயல்களைச் &lt;br /&gt;சில நேரங்களில் செய்யத்தானே வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;அவர்கள் அப்படி நினைத்திருக்கக்கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;காரியத்தில் கண்ணான இன்னொருவன் &lt;br /&gt;சட்டென்று நெருப்பை&lt;br /&gt;திறமையாகப் பற்ற வைத்தான்.&lt;br /&gt;குப்பென்று தீ பரவியது&lt;br /&gt;சுற்றிலும் எரிந்து கொண்டிருந்தவற்றின் எண்ணிக்கையில் &lt;br /&gt;மேலும் இன்னொன்றாகச் சேர்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு எரிய ஆரம்பித்ததும் கூட்டம் &lt;br /&gt;புதிய சாசகத்தைத் தேடி நகர ஆரம்பித்தது&lt;br /&gt;சிலர் கலைந்து சென்றனர்.&lt;br /&gt;உள்ளிருந்த இருவர் &lt;br /&gt;என்ன நினைத்திருப்பார்கள் &lt;br /&gt;என்ன உணர்ந்திருப்பார்கள்&lt;br /&gt;யாருக்கும் கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியை விரும்பும் மக்கள் &lt;br /&gt;தங்கள் வீடுகளை நோக்கி&lt;br /&gt;நடக்க ஆரம்பித்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது&lt;br /&gt;திடீரென்று&lt;br /&gt;காருக்குள் இருந்த மனிதர் &lt;br /&gt;கார் கதவை உடைத்துத் திறந்தார்.&lt;br /&gt;அவருடைய சட்டையும் தலைமுடியும் &lt;br /&gt;ஏற்கெனவே தீயில் கருக ஆரம்பித்திருந்தன&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ந்து குனிந்து தன்னிரு குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டார்&lt;br /&gt;திட்டமிட்ட செயல் ஒன்றை முடிப்பதுபோல்&lt;br /&gt;எந்தப் பக்கமும் திரும்பாமல்&lt;br /&gt;காருக்குள் குழந்தைகளுடன் புகுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே&lt;br /&gt;கார் கதவை &lt;br /&gt;அழுத்தமாகத் தாழிட்டுக் கொண்டார்.&lt;br /&gt;அந்தச் சத்தத்தை &lt;br /&gt;வெகு துல்லியமாக &lt;br /&gt;நான் கேட்டேன். &lt;br /&gt;                                  - பஸில் ஃபெர்னாண்டோ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-4414083709431642592?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/4414083709431642592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/4414083709431642592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/4414083709431642592'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/10.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 10'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-5239558395302078382</id><published>2010-08-26T18:22:00.001-07:00</published><updated>2010-08-26T18:22:46.353-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 9</title><content type='html'>அடிப்படையில் இந்த பிரச்னை இந்த அளவுக்கு மோசமாக யார் காரணம் தெரியுமா..? விடுதலைப் புலிகள்தான். ஜெயவர்தனேயுடன் ராஜீவ் காந்தி 1987-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க எல்லா வழிகளும் செய்யப்பட்டிருந்தன. சுய ஆட்சிக்கான அருமையான வாய்ப்பு தரப்பட்டது. இவ்வளவுதான் செய்ய முடியும். அது தான் நியாயமும் கூட. பிரிவினை வாதம் என்பதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. காஷ்மீரில் தனிநாடு வேண்டும் என்று கேட்டுத்தான் போராடிவருகிறார்கள். இந்திய ராணுவம் அதை எதிர்த்துத்தான் போராடுகிறது. அப்படி இருக்க இலங்கையிடம் போய் தமிழர்களுக்கு தனி நாடு கொடு என்று எப்படிச் சொல்ல முடியும்..? நாளை அவர்கள் அப்படியானால் காஷ்மீர் மக்களுக்கு தனி நாடு கொடுக்க வேண்டியதுதானே என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்பார்களே..? ஊருக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா என்று காறி உமிழ்வர்களே... இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்..? &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு அந்த ஒப்பந்தத்தில் முதலில் நிலைமை மோசமானால் இந்தியா தன்னுடைய படையை அனுப்பும் என்ற நிபந்தனை சேர்க்கப்படவே இல்லை. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த அன்று காலையில் ஜெயவர்த்தனேயை எதிர்த்து அங்கிருந்த தீவிரவாத சிங்களர்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டை பிரித்துக் கொடுக்க வழி செய்வதாக அவர்கள் கோபப்பட்டனர். அதனால் அவர் வீட்டைக்கூடக் கொளுத்தினார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த தன் படைகளை சிங்களர்கள் கலகம் செய்யும் இடத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதுதான் இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்பட சிறிது காலத்துக்கு இந்தியப் படையினரை அனுப்பி உதவுங்கள் என்று ஜெயவர்த்தனே கேட்டுக் கொண்டார். ராஜீவ் காந்தி கூட  நீங்கள் யோசித்துத்தான் சொல்கிறீர்களா என்று ஒருதடவைக்கு இரண்டு தடவை கேட்டிருக்கிறார். இந்தியாவுக்கு இன்னொரு தேசத்துக்கு ராணுவத்தை அனுப்புவதில் எந்த விருப்பமும் இருந்திருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கோணத்தில் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஈழத்தில் தனி நாடு அமைந்தால் அடுத்ததாக அவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களுடன் ஒன்று கூடி இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டைப் பிரித்துக் கொண்டு போகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..? ஏற்கெனவே தனி திராவிட நாடு என்று முழங்கியவர்கள்தான் அவர்கள்... எனவே, இந்தியா தனது இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்ய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால் நிச்சயம் பிரச்னை எப்போதோ தீர்ந்துவிட்டிருக்கும். கூட்டாட்சி அமைப்பு ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் ராஜீவ் காந்தி அப்படி ஒரு உடன்படிக்கையை ஜெயவர்த்தனேவுடன் செய்துகொண்டார். அதன் அடிப்படையில்தான் இந்திய அமைதிப்படையை அனுப்பிவைத்தார். ஆனால், இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதன் பிறகு தவறான பாதையில் போக ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகள். ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்றரை மாதத்துக்குள் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அமைதி திரும்பிவிடக்கூடாது என்பதில் அத்தனை அக்கறை. &lt;br /&gt;&lt;br /&gt;சக போராட்டக் குழுக்களின் தலைவர்களைக் கொன்று குவித்தனர். சிங்களர்களுக்கு உதவுவதாகச் சொல்லி தமிழ் முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். எண்பதாயிரம் இஸ்லாமியர்களை 2 மணி நேரக் கெடு விதித்து வீடு வாசல், நில புலன் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடும்படித் துரத்தினர். தமிழர்களிலேயும் கூட்டாட்சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரையும் அநியாயமாகக் கொன்று குவித்தனர். புலிகளை விமர்சித்தவர்களைக் கொன்றனர். புலிகளை ராணுவம் சுற்றி வளைத்த போதெல்லாம் மக்கள் கூட்டத்தையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி தங்களோடு இடம் பெயர வைத்தனர். தனது பிழையான அரசியலின் மூலம் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கும் சிங்களர்களுக்கும் இப்படியான ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு இந்திய அரசின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழ் அரசியல் தலைவர்களைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடைசிகட்டப் போரில் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது இவ்வளவு கூக்குரல் இட்ட நீங்கள் அதற்கு முன்னால் என்ன செய்தீர்கள்... ஈழத் தமிழர்கள் என்பவர்கள் உங்களுடைய தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறீர்களே... அவர்களுடைய பிரச்னை தீர நீங்கள் என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்... உண்ணாவிரதம் நடத்துவது, தந்தி கொடுப்பது, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது, பத்திரிகைகளில் அடுத்தவர் மீது பழியைப் போடுவது என்பதைத் தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறீர்கள்..? &lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளாக தமிழகத்துக்கு எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்? கூப்பிடு தூரத்தில் இருக்கும் உங்களிடம் வராமல் அனைவரும் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் என்று மேலைநாடுகளுக்குத்தானே போயிருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்..? ஈழத் தமிழர்களே நீங்கள் அகதிகள் அல்ல... எங்கள் விருந்தாளிகள் என்று வரவேற்று தமிழகத்தில் தங்க இடமும் உழைத்துப் பிழைக்க கவுரவமான வேலையும் உரிமையும் தந்திருக்க வேண்டும். வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் கூட நாலைந்து ஆண்டுகளில் அந்த சமூகங்களில் சுமுகமாகக் கலந்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், இங்கு பதினைந்து வருடங்களாக தமிழக முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளாகத்தானே இருந்துவருகிறார்கள். இப்போது காலங்கடந்த ஞானோதயமாக நூறு கோடி தருகிறேன் என்றூ ஒரு கண் துடைப்பு அறிக்கை வேறு. 1983லிருந்தே அகதிகள் தமிழகத்தில் இருந்து வருகிறார்கள். திபெத்திய, பங்களாதேஷிய அகதிகளுக்கு இருந்த உரிமைகள் கூட இலங்கைத் தமிழர்களுக்குத் தரப்பட்டிருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வருடத்துக்கு முன்னால் வரை தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாம்களின் நிலை என்ன என்பது ஊருக்கே தெரியுமே..? தமிழ் தலைவர்களில் யாராவது ஒருவர் அங்கு போய் அவர்களுடைய குறை என்ன என்பதைக் கேட்டிருப்பீர்களா..? இந்தியா கைவிட்டுவிட்டது... என்று இப்போது கூக்குரல் இடுகிறீர்களே... நீங்கள் என்ன செய்தீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் வோட்டுப் பொறுக்கி அரசியலுக்கு உதவும்வகையில் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் இலங்கைக்குப் போகவேண்டும்... இந்திய பிரதமர் இலங்கைக்குப் போகவேண்டும் என்று வாய் கிழியக் கத்தினார்கள்...  தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வந்து பேச வேண்டும் என்று இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதும் அடுத்த நிமிடமே வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார்கள்... ஏன்..? உங்கள் வீரமெல்லாம் வீட்டுக்குள் இருந்து வசனம் பேசுவதில்தான் அடங்கி இருக்கிறது இல்லையா..? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போனால் விடுதலைப் புலிகள் உங்களையும் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம் இல்லையா..?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் கொலையை மட்டுமே வைத்து இலங்கைப் பிரச்னையை அணுகக்கூடாது என்று சொல்கிறார்கள். அது எப்படி சரியாக இருக்க முடியும். ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதி திரும்ப ஆத்மார்த்தமாக முயற்சிகள் எடுத்தவர். அவரைக் கொன்றதன் மூலம் இலங்கையில் அமைதி திரும்பக்கூடாது என்று ரத்தால் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். இலங்கை சரித்திரத்தில் அந்த அத்தியாயத்தை மூடிவிட்டு படி என்று சொன்னால் என்ன அர்த்தம். நாளை சிங்கள அரசின் வன்முறைகளை மறந்துவிட்டு இலங்கை பிரச்னையைப் பாருங்கள் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அது போன்றதுதான் இதுவும். &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக  அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தார்களே… அவர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள்துறை அமைச்சர் :  என்ன செய்ய... புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று அல்லவா அங்கு நிலைமையை ஆக்கியிருந்தார்கள். ஒரு தவறான தலைவனுடைய முட்டாள்தனமான செயல்பாடுகளினால் ஒரு இனம் அழிய நேர்வதைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்தான் இந்தியா இருந்தது, மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் இருந்தது போல். குருக்ஷேத்திர யுத்தத்தில் கவுரவர்கள் அதிகமாக இருந்தார்கள். பாண்டவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். இருந்தும் பாண்டவர்களால் வெல்ல முடிந்தது. ஏனென்றால், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. தர்மம் இருந்தது. ஆனால், இன்றைய இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். சிங்களர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்ய..? இன்று தர்மம் பெரும்பான்மையின் பக்கமல்லவா இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் தவறான பாதையில் வெகு துரம் வரை போனார். இனி மீள்தல் சாத்தியமில்லை என்னும் அளவுக்குப் போனார். அவரைத் தலைவராக ஏற்றவர்களுக்கும் அதுதான் கதி... என்ன செய்வது மூளை போடும் தவறான திட்டங்களுக்கு அடியும் உதையும் வாங்குவது காலும் கையும் தானே..? &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : தமிழகத்தில் இருந்து யாராவது ஏதாவது செய்ய விரும்பினால் உடனே தேச விரோதச் செயல் என்று அவர்களை அச்சுறுத்தி அடக்கித்தானே வந்திருக்கிறது இந்தியா..?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : அப்படியில்லை. தமிழகத்தில் இருந்த தலைவர்கள் இந்தப் பிரச்னையில் உண்மையான அக்கறையை ஒருபோதும் காட்டியதில்லை. தம்பிக்கு ஒரு துன்பமென்றால் அண்ணனல்லவா விழுந்தடித்து ஓடிச் சென்று காப்பாற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தவர் மேல் பழி போட்டால் என்ன நியாயம்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெறும் இருபத்து நாலு கிலோமீட்டர் இடைவெளிதான் தமிழகத்துக்கும் இலங்கைக்கும். கடல் அமைதியாக இருந்தால் வெறும் ஐந்தே மணி நேரப் பயணம்தான். பிரிவினைவாதத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அடிப்படைத் தேவையான டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆடைகள் என ஆரம்பித்து ஆயுதங்கள்வரை கடத்திக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். கள்ளப் பணம் கை மாறி இருக்கிறது. மருத்துவர்கள், மீனவர்கள், அரசியல்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்கள் என மிகவும் வலுவான வலைப்பின்னல் உதவி புரிந்திருக்கிறது. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு கோடித் தமிழர்கள் அருகில் இருந்தும் கடலின் அக்கரையில் இருந்த ஈழத் தமிழர்கள் அநாதைகளாக மடிய நேர்ந்ததேன்?  தமிழகத்தில் இருந்த தலைவர்களில் சிலர் ஈழப் போராளிகளைத் தவறாக வழி நடத்தினார்கள். மற்ற தலைவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று வேடிக்கை காட்டினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தவறான வழியில் போன தம்பியைத் தண்டித்து திருத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. ஆண்ட பரம்பரை இன்னொருமுறை ஆள நினைப்பது தவறா..? என்றொரு அபத்தமான கோஷம்… ஆங்கிலேயன் நம்மை ஆண்டவன்தான். இன்னொரு தடவை ஆள விடலாமா..? அதுமட்டுமல்லாமல், நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல…யாராக இருக்கிறாய்… யாராக இருக்க வேண்டும்… என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வாய்ச்சவடாலில் தேர்ந்த தமிழ் தலைவர்கள் ஈழப் போரளிகளை பகடைக்காயாக வைத்து கொடிய சூதாட்டத்தை ஆடியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்… இந்தியாவில் தனிநாடு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அந்த கோஷங்களை அழகாக ஆழக் குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், இலங்கையில் அதைத் தூண்டிவிட்டு வந்துள்ளனர். இலங்கையில் போர் தொடர்ந்து நடந்தால் தமிழகம் ஸ்தம்பிக்கும்… ரத்த ஆறு ஓடும்… ஆயுதத்தை ஏந்தி போர் களத்துக்குள் பாய்வேன் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசியவர்களின் தலையில் இருந்து ஒரு ரோமம் கூட உதிரவில்லை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். எனவே, இந்தப் பிரச்னையில் முக்கியமான முதல் காரணம் புலிகள். இரண்டாவது காரணம் தமிழகத் தலைவர்கள்தான். இந்தியா வெறும் ஒரு நடுவர்தான். அதிலும் பாதிக்கு மேல் விலகிக் கொண்ட, விலக நிர்பந்திக்கப்பட்ட அப்பாவி நடுவர். நீங்கள் வேண்டுமானால், என்னை உயிருடனே தீ வைத்துக் கொல்லலாம். ஆனால், உண்மையை அப்படிக் கொல்ல முடியாது. &lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-5239558395302078382?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/5239558395302078382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/9.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5239558395302078382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/5239558395302078382'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/9.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 9'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-60844505559780177</id><published>2010-08-24T17:40:00.000-07:00</published><updated>2010-08-24T17:40:45.018-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 8</title><content type='html'>இந்திய உள் துறை அமைச்சர் : என்ன செய்வது… ஆற்றில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்துவிட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்திருந்தால், சரி… நல்லது, தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வந்துகொள்ளுங்கள் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கும். அது எப்படி சாத்தியம்? அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை எளிதில் துவம்சம் செய்துவிட்டிருக்கும். அதனால் இந்த முறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவே இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பி களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியாவும் சூடுபட்ட பூனையாகத் தன் வாலை ஒடுக்கிக் கொண்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : கடைசி கட்ட போரில் இவ்வளவு வன்முறை தலை விரித்து ஆடியபோது நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தது பெரிய தப்பு இல்லையா..?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : கடைசி நேரப் போர் எதனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? ஊடகங்கள் எப்படி இதை ஊதிப் பெரிதாக்கின என்பதையெல்லாம் எத்தனை நாள்தான் மறைத்துவைக்க முடியும்? பிரபாகரன் என்ற ஒரு தீவிரவாதியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்ததும் அவர்களுடைய சர்வதேச ஊடகச் செல்வாக்கை வைத்து, உலகமே இடிந்து விழுவதுபோல் மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. சிங்கள ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக தமிழகப் பத்திரிகைகளில், இணைய தளங்களில் பெரும் பீதி கிளப்பப்பட்டது. இப்படிச் செய்தால் சர்வதேச சமூகம் தலையிட்டு சிங்கள ராணுவத்தைப் பின்வாங்க வைக்கும்; பிரபாகரன் தப்பிவிடலாம் என்று ஒரு தப்புக் கணக்குப் போடப்பட்டது. ஆனால், அது பொய் என்பது தெரிந்ததால் சர்வதேச சமூகம் மவுனம் சாதித்தது. இந்தியாவும் மவுனம் சாதித்தது. ஏன், தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் உண்மை என்ன என்பது தெரிந்ததால் நாடாளுமன்றத் தேர்தல் தீவிரம் பெற்ற நிலையிலும் அமைதியாக இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவம் போர் விலக்கு பெற்ற பகுதிகளில் குண்டு மழை பொழிந்ததாக பொய்யான பரப்புரைகள் ஈழ ஆதரவு ஊடகங்களால் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது... பஞ்ச பாண்டவர்கள் போன்ற ஐந்து மருத்துவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் அல்லவா..? அப்பாவி மக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கும் கயமைதான் நடந்தது. சர்வதேச சமூகம் கருணையுடன் அனுப்பிய நிவாரணப் பொருட்களைக்கூடப் புலிகள் தட்டிப் பறித்து பதுக்கி வைத்திருக்கிறார்கள். இலங்கை அரசு உரிய நிவாரணப் பொருளை தரவில்லை என்று பழி வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : போராளிகளைக் கொன்றதில் வேண்டுமானால் நியாயம் இருக்கலாம். ஆனால், அப்பாவிகள் மேல் குண்டு வீசி அவர்கள் சிகிச்சைக்கு வந்த மருத்துவமனையிலும் குண்டு வீசிக் கொன்றதெல்லாம் மிகவும் கொடூரம் அல்லவா..?&lt;br /&gt;&lt;br /&gt;இ.உ.அ : போராட்டக் குழுக்களின் தந்திரமே அதுதான். நேருக்கு நேர் நின்று சண்டை போடமாட்டார்கள். வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை என்று ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்துவார்கள். அவர்களைக் கொல்ல வேண்டுமானால் அவர்கள் இருக்கும் இடத்தில்தான் குண்டு வீசியாக வேண்டும். விமானங்கள் தங்களை நோக்கி ஏவுகணை எறியப்படும் இடங்களைக் குறிவைத்துத் தாக்கும். அதற்கு கோவிலும் தெரியாது, மருத்துவமனையும் தெரியாது. மருத்துவமனையில் ஆயுதங்களைக் குவிக்காதீர்கள் என்று சொல்லி எத்தனை செஞ்சிலுவை சங்க மருத்துவர்கள் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன்… இத்தனை நாள் பயந்து கிடந்த மக்கள், விடுதலைப் புலிகளால் தங்களை இனியும் அடக்கி வைக்க முடியாது என்பது தெரிந்ததும் என்ன செய்தார்கள்..? கிணற்றுக்குள் விழுந்து கிடப்பவர் வீசப்படும் கயிறைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறுவதுபோல் சிங்கள ராணுவத்திடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள். பாதூகாப்புக் கோட்டைச் சுவரின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உதிர ஆரம்பித்ததும் எந்தவொரு போராளி இயக்கமும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் தன் மக்களைத் தானே கொல்லும் அநியாயம் அரங்கேறியது. நினைத்துப் பாருங்கள் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் பதுங்கியிருந்து தாக்கிய போராளிகள் அதற்கு பதிலாக மக்களைக் கேடயமாகப் பிடித்தார்கள். அதுவும் எந்த மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்களையே கேடயமாக்கிய கொடூரம். &lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் பிடியை இறுக்க ஆரம்பித்ததும் பயந்து பின் வாங்கிய புலிகள் போகும் இடத்துக்கெல்லாம் மக்களையும் வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்டு சென்றிருக்கிறார்கள். இல்லை, நாங்கள் உங்களுடன் வரவில்லை. குழிகளில் பதுங்கிக் கொள்கிறோம் என்று அப்பாவி மக்கள் சொன்னபோது அப்படியா… எங்களை விட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடையப் போகிறீர்களா..? என்று இழித்துப் பேசிவிட்டு பதுங்குகுழியைச் சுற்றி கண்ணி வெடிகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தமிழ் பெண்களே… உங்கள் கற்பை சிங்களவனுக்குக் காணிக்கையாக்கப் போகிறீர்களா..? என்று உணர்ச்சிபூர்வமாக பிளாக் மெயில் செய்து வலுக்கட்டாயமாக தங்களோடு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு ஏன்… தப்பிக்க முயன்ற பலரை நேருக்கு நேராக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதிகார சதுரங்கத்தில் ராஜாவுக்காக சிப்பாய்கள் பலியிடப்படுவது ஒன்றும் வியப்பில்லைதான். விடுதலைப் போராட்டம் ஒன்றில் இப்படியான நிகழ்வு இதுவரை சரித்திரத்தில் இடம்பெற்றதேயில்லை. ஆனால், மக்களைக் கேடயமாகப் பிடிப்பது என்பது விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்கள் போரை ஆரம்பித்த அன்றிலிருந்தே அதைத்தான் செய்து வருகிறார்கள். கடைசி காலத்தில் அது கொஞ்சம் துலக்கமாகத் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு - கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆளை விட்டால் போதும் என்று அயல் நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். வடக்கு - கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் கூட தாமாக விரும்பி அங்கு இருக்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தாலும் பயத்தினாலும்தான் அங்கு இருந்து வந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா மீது அவதூறு அம்புகள் அடுக்கடுக்காக எய்யப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிப்பதால் தலையிட முடியவில்லை என்று சொன்ன நீங்கள் பங்களாதேஷ் விஷயத்தில் என்ன செய்தீர்கள்...? உங்களால்தானே அது தனி நாடானது. அப்படி நீங்கள் ஈழத்தைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்தானே இந்தப் போரே ஆரம்பிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : ரொம்பத் தப்பான கேள்வி இது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் நில ரீதியிலான தொடர்ச்சி என்று எதுவுமே கிடையாது. ஒரு தேசம் என்று சொல்ல வேண்டுமானால் அதன் முக்கியமான அம்சம் நில ரீதியிலான தொடர்ச்சிதான். இரண்டுக்கும் இடையில் இன்னொரு நாடு வரவே கூடாது. அப்படி வந்தால் அது காலனி ஆட்சி போன்ற ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் ஜின்னா ஒரு தேசத்துக்கு மதம் அடைப்படையாக இருந்தால் போதும் என்று சொன்னார். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்கள் மொழிக்கும் தங்கள் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மதம் இரண்டாம் பட்சம் என்றனர். எனவே, தனியாகப் பிரியவேண்டும் என்று போராடினர். இந்தியா அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைக் கவனத்தில் கொண்டு செயலாற்றியது. ஈழத்தின் கதை அப்படிபட்டதல்லவே. எதை எதனோடு ஒப்பிடுவது என்றொரு விவஸ்தை வேண்டாமா..?  தேசம் என்பது கடலை மிட்டாய் அல்ல… கேட்பவர்களுக்கெல்லாம் காக்காய் கடி கடித்துக் கொடுப்பதற்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : கூட்டாட்சி முறையில் சுய நிர்ணய உரிமை கேட்டு அமைதியான முறையில் போராடியும் அது கிடைக்காததால்தானே தனி நாடு கேட்க வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : என்னவொரு விநோதமான பதில் இது. 50 ரூபாய் கேட்டு அமைதியாகப் போராடினேன். அது கிடைக்கவில்லை. எனவே 500 ரூபாய் கேட்டு அதிரடியாகப் போராடினேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது. 50 ரூபாய் கொடுக்கவே யோசித்துக் கொண்டிருந்தவரிடம் 500 ரூபாயை அதட்டிக் கேட்டால் எப்படிக் கொடுப்பார்..? இலங்கை அதிபர் ஒரு விஷயத்தை அழகாகச் சொன்னார்… இது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பிரச்னையே இல்லை. தேசத்தை நேசிப்பவர்கள், சீர் குலைக்க நினைப்பவர்களுக்கு இடையிலான பிரச்னை. &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லாமல் இலங்கைல மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஆத்மார்த்தமான ஆர்வம் காட்டிய ராஜீவ்ஜிக்குக் கிடைத்த பரிசு என்ன என்பது உங்கள் எல்லாருக்குமே நன்கு தெரியும். 1987-ல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்தது. அந்த மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் மண்ணெணெயும், ஆடைகளும் ஏற்றிக் கொண்டு 19 இந்திய கப்பல்கள் இலங்கைக்குப் போனது. அதை இலங்கை அரசு  தன் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. உடனே, அங்கு தவித்த மக்களுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் போர் விமானங்களின் துணையோடு உணவுப் பொட்டலங்களை சுமந்து சென்று பூமாலை ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. வெறும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்ட செயல் அது. அதோடு போராளிகளுக்கு ஆதரவாக அண்டை நாட்டைப் பகைத்துக்கொண்டு செய்த பெரிய காரியம். அதற்கு என்ன கைமாறு கிடைத்தது..?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று இரு தரப்புக்கும் இசைவான ஒரு நியாயமான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொடுத்தது. இந்தியாவில் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள்; மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பதுபோல் இலங்கையில் ஒரு ஏற்பாடு செய்ய ஆத்மார்த்தமாக ராஜீவ் முயற்சிகள் எடுத்தார்.  தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்படும். இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட வேண்டும் என்று நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார். நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு ஊசி கூட இல்லை… தேனில் குழைத்து லேசான கசப்பு மருந்தைக் கொடுத்தார். ஆனால், கோபம் கொண்ட குழந்தை, மருத்துவரையே கொன்ற கொடூரம்தான் நடந்தது.  உலகில் எங்காவது இதைக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள். எதிரியைவிட்டுவிட்டு மத்யஸ்தம் செய்ய வந்தவரைக் கொன்ற சோகம் எங்காவது நடந்ததுண்டா..? &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் என்றே அதைச் சொல்லலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல... அடுத்த பிரதமராக ஆகவிருந்த ராஜீவ் காந்தியை மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்தார்கள். இருந்தும் தியாகத்தின் திருவுருவான அன்னை சோனியா காந்தி தன் கணவனைக் கொன்ற பாவிகளை மன்னித்துதான் வந்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவியாக, ஒரு தேசத்தின் அரசியல் தலைவியாக அவர் கருணையே உருவாகத் திகழ்கிறார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில்  உலகில் இருக்கும் எந்த பிரிவைச் சேர்ந்த ஒருவரைவிடவும் அதிக அக்கறை கொண்டவர்தான் அன்னை சோனியா... இலங்கை பிரச்னை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஏதோ அண்டை நாட்டுக் கலவரம் அல்ல... அவரை நேரடியாக மிக மோசமாக பாதித்த நிகழ்வும் கூட. ஆனால், அவராலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த விஷயத்தில் தலையிட முடியும். அதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-60844505559780177?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/60844505559780177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/8.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/60844505559780177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/60844505559780177'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/8.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 8'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-8488202072032528447</id><published>2010-08-23T19:11:00.000-07:00</published><updated>2010-08-23T19:11:32.297-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி - 7</title><content type='html'>காட்சி - 13&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிருமாண்ட மாளிகை சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. சில கொடிகள் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் உலக நாடுகளின் மினியேச்சர் வடிவம் தத்ரூபமாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு பகுதியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யுட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர். பிற பகுதியில் இருக்கும் மக்கள் மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர். கால் பந்து போட்டிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதைமணலில் வீசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி : 14&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு… கத்தியின்றி ரத்தமின்றி நவீன போர் முறையை உலகுக்குக் காட்டிய உத்தமர் காந்தி பிறந்த நாடு… பக்கத்து நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலும் நாடு… உங்களை ஏன் உயிருடன் கொளுத்தக்க்கூடாது? &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம்னு ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு கொஞ்சகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மாதிரித்தான் இது. ஒரு மனுஷனோட தலை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்குது. கால் வேறொரு பக்கம் பார்த்துகிட்டு இருக்குது. தலை சொல்ற திசையில நடந்தா கால்ல அடிபடும். கால் போற திசையில போனா தலைல அடிபடும். இந்த விசித்திர மனுஷனோட பிரச்னைக்கு கோக்குமாக்கா இருக்கற அவனோட உடம்புதான் காரணமே ஒழிய பக்கத்துல நடந்து வர்றவன் எப்படி காரணமா இருக்க முடியும்?  &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை, இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை ஆரம்பத்துல இருந்தே சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தீங்களா… அதுக்குக் காரணம் என்ன… அஹிம்சை... பொறுமை…ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை அழிக்கறவனுக்கு ஒரு நாள் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர்  ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே.  சிங்கள அரசு இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு உங்களோட ஆதரவுதான முக்கிய காரணமா இருந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : ஒரு இறையாண்மை மிகுந்த நாடு, இன்னொரு இறையாண்மை மிகுந்த நாட்டின் விஷயத்தில் எவ்வளவு தலையிட முடியுமோ அவ்வளவு தலையிட்டிருக்கிறோம். இலங்கை அதிபருடன் ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். ஐ.நா. சபைல கூடக் குரல் எழுப்பினோம். ஆனா, எதுவுமே முடியலையே…பெரும்பான்மை சிறுபான்மை அப்படிங்கற பிரச்னை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருக்காங்கங்கறதுக்காக மத்த 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம். இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன.?&lt;br /&gt;&lt;br /&gt;அதிருப்தி குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டுவரணும்.  ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராட்டத்துக்கான காரணங்களை சரி செஞ்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் நாங்க செஞ்சோம். இலங்கைல செய்யலை. &lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..? வட கிழக்கு மாநிலங்கள்ல ஏன் பிரச்னை இன்னும் தீரலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா  ரொம்பக் கஷ்டம் நண்பரே..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : எங்களுக்கும் உங்க மூலமா அந்த அனுபவம் இருக்கே… &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : என்னது இது இப்படி அபாண்டமா பழி போடறீங்க. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… கடைசி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் :  இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமான ஒன்றும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தரப்பட்டன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் என எத்தனையோ நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி இருக்கிறது. தெற்காசிய நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு துறையிலும் தமக்குள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான். மருத்துவத்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாடுகளிலும் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன... நம் நாட்டுக்கு என்னென்ன தேவை என்ற அளவில் இத்தகைய பரிமாற்றங்கள் நடப்பது இயல்புதான். ராணுவத் துறையிலும் அப்படியான பரஸ்பர உதவிகள் செய்து கொள்ளப்படுவதுண்டு. அதுவும் போக ஒரு நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும்போது உலக நாடுகள்  அதை அடக்க பரஸ்பரம் உதவிக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகைலதான் இலங்கை ராணுவத்துக்கு சில உதவிகள் செய்து தந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : ஆனால், ஆரம்பத்துல நீங்க போராட்டக் குழுக்களுக்குத்தான ஆதரவு கொடுத்தீங்க…?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கைப் போராளிகளுக்கு இந்தியா கொடுத்த பயிற்சி என்பது மிகவும் வேடிக்கையானது. பெரும்பாலும் நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகள்தான் வழங்கப்பட்டன. கொடுத்த பணமும் கூட யானைப் பசிக்கு சோளப்பொரி அளவுக்குத்தான் இருந்தது. அதுவும் போக அப்போது பிரச்னை இந்த அளவுக்கு வளரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்து தான் இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிடவே ஆரம்பித்தது. 1958ல கொழும்புல தமிழர்களுக்கு எதிரா பெரும் கலவரம் வெடித்தபோது நிறைய கப்பல்களை அனுப்பி அங்க இருந்த தமிழர்களை பத்திரமா யாழ்பாணத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தன் : இப்ப நாலாம் ஈழப் போர்ல சிக்கின மக்களை அப்படி ஏன் காப்பாத்த முயற்சி செய்யலை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7238384262018494394-8488202072032528447?l=brmahadevan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://brmahadevan.blogspot.com/feeds/8488202072032528447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/8488202072032528447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7238384262018494394/posts/default/8488202072032528447'/><link rel='alternate' type='text/html' href='http://brmahadevan.blogspot.com/2010/08/7.html' title='புத்தம் சரணம் கச்சாமி - 7'/><author><name>B.R. Mahadevan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/-lTe0gqE7SQg/Thw7kzwH-RI/AAAAAAAAAEQ/09iRdSxX7BQ/s220/blog%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7238384262018494394.post-7228601477209324347</id><published>2010-08-22T07:58:00.001-07:00</published><updated>2010-08-22T07:58:49.079-07:00</updated><title type='text'>புத்தம் சரணம் கச்சாமி-6</title><content type='html'>காட்சி - 13&lt;br /&gt;அந்த பிருமாண்ட மாளிகை சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. சில கொடிகள் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர். &lt;br /&gt;உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் உலக நாடுகளின் மினியேச்சர் வடிவம் தத்ரூபமாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு பகுதியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யுட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது. &lt;br /&gt;ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர். பிற பகுதியில் இருக்கும் மக்கள் மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர். கால் பந்து போட்டிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.&lt;br /&gt;ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதைமணலில் வீசுகிறார்கள்.&lt;br /&gt;காட்சி : 14&lt;br /&gt;அனந்தன் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு… கத்தியின்றி ரத்தமின்றி நவீன போர் முறையை உலகுக்குக் காட்டிய உத்தமர் காந்தி பிறந்த நாடு… பக்கத்து நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலும் நாடு… உங்களை ஏன் உயிருடன் கொளுத்தக்க்கூடாது? &lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம்னு ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு கொஞ்சகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மாதிரித்தான் இது. ஒரு மனுஷனோட தலை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்குது. கால் வேறொரு பக்கம் பார்த்துகிட்டு இருக்குது. தலை சொல்ற திசையில நடந்தா கால்ல அடிபடும். கால் போற திசையில போனா தலைல அடிபடும். இந்த விசித்திர மனுஷனோட பிரச்னைக்கு கோக்குமாக்கா இருக்கற அவனோட உடம்புதான் காரணமே ஒழிய பக்கத்துல நடந்து வர்றவன் எப்படி காரணமா இருக்க முடியும்? &lt;br /&gt;இலங்கை, இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை ஆரம்பத்துல இருந்தே சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தீங்களா… அதுக்குக் காரணம் என்ன… அஹிம்சை... பொறுமை…ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை அழிக்கறவனுக்கு ஒரு நாள் வேலை.&lt;br /&gt;அனந்தன் : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர்  ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே.  சிங்கள அரசு இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு உங்களோட ஆதரவுதான முக்கிய காரணமா இருந்திருக்கு.&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : ஒரு இறையாண்மை மிகுந்த நாடு, இன்னொரு இறையாண்மை மிகுந்த நாட்டின் விஷயத்தில் எவ்வளவு தலையிட முடியுமோ அவ்வளவு தலையிட்டிருக்கிறோம். இலங்கை அதிபருடன் ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். ஐ.நா. சபைல கூடக் குரல் எழுப்பினோம். ஆனா, எதுவுமே முடியலையே…பெரும்பான்மை சிறுபான்மை அப்படிங்கற பிரச்னை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும். &lt;br /&gt;சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை. &lt;br /&gt;அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருக்காங்கங்கறதுக்காக மத்த 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம். இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன.?&lt;br /&gt;அதிருப்தி குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டுவரணும்.  ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராட்டத்துக்கான காரணங்களை சரி செஞ்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் நாங்க செஞ்சோம். இலங்கைல செய்யலை. &lt;br /&gt;அனந்தன் : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..? வட கிழக்கு மாநிலங்கள்ல ஏன் பிரச்னை இன்னும் தீரலை.&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா  ரொம்பக் கஷ்டம் நண்பரே..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்.&lt;br /&gt;அனந்தன் : எங்களுக்கும் உங்க மூலமா அந்த அனுபவம் இருக்கே… &lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் : என்னது இது இப்படி அபாண்டமா பழி போடறீங்க. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.&lt;br /&gt;அனந்தன் : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… கடைசி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…&lt;br /&gt;இந்திய உள் துறை அமைச்சர் :  இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமான ஒன்றும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தர
